என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது.
    • தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும்

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியில் உள்ள தரைப்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரு- பாண்டிச்சேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த தரைப் பாலத்தில் தண்ணீா் வெளியேறும் பாதை அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு மழைநீா் தேங்கியது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள கெரிகேப்பள்ளி தரைப்பாலம் வழியாக சுமாா் 10 கிலோ மீட்டா் சுற்றிச் சென்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சாலையைக் கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினா். பெங்களூரில் இருந்து புது வைக்கு செல்லும் பிரதான வழித்தடம் என்பதால் பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றன.

    தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது. தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • பின்னர் வந்து பார்த்த போது கடையில் சீட்டு பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத் துள்ள செல்லம்பட்டி பகுதி யை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). இவர் அப்பகுதி யில் மளிகை கடை நடத்தி வந்தார். இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது கடையில் சீட்டு பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து மதியழகன் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்து வந்தது.
    • மனமுடைந்து காணப்பட்ட தனபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,   

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது38). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கடன் பிரச்சனை அதி கமாக இருந்து வந்தது.

    இதனால் சம்பவத்தன்று மனமுடைந்து காணப்பட்ட தனபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
    • விரக்தி யடைந்து காணப்பட்ட விக்ரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சின்னகொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விக்ரம் (வயது17). இவர் கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறி வியல் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந் நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இதனால் விரக்தி யடைந்து காணப்பட்ட விக்ரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொ டங்கி வைத்தார்.
    • ஓசூர் தாசில்தார் சுப்ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. .பி.முருகன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற த்தொகு திக்குட்பட்ட ஓசூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில், பூனப்பள்ளி, மத்திகிரி ஆகிய இடங்களில் நெடுஞ்சா லைத்துறை சார்பாக ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொ டங்கி வைத்தார்.

    ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர்.முன்னிலை வகித்தனர். மேலும் இதில், ஓசூர் சப்- கலெக்டர் ஆர்.சரண்யா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், ஓசூர் மாநக ராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா,ஓசூர் தாசில்தார் சுப்ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. .பி.முருகன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனமுடைந்து காணப்பட்ட லோகித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லூர் அருகே உள்ள கரியசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவ ரது மகன் லோகித் (வயது14). இவர் பாலக்கோடு அருகே செல்லியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் விடுதியில் தங்கி, 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 10-ந் தேதி கோவில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்தார். திருவிழா முடிந்த பின்னர் லோகித்தை பள்ளி செல்ல அவரது தந்தை வற்புறுத் தியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட லோகித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். 

    • இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
    • சாக்கடை கால்வாயை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,  

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள காசிக்காரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியன் (வயது40). மேஸ்திரி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது சாப்பிட்ட மதியன் ஓசூர் அருகே உள்ள மீனாட்சி லேஅவுட்டில் சாக்கடை கால்வாயை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த ஜே.சி.பி. வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (34).இவர் ஓசூரில் தங்கி ஓட்ட லில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மத்திகிரி பஸ் ஸ்டான்ட் அருகே இருசக்கர வாகனத்தில் ஈஸ்வரி சென்றார்.

    அப்போது பின்னால் வந்த ஜே.சி.பி. வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், உலக இளைஞர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், மாரத் தான் போட்டி தொடங்கியது. இதை உதவி கலெக்டர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உலக இளைஞர் திருவிழா 2023-24-ஐ கொண்டாடும் விதமாக திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடடு அலகின் சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தான் போட்டி 5 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்டது.

    17 வயது முதல் 25 வயது வரை உள்ள கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காத்தான்பள்ளம் கொன்சாகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் புனித வளனார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ் ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாரத்தான் போட்டி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி லண்டன்பேட்டை, தாலுகா அலுவலகம் வழியாக கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா வரை சென்று, மீண்டும் அதே வழியில் வனச்சரக அலுவலகம் வழியாக வந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இந்த போட்டியின் மூலம் போதை பொருள் தடுப்பையும், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு சென்றடைய செய்யவும், இளைஞர் மத்தியில் பாதுகாப்பையும், பாலியல் ரீதியான சமூக பொறுப்பையும் ஊக்கப் படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் - பாலியல் நோய்களுக்கான சிகிச்சைக்கான வழிமுறை தெரியப்படுத்தவும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த அடிப்படை உண்மையை அதிகமாக தெரிந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அருள், தாசில்தார் சம்பத், செஞ்சிலுவை சங்க செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள், ரெட் கிராஸ் அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
    • ஆண்டுகால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதை யும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராதா, காந்திமதி, மாவட்ட இணைச் செயலாளர்கள் லட்சுமி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் கல்யா ணசுந்தரம், தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்டத் தலைவர் சரவணன், நகராட்சி மாநகராட்சி சங்க துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் மஞ்சுளா நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.

    ஆர்ப்பா ட்டத்தில், 40 ஆண்டுகால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதையும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதையும் தடுத்து நிறுத்தக் கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்கக்கோரியும், காலிப்பணியிடங்ளை நிரப்பிடவும், தேர்தல்கால வாக்குறுதியை நிறை வேற்றிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி னார்கள்.

    • லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
    • ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளை சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் லாட்டரி விற்றதாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெல மங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளை சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்தனர். 

    அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் மற்றும், ரூ.4,500 பணம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • பேருந்து ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.
    • விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    மத்தூர்:

    பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இந்த பேருந்து நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்தார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுனர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

    இதில் காயமடைந்த மல்லிகா (வயது57), இசைவாணி (33), வேலு (42), பேருந்து ஓட்டுனர் குப்புசாமி (46), மாயவன் (42) ஆகிய 5 பேரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×