என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜே.சி.பி மோதி பெண் சாவு
- பின்னால் வந்த ஜே.சி.பி. வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (34).இவர் ஓசூரில் தங்கி ஓட்ட லில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மத்திகிரி பஸ் ஸ்டான்ட் அருகே இருசக்கர வாகனத்தில் ஈஸ்வரி சென்றார்.
அப்போது பின்னால் வந்த ஜே.சி.பி. வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






