என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • காங்கிரஸ் கமிட்டி சார்பில் குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இதனை மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். துணைத் தலைவரும் பேரூராட்சி தலைவருமான சுரேஷ் முன்னிலை வகித்தார். கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், வட்டார தலைவர்கள் ரவிசங்கர், ஜெபா, ராஜசேகரன், குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின் மேரி, கொல்லஞ்சி ஊராட்சித் தலைவி சலோமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வக்கீல் ஜான் இக்னேசியஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடந்தது
    • எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

    கன்னியாகுமரி :

    மத்திய அரசின் தொழி லாளர் விரோதப் போக்கை கண்டித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி சென்னையில் அனைத்து எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இது குறித்து பரப்புரை தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவரும் பேரூர் தி.மு.க. செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. தொழிற் சங்க துணைச் செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை தலைவர் குலாம் மைதீன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தொழிற்சங்க மாநில துணை செயலாளர் இளங்கோ, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

    • மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கள்சந்தை சென்ற அரசு பஸ்சில் பயணித்தார்.
    • படுகாயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப்ராஜ் (வயது 60). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கள்சந்தை சென்ற அரசு பஸ்சில் பயணித்தார்.

    பஸ் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் பின் பகுதியில் இருந்து முன் பக்கத்திற்கு செல்ல முயன்றார். அப்போது பஸ்சின் படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண் ஜோசப் ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ. 7 கோடி மதிப்பில் ராஜகோபுரத்துடன் கூடிய மறு புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள தென்தாமரைகு ளத்தில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பெரிய ம்மன் கோவில் உள்ளது. இங்கு பெரியம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், வெள்ளை மாரியம்மன், தோட்டுக்கா ரியம்மன், காவல் தெய்வமாக கருங்கடகார சாமி, எட்டு வீட்டு பிள்ளைமார் ஆகிய தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் சுமார் ரூ. 7 கோடி மதிப்பில் ராஜகோபுரத்துடன் கூடிய மறு புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. கோவில் மூலஸ்தானம் மூன்றும், வெளிப்பிரகார மண்டபமும் கல் மண்ட பத்தால் அமைக்கப்ப டுகிறது. மறு புனரமைப்பு க்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோவில் வளாகத்தில் நடை பெற்றது.

    இதனையொட்டி அதிகா லை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்ப ட்டது. காலை 7.30 மணி அளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு திருப்பணி குழு தலைவர் வழக்கறிஞர் தாமரை பாரதி தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக குழு தலைவர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் திரு ப்பணி குழு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதா கிரு ஷ்ணன், முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆவின் தலைவர் அசோகன், நாக ர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் முத்து ராமன், தி.மு.க. மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் சிவராஜ், தில்லை செல்வம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜன் மற்றும் அனைத்து ஊர் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனததுறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
    • புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புலி அட்டகாசம் செய்தது.

    தொழிலாளர்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வேட்டையாடியதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து புலியை பிடிக்க வனதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. புலியை பிடிக்க எலைட் படையினரும், டாக்டர்கள் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நெல்லையிலிருந்து வந்த விரைவு படையினரும் தேடி வருகிறார்கள். பேச்சிப்பாறை மூக்கரைக்கல் பகுதியில் டிரோன் கேமரா மூலமாக தேடும் பணி நடந்தது.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் புலியை டிரோன் கேமரா மூலமாக தேடி வருகிறார்கள். ஆனால் புலி சிக்க வில்லை. இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், பேச்சிப்பாறை சிற்றாறு பகுதிகளில் டிரோன் கேமரா மூலமாக கண்கா ணிக்கப்பட்டது. டிரோன் கேமராவிலும் புலி நடமாட்டம் தென்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்ததை அடுத்து புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆடுகளை மட்டும் பொதுமக்கள் பத்திரமாக அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
    • புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் 423 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உரு வாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலு வைப் பாதை ஆகியவை கள் தடை செய்யப் பட்டது.

    இந்த தடைகளை நீக்கி ஆலய வழிபாடுகளை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

    இதனால் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் வழக்கம்போல் ஆலய வழி பாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது. இதை யடுத்து கடந்த மாதம் நடை பெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்குத்தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.

    ஆனால் ஆலய நிர்வாகிகள் வழிபாடு நடத்த வரும் இணை பங்குத் தந்தையர்கள் குளச்சல் ஆல யத்தில் தங்கியிருக்க வேண்டும் எனவும், வேறு பங்குத்தந்தையை நியமிக்க வேண்டும் எனவும், தடைப் பட்டுள்ள நினைவு திருப்பலியை நடத்த வே ண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனை கோட்டார் மறைமாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் குளச்சல் ஆலய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதை யடுத்து நேற்று மாலை ஆலயம் முன்பு பங்கு நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குளச்சல் ஆலய நிர்வாகம், குளச்சலில் செயல்படும் சபைகள், சங்கங்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழுவினர் உள்பட திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர்கள் அன்பியங்கள் வேண்டாம், புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து ஆலய நிர்வாகிகள் கூறுகையில், குளச்சல் பங்கு மக்களின் உணர்வு களை உணர்ந்து கோட் டார் மறை மாவட்ட நிர்வாகம் உடனே புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும். இதில் கா லதாமதம் ஏற்பட்டால் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்கு களின் கூட்டமைப்பு குழு மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றனர்.

    • கிலோ ரூ.130 க்கு விற்பனை
    • பூண்டு ரூ. 200-க்கும், சின்னவெங்காயம் ரூ. 150- க்கும் விற்பனை

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தி zலும் காய்கறி களின் விலை உயர்ந்து காணப்படுவதால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.140 வரை விற்பனையானது. அதன் பிறகு சற்று குறைந்து கிலோ ஒரு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இன்று 10 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ 130-க்கு விற்பனை யானது. தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம், வரத்து குறைவு தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ள னர். வழக்கமாக பெங்களூரில் இருந்து அதிக அளவு தக்காளிகள் விற்பனைக்கு வரும். தற்பொழுது ஏற்கனவே வரக்கூடிய அளவைவிட 50 சதவீதம் தக்காளியே விற்ப னைக்கு வருகிறது. இதனால் விலை உயர்ந்து காணப்படு கிறது. 28 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை யானது.

    இதே போல் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இஞ்சி கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பூண்டு ரூ. 200-க்கும், சின்னவெங்காயம் ரூ. 150- க்கும் விற்பனையானது. கேரட், கத்தரிக்காய், பீன்ஸ் மற்றும் மிளகாயின் விலை சற்று குறைந்துள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறி களின் விலை விபரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ. 60, பீன்ஸ் ரூ.90, இஞ்சி ரூ.300, பூண்டு ரூ.200, தக்காளி ரூ.130, சின்ன வெங்காயம் ரூ.150, பல்லாரி ரூ.30, உருளைக்கி ழங்கு ரூ.35, தடியங்காய்ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, புடலங் காய் ரூ. 30, மிளகாய் ரூ. 80, வெண்டைக்காய் ரூ.60, சேனை ரூ.70, பீட்ரூட் ரூ.50-க்கு விற்பனையானது.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர் கோவில் காய்கறி சந்தைக்கு, குமரி மாவட்டத்தின் பல வேறு பகுதிகளிலும் நெல்லை மாவட்டங்களிலும் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். தற் பொழுது குமரி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. வெளி யூர்களில் இருந்து மட்டுமே காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. தக்காளியை பொருத்த மட்டில் பெங்களூரில் இருந்து குறைவான அளவில் விற்பனைக்கு வருவதால் விலை உயந்துள்ளது. காய்கறிகள் வரத்து அதி கரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்,

    • வடசேரி கனகமூலம் சந்தை தற்காலிகமாக மாற்றம்
    • வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்தப்பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையை ஆய்வு செய்த அவர், நீராளி குளத்தையும் பார்வை யிட்டார். அதை புணரமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ், நீராளி குளத்தை சுற்றியுள்ள மைதா னத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வடிவீஸ்வரம் பகுதியில் காய்கறி சந்தை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி செயல்பட்டு வருகிறது. நீராளி குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

    ஏற்கனவே வடசேரி சந்தையில் 120 கடைகள் காலியாக தான் இருந்து வருகிறது. சந்தையில் வியா பாரம் செய்து வரும் வியா பாரிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வியாபாரம் பாதிக்காத வகையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போர்வேல்கள் மூலமாகவும், குடிநீர் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. புத்தன் அணையிலிருந்து வெள் ளோட்டமாக கொண்டு வரப்படும் தண்ணீரை, கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்தி லிருந்து பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகி றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், நகர் அதிகாரி ராம்குமார், தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் கோபால் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் ஜான், இளை ஞரணி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    • நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இதய நோய்க்காக சின்னத்துரை சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார், சின்னத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    நெல்லை கருப்பந்துறை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது54). திருமணமாகாத இவர் ஒரு கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்தார்.

    நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இதய நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 21-ந்தேதி கன்னியாகுமரி வந்த சின்னத்துரை அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் தங்கி இருந்த அறை கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் அவர் வெளியே வரவில்லை. உடனே லாட்ஜ் ஊழியர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி மற்றும் போலீசார் லாட்ஜுக்கு விரைந்து சென்றனர். அவர்கள், அறை கதவை உடைத்து பார்த்தனர். அங்கு சின்னத்துரை படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார், சின்னத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கனகமூலம் சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
    • ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் முடிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அந்த சந்தையை தற்காலிகமாக அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள சுரங்கப் பாதையையொட்டிய பகுதியில் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ்,மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் கனகமூலம் சந்தையை இடம் மாற்றுவது குறித்து வடசேரி கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

    வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கனகமூலம் சந்தையை வேறுஇடத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தற்போது கனகமூலம் சந்தையில் 122 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே கனகமூலம் சந்தையின் ஒரு புறத்தில், தற்காலிகமாக கொட்டகை அமைத்து காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வடசேரி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தங்களின் கோரிக்கை தொடர்பாக மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடசேரியில் வருகிற 28-ந்தேதி வியாபாரிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு
    • தனிப்பட்ட வீடுகளில் பல்வேறு இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆணைய உறுப்பி னர்-செயலர் சம்பத், துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ், உறுப்பினர்கள் தமீம் அன்சாரி, மன்ஹித்சிங் நாயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கிறிஸ்தவ சபையினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு விண்ணப்பித்தும் அனுமதி வழங்கப்படவில்லை. காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆலயங்களை புதுப்பிப்பதற்கும் அனுமதி தருவதற்கும் கால தாமதப்படுத்தி வருகிறார்கள். வீடுகளில் கோர்ட்டின் அனுமதி பெற்று ஜெபக்கூடம் நடத்தி வருகிறோம். ஆனால் போலீசார் அதை தடுக்கிறார்கள். நாங்கள் கடந்த 27 மாதங்களாக நிம்மதியாக உள்ளோம் என்றனர்.

    இதனை தொடர்ந்து தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில்,

    பல ஆண்டுகளாக செயல்படும் ஆலயங்களில், கட்டிடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் காலதாமதம் இன்றி அனுமதி வழங்க வேண்டும். புதிய ஆலயங்கள் கட்டுவதாக இருந்தால் சட்ட விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட வீடுகளில் பல்வேறு இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. அதில் என்ன பிரச்சனை என்பதை போலீசார் தெரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி வாங்க தேவையில்லை. பொது மக்களுக்கு இடையூறு இன்றி நடத்த வேண்டும் என்றார்.

    • கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்கின்றனர்
    • பேச்சு வார்த்தையில் வழக்கம் போல் ஆலய வழிபாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உருவாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலுவைப் பாதை ஆகியவைகள் தடை செய்யப்பட்டது. இதையடுத்து குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் கடந்த மாதம் 24-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனை முன்னிட்டு மீனவர்கள் அன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் வழக்கம் போல் ஆலய வழிபாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது.

    தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால் ஆலய நிர்வாகிகள் வழிபாடு நடத்த வரும் இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் ஆலயத்தில் தங்கியிருக்க வேண்டும் எனவும், வேறு பங்குத்தந்தையை நியமிக்க வேண்டும் எனவும், தடைப்பட்டுள்ள நினைவு திருப்பலியை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனை கோட்டார் மறைமாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் குளச்சல் ஆலய நிர்வாகிகள் நேற்று மாலை அவசரக்கூட்டம் நடத்தினர். இதில் சபைகள், சங்கங்கள் மற்றும் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்ட முடிவுப்படி 26-ந் தேதி (இன்று) மாலை 3.30 மணியளவில் வேலை நிறுத்தம் செய்யாமல் குளச்சல் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட் டது. இதன்படி குளச்சலில் மீனவர்கள் இன்றும் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர்.

    ×