என் மலர்
கன்னியாகுமரி
- தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது.
- சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது.
தக்கலை, நவ.24-
தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. கன மழையின் காரணமாக உதயகிரி கோட்டை பகுதி யில் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது. மேலும் மான்கள் நின்று கொண்டிருக்கும் பகுதி யிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு நின்ற மான்கள் கடும் அவதிக்கு ஆளானது. சிறுவர் பூங்காவிலும் தண்ணீர் புகுந்து சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் அந்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. மான்களில் நின்று கொண்டிருக்கும் பகுதியில் இருந்து தண்ணீர் மட்டும் சிறிது வடிந்துள்ளது. ஆனால் அந்த பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சிறுவர் பூங்கா மற்றும் செல்பி பாயிண்ட் பகுதியில் தண்ணீர் வடியாத நிலை யிலேயே இருந்து வருகிறது. இன்று காலையில் உதயகிரி கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
ஆனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். உதயகிரி கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே உடனடியாக உதயகிரி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மாற்ற நடவ டிக்கை எடுப்பதுடன் நிரந்தரமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண் ணம் வடிகால்களை அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
- நாளை மறுநாள் ஏற்றப்படுகிறது
- கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை மறுநாள் (26-ந்தேதி) மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி அங்கு ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் விடியவிடிய எரிந்து கொண்டே இருக்கும். கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.
- கலெக்டரிடம் புகார்
- 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் கீழ்குளம் ஆனான் விளையை சேர்ந்தவர் ரெங்கபாய் (வயது 70). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை என் சகோதரிக்கு சொந்தமான நிலத்தை எனக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். தற்போது 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
இதுதொடர்பாக நில அபகரிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிலத்தை வேறொரு நபர் பெயரில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னிடம் வெட்டுகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடக்கிறது
- தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், தக்கலை தலைமை தபால் நிலையம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, அருமனை, ஆசாரிபள்ளம், அழகியபாண்டியபுரம், அழகப்பபுரம், பூதப்பாண்டி, குளச்சல், ஈத்தாமொழி, இடைக்கோடு, களியக்காவிளை, கன்னியாகுமரி, காப்புக்காடு, கருங்கல், காட்டாத்துறை, கொல்லங் கோடு, கோட்டார், கொட்டாரம், குலசேகரம், குழித்துறை, மணவா ளக்குறிச்சி, மார்த் தாண்டம், மேக்காமண்டபம், முளகுமூடு, நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதி, நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நெய்யூர், பாலப்பள்ளம், பளுகல், புதுக்கடை, புத்தளம், எஸ்.டி.மாங்காடு, சுசீந்திரம், திக்கணங்கோடு, திருவிதாங் கோடு, வெட்டூர்ணிமடம், வடிவீஸ்வரம் உள்ளிட்ட 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
காலை முதல் மாலை வரை இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவை தொடர்பான ஏதேனும் புகார்களுக்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், 04652-232032, 232033 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழித்துறை அரசு ஆஸ்பத்திரியையும் பார்வையிட்டார்
- பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொறுப்பு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவி னர் நாகர்கோவில், மார்த் தாண்டம் ஸ்கேன் மையங் கள், குழித்துறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங் களில் ஆய்வு செய்தனர். இதில் ஸ்கேன் மையங்களுக்கான லைசென்சு நகல் ஸ்கேன் மைய நுழைவிடத் தில் பார்வையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முதல் தளத்தில் ஸ்கேன் அறையின் அருகேயே நோயாளிகளுக்கான கழிவறை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டது. 'படிவம் எப்' முறையாக பராமரிக்கப்பட வேண்டும் ஸ்கேன் மையத் தில் இடவசதி குறைவாக இருப்பதால் தக்க நடவ டிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்க வேண் டும் என்று அதன் பணியா ளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொது கழிவுநீர் வெளியேற்ற பொதுப்பணித் துறை மற்றும் குழித்துறை நகராட்சிக்கு தக்க அறிவுரை கூறுவதாக கலெக்டர் உறுதி அளித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றின் எண்ணிக் கையை உயர்த்த வலியுறுத்தி னார்.
பின்னர் அங்கு அனைத்து மருத்துவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆஸ்பத்திரியின் செயல்பாடு களை முன்னேற்றவும், அனைத்து ஸ்கேன்களையும் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தினார். பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
- காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51). இவர் குமாரபுரம் சந்திப்பில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பிரபாகர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தார். அப்போது ஆவரை குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), ராபர்ட் (40) ஆகிய இருவரும் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது பிரபாகரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ரவிக்குமார், ராபர்ட் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில் பிரபாகர் கடையை பூட்டிவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம்- கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரவிக்குமார், ராபர்ட் இருவரும் பிரபாகர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் அவரிடம் தகராறு செய்ததுடன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து கீழே தள்ளியதுடன் பிரபாகரை கையால் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பிரபாகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294(பி), 329, 506(2) ஐ.பி.சி. ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிக்குமார் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் பாசன குளங்களின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். தக்கலை, மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, சிற்றாறு பகுதிகளில் நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்யத்தொடங்கியது.
இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். தக்கலை, திருவட்டார், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
4 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வள்ளியாறு, பரளியாறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆறுகளிலும், சானல்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களை சூழ்ந்தது. திக்குறிச்சி பகுதியில் விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வாழை, மரவள்ளி கிழங்கு, காய்கறி பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. முன்சிறை பகுதியில் குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மழைக்கு நேற்று ஒரே நாளில் 13 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், கல்குளம் தாலுகாவில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 4 வீடுகளும் மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதயகிரி கோட்டை பூங்காவில் தேங்கி இருந்த தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.02 அடியாக உள்ளது. அணைக்கு 611 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 509 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது. அணைக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 526 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 52 கன அடி தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகிறார்கள்.
முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடி எட்டி நிரம்பி வழிகிறது. அணையிலிருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது
- மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.
இரணியல் :
இரணியல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்ற மாணவி மாலையில் தக்கலை வழியாக மண்டைக்காடு செல்லும் அரசு பஸ்ஸில் முன் பக்கத்தில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
- மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.
நாகர்கோவில் :
மருங்கூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 6-வது நாள் சூரசம்காரம் நடந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு விழா மயிலாடி நாஞ்சில் புத்தனாறு கால்வாய் அருகே ஆராட்டு மடத்தில் உள்ள படித்துறையில் வைத்து நடைபெற்றது.
இதற்காக சுப்ரமணியசாமி நேற்று மாலை 4 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு நடந்தது. மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.
நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, செயல் அலுவலர் அம்புரோஸ், துணைத்தலைவர் சாய்ராம், மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விஜய்வசந்த் எம்.பி., ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்ரமணியம், பொதுச்செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, மருங்கூர் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் சீனிவாசன், மயிலாடி பேரூர் பா.ஜனதா தலைவர் பாபு, மயிலாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பெருமாள், பேரூர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மணிகண்டன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாமா கண்ணன், அன்ன சுமதி சுதாகர், மயிலாடி தே.மு.தி.க. பேரூர் செயலளார் மூர்த்தி, சிவம்கல் தொழிலக நிறுவனர் முருகேசன், சுதன் கல்பாலிசி நிறுவனர் சுதன் உள்பட பக்தர்கள் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுப்ரமணிசாமி மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
- 50,000 நீட் விலக்கு கையெழுத்துகள் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்பின், கிருபா ஆகியோர் தலைமை தாங்கினார்
மார்த்தாண்டம் :
விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் நீட் கையெழுத்து இயக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் குழித்துறை நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்பின், கிருபா ஆகியோர் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப் பாளர்கள் ஆல்பின் கான், ரூபின் தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், குமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவபாலன், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜாண்சன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லிஜிஸ் ஜீவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் 50,000 நீட் விலக்கு கையெழுத்துகள் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
- இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது
- சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் ,கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர், ஆலயத்தில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 6-ம் நாள் திரு விழா நடைபெற்றது. இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை ,புகழ்மாலை ,திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மறையுரை நடைபெறுகிறது. அதன் பிறகு இன்று இரவு 9 மணிக்கு குமரி மண்ணில் விழுந்த விதை புனித தேவ சகாயமே என்ற பிரம்மாண்ட வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மேடைகளில் பிரபல கலைஞர்கள் இந்த நாட கத்தில் நடிக்க உள்ளனர். நாளை 8-ம் நாள் விழா வில் சிறப்பு நிகழ்ச்சியாக சமபந்தி நடைபெறுகிறது. சனிக்கிழமை 9ம் நாள் திருவிழாவும், இரவு கிறிஸ்து அரசர் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை 26-ந் தேதி 10ம்நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும் இரவு சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன. ஆயர் நசரேன் சூசை பங்கு பெற்று தலைமை மறையுரை ஆற்றுகிறார்.
விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள் ,பங்கு பேரவை பொறுப் பாளர்கள் ,உறுப்பினர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
- மத்திய மந்திரிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி, நவ.23-
மத்திய மந்திரி ஜெய்சங்க ருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள் ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பெதலீஸ் (வயது-51). இவரது தலைமையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 17 பேரும் ஓமன் நாட்டில் உள்ள துக்கம் மீன்பிடி துறை முகத்திலிருந்து மஸ்கட் பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர். இவர்களுக்கு ஓமன் நாட்டு விசைப்படகு உரிமையாளர் கடந்த 3 மாத காலமாக ஊதியம் அளிக்கா மல் இருந்து வந்ததாக கூறப்பட்டுகிறது.
மீனவர்கள் ஒமன் நாட்டில் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து அதனை ஒரு அரபி உரிமை யாளரிடம் ஒப்படைத்து அதற்குரிய சம்பளத்தை பெற்று வந்தனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த அரபி ஒவ்வொரு மாதமும் மீன்பிடித்ததற்குரிய சம்பளத்தை கொடுக்கும் போதெல்லாம் ஒரு தொகையை பிடித்தம் செய்துவிட்டு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பலமுறை சம்பள பிடித்தம் செய்யப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
இதனால் பெதலீஸ் அந்த விசைப்படகு உரிமையா ளரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெதலீசை, விசைப்படகு உரிமையாளர் தரப்பினர் சட்ட விரோத மாக சிறைபிடித்து சென்ற தாக அவருடன் வேலைக்குச் சென்ற பிற மீனவர்கள் பெதலீஸ் மனைவி சோபா ராணிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மேலும் ஓமன் நாட்டில் உள்ள பிற மீனவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக உணவு பொருட்களையும் விசைபடகு உரிமையாளர் தரப்பில் வழங்க மறுத்து வருவதாகவும் தெரிகிறது.
இதையடுத்து அவர் தனது கணவரை மீட்டு தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதேபோல் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்ற மீனவர்களின் குடும்பத் தினரும் அதிகாரி களிடம் கோரிக்கை வைத்துள் ளார்கள்.குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்வ ளத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
உணவு அளிக்கப்படாமல் சித்ரவதைக்கு உள்ளாகி யிருக்கும் மற்ற மீனவர்களின் குடுமப்பத்தினரும் கவலை யில் ஆழ்ந்துள்ளனர். எனவே குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 17 மீனவர்களின் குடும்பத்தி னரும் அந்தந்த மாவட்டங் களில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






