search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவபிரசன்னத்தில் கூறியது போன்று பகவதி அம்மன் கோவிலில் தினமும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு
    X

    தேவபிரசன்னத்தில் கூறியது போன்று பகவதி அம்மன் கோவிலில் தினமும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    • நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக நெய் தீபம் விளக்கு ஏற்றி வழி பாடு நடத்த வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜ கோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்த்த போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள அம்மனின் விக்ரகம் முன்பு தினமும் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக நெய் தீபம் விளக்கு ஏற்றி வழி பாடு நடத்த வேண்டும் என்றும் அருள்வாக்கு கூறப்பட்டது.

    அதன்படி மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள அம்மனின் விக்ரகம் முன்பு தினமும் நெய் தீப விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தும் முறை தொடங்கப் பட்டுள்ளது. இதனை குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×