search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
    X

    சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

    • நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
    • 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.

    நாகர்கோவில், நவ.5-

    தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவி லான கருத்தரங்கு நடை பெற்றது. தாளாளர் எபநேசர் ஜோசப் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக இஸ்ரோ சிறப்பு விஞ்ஞானி டாபினி மனோஜா கலந்து கொண்டு கணினி பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

    விழாவில் கல்லூரி முதல் வர் ஸ்பென்சர் பிரதாப் சிங், கணினி பொறியியல் துறை தலைவர் ஹாரியட் லிண்டா மற்றும் பலர் கலந்துகொண்ட னர். சுமார் 15 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.

    விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஷெர்லி கனக பிரியா, துணை ஒருங்கிணைப்பாளர் மகிபா, மாணவர் பிரதிநிதி மெல்வின் சேம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×