என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்துள்ள கே.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் (வயது60). இவரும், அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் மகேந்திரன் (32) என்பவரும் நேற்று இரவு அப்பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

    அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னீர் அருகில் உள்ள மளிகை கடையில் வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து மகேந்திரனின் பைக்கில் ஊற்றி தீ வைத்தார்.

    இதனால் 2 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் கோபமடைந்த மகேந்திரன் கல்லை எடுத்து பன்னீர் தலையில் போட்டு கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் பன்னீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    • டிரைவர் ராமச்சந்திரன், கண்டக்டர் ராமலிங்கம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் இருந்த 15 பயணிகளை உடனே கீழே இறக்கி விட்டனர்.
    • தீ சிறிது அளவில் பற்றி எரிந்தபோது டிரைவர், கண்டக்டர் சமார்த்தியத்தால் 15 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    மத்தூர்,

    புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது. அந்த பஸ் ஊத்தங்கரை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எஞ்சின் பகுதியில் திடீரென்று புகை வந்தது. அப்போது மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது.

    அப்போது டிரைவர் ராமச்சந்திரன், கண்டக்டர் ராமலிங்கம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் இருந்த 15 பயணிகளை உடனே கீழே இறக்கி விட்டனர். உடனடியாக அவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித் தனர். தகவலறிந்த ஊத்தங் கரை தீயணைப்பு துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ சிறிது அளவில் பற்றி எரிந்தபோது டிரைவர், கண்டக்டர் சமார்த்தியத்தால் 15 பயணி களின் உயிர் காப்பாற் றப்பட்டது. அவர்களை பயணிகள் அனைவரும் பாராட்டினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் 2023ஆண்டிற்கான இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி வாயிலாக வருகிற செப்டம்பர் 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம். இது குறித்து மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • செல்போனில் டெலிகிராம் சமூக வலை தளத்தில் ஓட்டல்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது.
    • அதனை நம்பிய ரவிக்குமார் அந்த இ-மெயில் பகுதிநேர வேலைக்காக ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்காண்டப்பள்ளி கிராமம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (32). இவரது செல்போனில் டெலிகிராம் சமூக வலை தளத்தில் ஓட்டல்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்தது. அதனை பார்த்து அந்த லிங்கை கிளிக் செய்தபோது அதில் வந்த ஏஜெண்டின் இ-மெயில் ஐடி-யை தொடர்பு கொள்ளவும் என்று வந்தது.

    உடனே அதனை நம்பிய ரவிக்குமார் அந்த இ-மெயில் பகுதிநேர வேலைக்காக ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டார். அப்போது அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 179-யை ரவிக்குமார் செலுத்தினார். அதன்பிறகு அந்த ஏஜெண்டை தொடர்பு கொள்ளமுடியாததால், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ரவிக்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம்.
    • மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணகிரி,  

    பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அள வோடு பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    பூச்சி தாக்குதல் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள், மா, வாழை உள்ளிட்ட தோட்டக் கலை பயிர்களும் சாகுபடி செய்யப் படுகின்றன. பல்வேறு பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்க வாய்ப்பு உள்ளது.

    விவசாயிகள் பூச்சி களையும், நோய்களையும் கட்டுப் படுத்திட வேளாண்மை துறையால் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்துவதின் மூலம் ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம். மேற் குறிப்பிட்ட ஒருங்கி ணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை கடை பிடிக்காமல் தேவைக்கு அதிகமாக பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளை பயன் படுத்துவதின் மூலம் நாம் உண்ணும் உணவுகளிலும், மற்றும் கால்நடை தீவனங்களிலும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு நிர்ண யிக்கப்பட்ட நஞ்சு அளவை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

    இதன் மூலம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிற்காலங்களில் பூச்சி மற்றும நோய்களை கட்டுபடுத்த முடியாமல் மகசூல் இழப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர். எனவே உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவோடு பயன் படுத்திட வேண்டும். பூச்சி மருந்துகள் குறித்த தகவல் களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
    • விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.

    கிருஷ்ணகிரி,

    விதை விற்பனை யாளர்கள் தரமான விதை களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.

    பகுப்பாய்வு அறிக்கை பெறப்படாத விதைக் குவியல்களிலிருந்து பணிவிதை மாதிரிகள் எடுத்து ஒரு பணிவிதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப் பாய்வறிக்கையினை பெற்றிடுங்கள்.

    விதைக்குவியல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
    • ஆய்வின்போது உணவுகளில் கலர் பவுடர்கள் சேர்ப்பதை அறி வுறுத்தப்பட்டது.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, மற்றும் பெட்டிக்கடைகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு உத்தர வின்படி மாவட்ட நியமன அலுவலர் வெங்க டேசன் அறிவுறுத்தலின் பேரில்.மத்தூர் மற்றும் ஊத்தங்கரை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகேஸ்வரன் கல்லாவி ரோடு , பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி,பெட்டி கடைகளில் ஆய்வு செய்தார்.

    ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.ஆய்வின்போது உணவுகளில் கலர் பவுடர்கள் சேர்ப்பதை அறி வுறுத்தப்பட்டது. ஹோட்ட ல்களில் சுகாதார முறையில் சமைப்பதையும் அஜின மோட்டோ பயன்படுத்து வதை தவிர்ப்பதையும் எடுத்துரைக்கப்பட்டது.சங்கர் கேப் சாய் பவன் ஹோட்டல் ஆர் கே பேக்கரி கடைகள்சிங்காரவேலன் அகர்வால் கேரள பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தார்.

    • இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் கடந்த 24.07.2023 அன்று தொடங்கி வைத்தார்.
    • விண்ணப் பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலு வலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி தாலுகா கங்கலேரி ஊராட்சிகு உட்பட்ட தவளம் மற்றும் ஆலப்பட்டிகிராமங்களில் கலைஞர் மகளிர் உரி மைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களிடம் கள ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிர் உரிமை திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் கடந்த 24.07.2023 அன்று தொடங்கி வைத்தார்.

    விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப் பட்டது.கிருஷ்ணகிரி மாவட் டத்தில் முதற்கட்டமாக 584 ரேஷன் கடைகளில் இருக்கும்குடும்ப அட்டை களுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 74 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக 510 நியாயவிலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 05.08.2023 முதல் 16.08.202 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 859 விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.

    இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப் பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவை யேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப் படும். அப்போது விண்ணப் பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலு வலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் ரமாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துராமன், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார்.
    • கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார் கள்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ஓணம் பண்டி கையை சிறப்பாக கொண்டாடி னார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டா டினார்கள். மேலும் வீடுகளை மலர்களால் அலங்கரித்திருந்தனர்.

    கலெக்டர் முகாம் அலுவ லகம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆவார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.  வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார். இதையொட்டி கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார்கள்.

    இதே போல ஓசூர், கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்க கூடிய கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டா டினார்கள். இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.

    • அண்மைக் காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரேஷன் அரிசி, கஞ்சா கடத்தல் அதிகரித்து உள்ளது.
    • பழுதான உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளதோடு, கம்பத்தில், முறையாக பொருத்தப்படாமல் அதிவேகமாக காற்று வீசி னால் மின் விளக்கு கீழே விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது.

    வேப்பனப்பள்ளி,  

    கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் வேப்பனப் பள்ளி உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தோட்டக் கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவல கங்கள் உள்ளன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அனைத்து தேவைக்கும் வேப்பனப் பள்ளிக்கு வந்து செல்கின்ற னர்.

    இதே போல, ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கிராம மக்களும் தங்கள் தேவைக்கு வேப்ப னப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதனால், காலை முதல் இரவு வரை வேப்பனப் பள்ளியில் மக்கள் நடமாட்ட மும், வாகனங்களின் நெரி சலும் இருக்கும். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வேப்பனப்பள்ளி-பேரிகை சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப் பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஓரிரு மாதங்களில் பழுதானது.

    இதே போல, வேப்பனப் பள்ளி நகரில் குற்ற சம்பவங் களைக் கண்காணித்து தடுக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு காவல்துறை சார்பில் கண்காணிப்புக் கேமராக்கள் முக்கிய சாலைகளில் பொருத்தப் பட்டது. இக்கேமராக்கள் போதிய பராமரிப்பு இன்றி பயன்பாடு இல்லாத நிலை யில் உள்ளது. இதனால், இரு மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இது தொடர்பாக வேப்பனப் பள்ளியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில் பழுதான உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளதோடு, கம்பத்தில், முறையாக பொருத்தப்படாமல் அதிவேகமாக காற்று வீசி னால் மின் விளக்கு கீழே விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. இவ்வழியாக ஆந்திர, கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்படு கின்றன.

    இதைத் தடுக்கவும், நகரில் நகை பறிப்பு, விபத்து மற்றும் விதிகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்ட கண் காணிப்புக் கேமராவும் பயன்பாட்டில் இல்லை. இதனால், அண்மைக் காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரேஷன் அரிசி, கஞ்சா கடத்தல் அதிகரித்து உள்ளது.

    எனவே, பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேரிகை சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கைச் சீர் செய்யவும், குற்றங்களைத் தடுக்க நகரப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களைச் சீர் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.65 முதல் ரூ.78 வரை ஏலம் போனது.
    • சுமார் 15 டன் கொப்பரை தேங்காய்கள் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆனது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சுந்தரம் உத்தரவின் பேரில் பொது மேலாளர் முருகன் தலைமையில் விற்பனை சங்கத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.65 முதல் ரூ.78 வரை ஏலம் போனது. இதில் சுமார் 15 டன் கொப்பரை தேங்காய்கள் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆனது.

    இதில் விவசாயிகளுக்கு விற்பனை சங்கத்தின் மூலம் உடனடியாக பணம் பட்டு வாடா செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்த விவசாயிகள் நல்ல விலைக்கு போனதாக மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • இதில் 14,16,18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • ராஜ் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் 9.75 மீட்டர் தூரத்தில் எறிந்து முதலிடம் பிடித்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    2023 சாம்பியன்ஷிப் தேர்வு செய்வதற்கு மாவட்ட அளவிலானதடகள போட்டிகள், ஓசூர் அருகே மதகொண்டபள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் 14,16,18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஓசூர் பேடரபள்ளியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியிலிருந்து 14 வயதுக்குட்பட்ட 3 மாணவர்களும், 3 மாணவியரும் கலந்து கொண்டனர். அதில், ராஜ் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் 9.75 மீட்டர் தூரத்தில் எறிந்து முதலிடம் பிடித்தார்.

    மேலும், சுபிக்க்ஷா என்ற மாணவி உயரம் தாண்டு தலில், இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து, நேற்று பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் நாகேஷ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாநகராட்சி கவுன்சிலர் ரஜினி காந்த், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி மஞ்சுளா, துணைத் தலைவர் ரவி, பள்ளி உடற்கல்வி ஆசிரியை கலையரசி ஆகி யோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர்.

    மேலும், குண்டு எறித லில் முதலிடம் பிடித்த மாணவர் ராஜ், மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

    ×