என் மலர்
கன்னியாகுமரி
- நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று வரு கின்றனர்.
- சுற்றுச்சுவரை கட்டி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணியல் :
சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்பேத்கர் காலனி, இந்திரா காலனி மற்றும் சுங்கான் கடை சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்று வரு கின்றனர்.
இந்த நிலையில் சாலை யோரம் நின்ற மரம் மழையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. குறிப்பிட்ட ஒரு வளைவு பகுதியில் இந்த மரம் சரிந்து விழுந்ததால் கன மழையில் சாலை அரித்துச்செல்லப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை சுற்றுச்சுவரை கட்டி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
- காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் முழு வதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக் கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு அதி கரித்து வருவதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் ஒருவ ருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் காய்ச்சல் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டுமின்றி சளி தொல்லை யாலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பர வலை தடுக்க ஏற்கனவே மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. மாவட்டத் தில் உள்ள 9 ஒன்றியங்களில் தலா 3 இடங்களிலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 இடங்களிலும் மருத்துவ முகாம்கள் இன்று நடந்தது.
நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட குன்னு விளை, குளத்தூர், நீராளி குளம், ஏ.ஆர்.கேம்ப் பகுதி யில் உள்ள நகர்ப்புற நல் வாழ்வு மையத்தில் நடந்த மருத்துவ முகாமில் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம் நடைபெற்ற பகுதி களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
மேலும் காய்ச்சல் அறிகு றியுடன் வந்தவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது. டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.
சளி மற்றும் காய்ச்சல் தொல்லையால் குழந்தை கள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு வருகி றார்கள். மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே சராசரி யாக தினமும் 35 பேர் பாதிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 45 ஆக அதிக ரித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். சுய மருந்து உட்கொள்ளக் கூடாது. காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்கள் உடனடியாக பக்கத் தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகள் அல்லது தனியார் ஆஸ்பத்திரி களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.
- முதல் கட்ட பணிகள் தொடங்கியது
- நேற்று காலை 10 மணிக்கு பாலாலயம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி :
சாமிதோப்பு அருகே உள்ள உப்பளத்தின் நடுப்பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அளத்து பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மின்சார வசதிகள் இன்றி இருந்த கோவிலை மின்சார வசதிகள் ஏற்படுத்தி கோவிலை புனரமைக்க வேண்டும் என்று வடக்கு தாமரைகுளம் பண்ணையார் சமுதாய பொதுமக்கள் மற்றும் கோவிலை சுற்றி உள்ள வட்டார ஊர் பொதுமக்கள் தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் அந்த கோரிக்கையை அவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அளத்து பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி அலங்கார விளக்குகள் அமைத்து கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கோவிலுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் தொடங்க நேற்று காலை 10 மணிக்கு பாலாலயம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்க்கும் அலுவலர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரை பாரதி, இந்து சமய அறநிலையத்துறை நாகர்கோவில் தொகுதி ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலாலயம் பூஜையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் அளத்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காரியம் ஸ்ரீ ராமச்சந்திரன் செய்து இருந்தார்.
- பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாமில் குவிந்த இளம் வாக்காளர்கள்
- 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளன.
நாகர்கோவில் :
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந்தேதி வெளியிடப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 37,405 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும் 143 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர்.
பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் 1.1.2024 தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பக் கூடியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக இன்று (சனிக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 640 மையங்களிலும் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இளம் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது பெயர்களை பதிவு செய்த னர். பெண் வாக்காளர்களும் அதிகமானோர் வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கும் ஒரு சிலர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர்களை, அரசியல் கட்சியினர் பலர் அழைத்து வந்திருந்தனர். 18 வயது நிரம்பிய பெண்கள் தங்களது பெற்றோருடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) யும், வருகிற 18 மற்றும் 19 -ந் தேதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. இன்று மாவட்ட முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததையடுத்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மயிலாடி பகுதியில் நேற்று இரவு கொட்டிய மழை இன்று காலை வரை நீடித்தது. அங்கு அதிகபட்சமாக 64.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சுருளோடு, தக்கலை, குளச்சல், ஆரல்வாய்மொழி, கோழிபோர்விளை, கன்னிமார், கொட்டாரம், முள்ளங் கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவிப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வரும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
மழை நீடிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீரை திறக்கவும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்பு ஏற்பட்டால் கரையோர பகுதி மக்கள் தங்க வைக்கும் வகையில் பள்ளிக்கூடங்கள் சமுதாய நலக்கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து வைத்துள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.50 அடியாக இருந்தது. அணைக்கு 418 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 174 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.78 அடியாக உள்ளது. அணைக்கு 539 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள 1500-க்கு மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி வழிகிறது.
பாசன குளங்களிலும், அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஏற்கனவே பல்வேறு இடங்களில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் நடவு பணி நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், பூதப்பாண்டி, தக்கலை பகுதிகளில் விவசாயிகள் நடவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே நடவு செய்யப்பட்ட பகுதிகளில் உரம் மிடுதல் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். தொடர் மழையினால் தடிகாரகோணம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 2.2, பெருஞ்சாணி 36, சிற்றாறு 1-4, சிற்றாறு 2-16.6, பூதப்பாண்டி 7.2, களியல் 30.4, கன்னிமார் 8.2, கொட்டாரம் 22.2, குழித்துறை 30, மயிலாடி 64.2, நாகர்கோவில் 10.2, புத்தன் அணை 29.8, சுருளோடு 39.4, தக்கலை 19.2, குளச்சல் 22.6, இரணியல் 42, பாலமோர் 41.6, மாம்பழத்துறையாறு 16, திற்பரப்பு 30.5, ஆரல் வாய்மொழி 3.1, கோழிப்போர்விளை 35, அடையாமடை 4.2, குருந்தன்கோடு 7.2, முள்ளங்கினாவிளை 52.6, ஆணைக்கிடங்கு 15.2, முக்கடல் 17.
- ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள மாணவ -மாணவிகளின் தங்கும் விடுதிகளுக்கு தமிழக அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது
- மத்திய அரசால் வழங்கப்படும் நிதி குறைவாகவும், தாமதமாகவும் வருகிறது.
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உள்ள மாணவ -மாணவிகளின் தங்கும் விடுதிகளுக்கு தமிழக அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய அரசால் வழங்கப்படும் நிதி குறைவாகவும், தாமதமாகவும் வருகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை யின் கீழ் இயங்கும் பள்ளி களை பள்ளிக்கல்வி துறை யில் இணைக்கும் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் ஏராளமான ஆதிதிராவிடர் நலத்துறை தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் புதிய 9 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நாகர்கோவிலில் நிருபர்களிடம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறி யதாவது:-
கல்வியின் மூலமாகத்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறோம். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு விடுதிகளில் மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவு கட்டணத்தை அதிகப்படுத்தி கொடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1400, கல்லூரி மாணவர்க ளுக்கு ரூ.1500 என அதிகப்ப டுத்தப்பட்டுள்ளது. விடுதிகள் பராமரிப்பு தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து இந்த ஆண்டு முதல் ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளை பொறுத்தமட்டில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகிறோம்.
இப்போதைய காலகட்டத் தில் விடுதி மாணவர்கள் குறைந்து வருகிறார்கள். இதற்கு காரணம் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தான் மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பது குறைந்துள்ளது. குறைவாக பள்ளி மாணவர்கள் தங்கி இருக்கும்விடுதிகளை கல்லூரி மாணவர்கள் விடுதியாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
9 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்பட உள்ளது. சேதமடைந்த விடுதி கள் சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. விடுதியில் உள்ள உணவு மெனுக்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆலோ சனை நடத்தி வருகிறோம். அதன்பிறகு மெனுக்களின் மாற்றம் கொண்டு வரப்படும். பொங்கல், உப்புமாவுக்கு பதிலாக வேறு ஏதாவது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். காய்கறிகள் அதிகமாக இருக்குமாறு விடுதிகளில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில்ரூ.44 கோடி செலவில் 10 மாடி யில் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலை மனதில் வைத்து தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீட் விலக்கு நமது இலக்கு என்று கையெழுத்து இயக்கம்.
- சிவராஜ சேகரன், டில்லிபாபு, அடையாறு துரை, ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கையெழுத்திட்டனர்.
நீட் விலக்கு நமது இலக்கு என்று கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்காக இன்று சத்தியமூர்த்தி பவன் சென்றார்.
அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்றார். அதை தொடர்ந்து கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டனர். இதில் முன்னாள் மாநில தலைவர்கள் கிருஷ்ணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தங்கபாலு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் அசன்மவுலானா, துரை சந்திரசேகர், அரசு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், அகரம் கோபி, மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், சிவராஜ சேகரன், டில்லிபாபு, அடையாறு துரை, ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கையெழுத்திட்டனர்.
- தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க,
- விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி
நாகர்கோவில் : குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஒழுகினசேரியில் அமைந் துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் எனது தலைமையில் நடக்கிறது. நாகர்கோவில் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இளைஞர் மாநில துணை செயலாளர்கள் இன்பாரகு, ஜோயல், அப்துல் மாலிக், இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ராஜா, பிரபு கஜேந்திரன், ஆனந்தகுமார் ஆகிய துணை செயலாளர்கள் இளைஞரணி பொறுப்பு களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலை நடத்துகிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான வயது சான்றிதழுடன் கலந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் செய்து வருகிறார்.
எனவே நேர்காணலுக்கு விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- களியல் பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.36 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவும் விட்டுவிட்டு கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
களியல் பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பூதப்பாண்டி, கொட்டாரம், குழித்துறை, மயிலாடி, சுருளோடு, தக்கலை, குளச்சல், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.36 அடியாக இருந்தது. அணைக்கு 467 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. அணைக்கு 424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. ஏற்கனவே தொடர் மழைக்கு 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளது. விளவங்கோடு, திருவட்டார் தாலுகாவில் தலா 2 வீடுகளும், கிள்ளியூரில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 21.8, சிற்றார் 1-4.8, சிற்றார் 2-42.2, பூதப்பாண்டி 10.6, களியல் 60, கன்னிமார் 4.2, கொட்டாரம் 14, குழித்துறை 8.4, மயிலாடி 10.4, நாகர்கோவில் 15.4, புத்தன் அணை 19.2, சுருளோடு 10, தக்கலை 6, குளச்சல் 11.6, இரணியல் 23, பாலமோர் 12.4, மாம்பழத்துறையாறு 10.6, ஆரல்வாய்மொழி 8.4, கோழிப்போர்விளை 17.5, அடையாமடை 19.3, முள்ளங்கினாவிளை 5.2, ஆணைக்கிடங்கு 9.2.
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது.
- நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்
நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த், பழங்குடியினர் இயக்குனர் அண்ணாதுரை, வன அதிகாரி இளையராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கனகராஜ், தாசில்தார் கோலப்பன், மாவட்ட திட்ட அதிகாரி பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். மேலும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்க்க மானியத்துடன் கூடிய கடனுதவி 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சமும், தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 59 வழங்கப்பட்டது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித்தொகையாக 2 பேருக்கு ரூ.6¼ லட்சமும், பழங்குடியினர் நல வாரியத்தில் ஈமச்சடங்கு உதவி தொகையாக ஒருவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் பொன்மனை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 16 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டையையும், இரணியல் பேரூராட்சியில் 9 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டையும், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
கேலிச்சித்திரம் வரைதல் போட்டியில் மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற பத்துகாணி அரசு பழங்குடி யினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவி அகல்யா பிரசாத்திற்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. திருமங்கலத்தில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டென்னிஸ் பந்து போட்டி யில் முதலிடம் பெற்ற பேச்சிப்பாறை பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு சுழல் கோப்பையை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் வழங்கி கவுரவித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், எந்த ஒரு சாமானிய மக்களும், எந்த ஒரு அடையாளத்தின் அடிப்படையிலும் அவர்கள் புறந்தள்ளி விடக்கூடாது. அனைவரையும் ஒன்றிணை. அதாவது சமூக ரீதியாக யாரையும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் வள்ளலாக வாரி வழங்கி வருகிறார். பின்தங்கிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார்.அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலத்துறையின் திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களின் கல்வி, பொருளாதாரத்தை முன்னேற்ற செய்வதே இந்த துறையின் நோக்கமாகும். இளைஞர்கள் சுய வேலை தொடங்குவதற்கு தாட்கோ மூலமாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. அரசு பொறுப் பேற்றவுடன் பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்க மாநில ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மனித நேயமிக்க துறையாக இந்த துறை விளங்கி வருகிறது.மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஆய்வு செய்து அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார்.
முன்னதாக தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று காலை கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் "திடீர்" ஆய்வுகொண்டார். அங்குள்ள சமையலறை மற்றும் விடுதி அறைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த விடுதி வளாகத்தில் மரக்கன்று களையும் அமைச்சர் கயல் விழி செல்வராஜ் நட்டார்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்குகிறார்
- ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.
மார்த்தாண்டம்:
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த கால்பந்து போட்டிகள் நாளை (4-ந்தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் கால்பந்து போட்டிகளை தொடங்கி வைக்கிறார். மாலையில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெறும் விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பா ளர்கள், விளை யாட்டு அலுவலர்கள், ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்தாட்ட போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.
- குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
- ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.
இரணியல்:
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோசர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், முருகன், ரமணிரோஸ், ஏசு ரெத்தினராஜ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நலிந்த கழக மூத்த முன்னோடிகள் 24 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கிய கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாற்றுதல் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மற்றும் அதிக அளவில் கலந்து சிறப்பித்த இளைஞர்களுக்கும், ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 104 வாக்கு சாவடி மையங்களிலும் கழகத்தால் நியமிக்க பட்டிருக்கும் வாக்குச்சாவடி பாக முகவர்கள் பி.எல்.ஏ.-2, வாக்குச்சாவடிபாக முகவர்கள் குழு உறுப்பினர்கள் பி.எல்.சி., ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி பொறு ப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் முழு அளவில் பணியாற்றி அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்க ளை வாக்காளர்க ளாக சேர்க்கும் பணிகளில் முழு மூச்சாக ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.






