என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
- ஆண்டுகால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதை யும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராதா, காந்திமதி, மாவட்ட இணைச் செயலாளர்கள் லட்சுமி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் கல்யா ணசுந்தரம், தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்டத் தலைவர் சரவணன், நகராட்சி மாநகராட்சி சங்க துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் மஞ்சுளா நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.
ஆர்ப்பா ட்டத்தில், 40 ஆண்டுகால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதையும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதையும் தடுத்து நிறுத்தக் கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்கக்கோரியும், காலிப்பணியிடங்ளை நிரப்பிடவும், தேர்தல்கால வாக்குறுதியை நிறை வேற்றிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி னார்கள்.






