search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக இளைஞர் திருவிழாவையொட்டி   கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி
    X

    உலக இளைஞர் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி

    • கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், உலக இளைஞர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், மாரத் தான் போட்டி தொடங்கியது. இதை உதவி கலெக்டர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உலக இளைஞர் திருவிழா 2023-24-ஐ கொண்டாடும் விதமாக திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடடு அலகின் சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தான் போட்டி 5 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    17 வயது முதல் 25 வயது வரை உள்ள கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காத்தான்பள்ளம் கொன்சாகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் புனித வளனார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ் ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாரத்தான் போட்டி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி லண்டன்பேட்டை, தாலுகா அலுவலகம் வழியாக கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா வரை சென்று, மீண்டும் அதே வழியில் வனச்சரக அலுவலகம் வழியாக வந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இந்த போட்டியின் மூலம் போதை பொருள் தடுப்பையும், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு சென்றடைய செய்யவும், இளைஞர் மத்தியில் பாதுகாப்பையும், பாலியல் ரீதியான சமூக பொறுப்பையும் ஊக்கப் படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் - பாலியல் நோய்களுக்கான சிகிச்சைக்கான வழிமுறை தெரியப்படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அருள், தாசில்தார் சம்பத், செஞ்சிலுவை சங்க செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×