search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

    • மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • காங்கிரஸ் கமிட்டி சார்பில் குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இதனை மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குழித்துறை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். துணைத் தலைவரும் பேரூராட்சி தலைவருமான சுரேஷ் முன்னிலை வகித்தார். கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், வட்டார தலைவர்கள் ரவிசங்கர், ஜெபா, ராஜசேகரன், குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின் மேரி, கொல்லஞ்சி ஊராட்சித் தலைவி சலோமி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வக்கீல் ஜான் இக்னேசியஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×