search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் நகரில் தீபாவளி விற்பனை களை கட்டியது
    X

    நாகர்கோவில் நகரில் தீபாவளி விற்பனை களை கட்டியது

    • வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டா டப்படும். தீபாவளி பண்டி கைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாவட் டத்தில் உள்ள கடை வீதி களில் இன்று கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களாக காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதை யடுத்து கடை வீதிகளுக்கு காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் இருசக்கர வாக னங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் குடும்பத் தோடு கடை வீதிக்கு வந்தி ருந்தனர். இதனால் நாகர்கோ வில் செம்மங்குடி ரோட்டில் கூட்டம் அலை மோதியது. ஜவுளிக்கடை களில் தீபாவளி பண்டிகை யையொட்டி புத்தாடைகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை அதை எடுத்து மகிழ்ந்தனர். மீனாட்சிபுரம் சாலை, கலெக் டர் அலுவலக சாலை, செட்டிகுளம், வட சேரி, வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் தீபாவளி பண்டிகையை யொட்டி பேக்கரிகளில் பல்வேறு விதமான இனிப்பு வகைகளும் தயார் செய்து வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளிலும் இன்று கூட் டம் அதிகமாக இருந்தது. பல்வேறு விதமான பட்டாசு கள் விற்பனைக்கு வந்துள் ளது. பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான பட்டாசு களை ஆர்வமாக வாங்கி சென்றனர். ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், பேக்கரிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    கோட்டார், செட்டிகுளம், வடசேரி பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அண்ணா பஸ் நிலையம், வட சேரி பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட் டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் உத்தர வின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மப்டி உடை யில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சந்தேகப்ப டும்படி யாக நபர்கள் யாராவது சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கு மாறும் ஒலி பொருக்கி மூலமாக அறி விப்புகள் வெளியிடப்பட் டது. அஞ்சுகிராமம், கன்னி யாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று ஜவுளி கள் எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    அண்ணா பஸ் நிலையம், வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×