search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupied"

    கும்மிடிப்பூண்டி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் இறால் பண்ணை நடத்தி வந்தனர். அதனை தாசில்தார் தலைமையில் ஆன அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மெதிப்பாளையம் ஊராட்சியில் அரசு நிலத்தை  சிலர் ஆக்கிரமித்து இறால் பண்ணைகளை நடத்தி வந்தனர்.

    இதுகுறித்து வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகளை அகற்ற உத்திரவிட்டார்.

    இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ் பாபு தலைமையில், மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி, துணை தாசில்தார் தாமோதரன், வருவாய் அதிகாரி ரதி, ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து இயங்கி வந்த இறால் பண்ணைகளை அகற்ற வந்தனர்.

    அவர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் 3 இறால் பண்ணைகளை அகற்றினர். ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மாதவரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகர் கோவிலை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    மாதவரம்:

    மாதவரம் பால்பண்ணை கேகே தாழை சிவபாலன் 1-வது தெருவில் சாலையை ஆக்கிரமித்து 400 சதுர அடியில் விநாயகர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்கள் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதனை அகற்றக்கோரி ஒருவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த விநாயகர் கோவிலை அகற்ற நீதிமன்றம் சென்னை மாநகராட்சி மாதவரம் 3.வது மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் இன்று காலை மண்டல செயற்பொறியாளர் ராமமூர்த்தி உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், சதீஷ், கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலையை அகற்ற சென்றனர்.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மாதவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம் தலைமையில் பால்பண்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் மண்டல அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் விநாயகர் கோவிலை இடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் பால் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம், அரசு நிலம் 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

    அதாவது திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்ட அரசு நிலத்தில் 28 கட்டிடங்கள் கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3-ந் தேதிக்குள் அங்குள்ள கட்டிடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக சிறைத்துறை நிர்வாகம் அந்த இடத்தில் வேலி அமைத்து 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், மாணவிகள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த நிலத்தை எங்களுக்கே அளிக்க வேண்டும். அதற்கான அரசு நிர்ணயித்த தொகையை செலுத்த தயாராக உள்ளோம். திறந்தவெளி சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் அரசிடம் அணுகி பரிகாரம் தேடி கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு அளித்த காலக்கெடுவுக்குள் (அக்டோபர் 3-ந் தேதி) கட்டிடங்களை காலி செய்ய தஞ்சாவூர் தாசில்தார் சாஸ்திரா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    இதையடுத்து நோட்டீசு பெற்றுக்கொண்ட பல்கலைக் கழக நிர்வாகத்தினர், அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் விடுதிகளில் 2500 மாணவிகள் தங்கி படித்துள்ளனர். இதனால் தற்போது இடத்தை காலி செய்ய இயலவில்லை என்ற காரணத்தை தெரிவித்தனர். மேலும் மற்ற கட்டிடங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் திறந்தவெளி சிறையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு அந்த இடத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர்.

    இதனால் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SastraUniversity
    ×