search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை  விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்
    X

    விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்

    • விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
    • விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.

    கிருஷ்ணகிரி,

    விதை விற்பனை யாளர்கள் தரமான விதை களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.

    பகுப்பாய்வு அறிக்கை பெறப்படாத விதைக் குவியல்களிலிருந்து பணிவிதை மாதிரிகள் எடுத்து ஒரு பணிவிதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப் பாய்வறிக்கையினை பெற்றிடுங்கள்.

    விதைக்குவியல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×