search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    • மெயின் ரோட்டை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை

    தக்கலை :

    தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவர் இன்று காலை டீ குடிக்க தக்கலை பனவிளை அருகில் உள்ள டீ கடைக்கு சென்று விட்டு திரும்பினார். மெயின் ரோட்டை கடக்கும் போது தக்கலையில் இருந்து அழகியமண்டபம் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர் பரிசோதனை செய்து விட்டு தேவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது சம்மந்தமாக இவரது மகன் ஏவின் ராஜா ஷாஜி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×