search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்து அரசர் ஆலயத்தில் குமரி மண்ணில் விழுந்த விதை புனித தேவசகாயமே நாடகம்
    X

    கிறிஸ்து அரசர் ஆலயத்தில் குமரி மண்ணில் விழுந்த விதை புனித தேவசகாயமே நாடகம்

    • இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது
    • சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் ,கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர், ஆலயத்தில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 6-ம் நாள் திரு விழா நடைபெற்றது. இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை ,புகழ்மாலை ,திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மறையுரை நடைபெறுகிறது. அதன் பிறகு இன்று இரவு 9 மணிக்கு குமரி மண்ணில் விழுந்த விதை புனித தேவ சகாயமே என்ற பிரம்மாண்ட வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மேடைகளில் பிரபல கலைஞர்கள் இந்த நாட கத்தில் நடிக்க உள்ளனர். நாளை 8-ம் நாள் விழா வில் சிறப்பு நிகழ்ச்சியாக சமபந்தி நடைபெறுகிறது. சனிக்கிழமை 9ம் நாள் திருவிழாவும், இரவு கிறிஸ்து அரசர் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை 26-ந் தேதி 10ம்நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும் இரவு சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன. ஆயர் நசரேன் சூசை பங்கு பெற்று தலைமை மறையுரை ஆற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள் ,பங்கு பேரவை பொறுப் பாளர்கள் ,உறுப்பினர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

    Next Story
    ×