என் மலர்
கன்னியாகுமரி
- பகவதி அம்மன் கோவிலில் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன
- 13 கிராம் 300 மில்லி தங்கமும் 81 கிராம் வெள்ளி
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத் தில் உள்ள திருக்கோவில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மா ணணவிகள், மேல்மரு வத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடைபெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் மூலம் ரூ.20 லட்சத்து 49 ஆயித்து 958 வசூலாகி உள்ளது. இதுதவிர 13 கிராம் 300 மில்லி தங்கமும் 81 கிராம் வெள்ளியும் மற்றும் அமெரிக்க டாலர், மலேசியா ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர், அரபு எமிரேட்ஸ் திர்காம்ஸ் போன்ற வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.
- வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறினர்
- குடிநீர் விநியோகிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும்.
இரணியல் :
வில்லுக்குறி பேரூராட்சி சாதாரண கூட்டம் நேற்று மாலை நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் இதுவரை வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறினர். மேலும் துணை தலைவர் ராமலிங்கம் தலைமையில் 14 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
துணை தலைவர் ராமலிங்கம் தலைமையில் கவுன்சிலர்கள் சரிதா, சுதா, தேவிகா, புஷ்பாகரன், எட்வர்ட் திலக், சுகிதா, அன்சிலாவிஜிலியஸ், ஜோஸ்பின்புனிதா, ரீனா, சுப்பிரமணியபிள்ளை, ஸ்டான்லி, கிரிஜாம்பிகா, வினோத் ஆகிய 14 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில், கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். போதுமான குடிநீர் விநியோகிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும்.
எல்லா வார்டுகளிலும் ஒதுக்கப்பட்ட வேலைகளை உடனே தொடங்க வேண்டும். குறைந்த பட்சம் வார்டுகளில் ரூ.10 லட்சம் நிதியிலாவது பணிகளை தொடங்க வேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேவையான தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
இதற்கு முன்பு நடந்தது போன்று பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
போராட்டம் குறித்த தகவல் பரவியதால் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். செயல் அலுவலர் மகேஷ்வரி, தலைவர் விஜயலட்சுமி, இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் பாலசுந்தரம் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதுகுறித்து துணை தலைவர் ராமலிங்கம் கூறுகையில், வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தால் 400-க்கும் மேற்பட்ட பிளான் அப்ரூவல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பிளான் அப்ரூவல்கள் முறையாக விசாரிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின்பு ஏதாவது ஒரு காரணத்தை கூறி நிராகரிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் வீடு கட்ட முடியாத நிலையும், லோன் உள்ளிட்டவைகள் பெற முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. மேலும் குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இதுவரை சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்காத பல வார்டுகள் உள்ளன.
எனவே வார்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் நிதியிலாவது சாலை பணிகளை உடனே தொடங்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
- குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள்.
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, என்ஜினீயர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் நவீன் குமார், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், அய்யப்பன், டி.ஆர்.செல்வம், அனிலா சுகுமாரன், ரோசிட்டா, வளர்மதி, ரமேஷ், வீரசூரபெருமாள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் நகராட்சி தலைவர் ஜெமீலா ஜேம்ஸ் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள். மணல்களை அகற்றவில்லை. பெயர் மாற்றம், வரிவிதிப்பு தொடர்பாக மனுக்கள் அளித்து ஏராளமான புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. வருவாய்துறை பிரிவில் பல்வேறு ஊழியர்கள் பணிக்கு வராத நிலை உள்ளது. இதனால் ஊழியர்களின் மேஜைகளில் கோப்புகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள மண்டல அலுவலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 மாதம் ஆகியும் மண்டல அலுவலகம் திறக்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் உள்ள கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. குடும்பத்தோடு சென்றால் மூக்கை பிடித்து விட்டு கழிவறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே அதை சரி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல சூரங்குடி பகுதியில் பாசன கால்வாயில் வீட்டு கழிவுகள் விடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கடல்அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திராயன் 3 வெற்றி பெற்றதற்கு மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும் என்று கூறி பல மாதங்கள் ஆகியும் ரவுண்டானா அமைக்கப்பட வில்லை. ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசியதாவது:- சாலையில் உள்ள குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்களும். தனியார் மூலம் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களும் அகற்றி வருகிறார்கள். ஆனால் மணல்களை. மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து மட்டுமே அகற்ற முடியும். இதுதொடர்பாக தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.
நாய் தொல்லையை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருத்தடைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருத்தடை செய்யப்பட்ட நாய்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு போதுமான இட வசதி தற்பொழுது இல்லை. எனவே ஒரே இடத்தில் 100 முதல் 200 நாட்களை நாய்களை கட்டி வைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
தேங்கி கிடக்கும் கோப்பு களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவல கங்களையும் சீரமைக்க தலா ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 மண்டல அலுவலகத்திற்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .
முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. அந்த அணையை தூர் வாரும் காலம் முடிந்து விட்டது. இனி வரும் காலங்களில் அது பற்றி ஆலோசிக்கப்படும்.
புத்தன் அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை பொது மக்களுக்கு தற்பொழுது சப்ளை செய்து வருகிறோம். ஏற்கனவே சோதனை ஒட்டம் செய்தபோது ஒரு சில இடங்களில் நீர்க்கசிவு இருந்தது. அதை சரி செய்து தற்போது புத்தன் அணை தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வரு கிறோம்.
மழை கை கொடுத்தால் மட்டுமே, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அனைத்து வீடுகளிலும் உறிஞ்சி குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். நாகர்கோவில் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலை துறை அனுமதி கிடைத்தவுடன் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும். செட்டிகுளத்தில் இருந்து சவேரியார்கோவில் செல்லும் சாலையை, இருவழி பாதையாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமார் கூறும் போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலை, என்.எஸ்.கே. சிலையை வைக்க வேண்டும் என்றார். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர், த.மா.கா கவுன்சிலர் டி. ஆர். செல்வம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளை வைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- 7-ம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
- சிறுமியின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
குளச்சல் :
திங்கள்நகர் அருகே உள்ள வெட்டுக்காட்டுவிளையை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 25. வெல்டிங் தொழிலாளியான இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டின் மாடியில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மாடிக்கு வந்த சிறுமியின் அக்காள், அதனை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து பிரசாந்த் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து சிறுமியின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரசாந்த் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிய அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
- 9 -ம் நாளான நாளை (31-ந்தேதி) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
- ஆவணி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி :
குமரிமாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா நாளைமறுநாள்செப்டம்பர் 1-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்ததிருவிழாவை யொட்டி தினமும் திருவேங்கட விண்ணவரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும்நடந்து வருகிறது. திருவிழாவின் 9 -ம் நாளான நாளை (31-ந்தேதி) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
இதையொட்டி நாளை மாலை4மணிக்கு இந்திரன் தேராகிய சப்பரதேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான செப்டம்பர் 1-ந்தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்ததிருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதர நாயர், ஜோதீஷ்குமார் மற்றும் கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
- காலையில் அந்த வழியாக சென்றவர்கள் விஜீஷ் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.
- தற்கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருமனை :
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு திடுமண் தோட்டம் பகுதியை சேர்ந்த மனோன்மணி என்பவரின் மகன் விஜீஷ் (வயது 27). கூலி வேலை பார்த்து வந்த இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது.
குடிப்பழக்கத்தை நிறுத்து மாறு அவரை அவரது பெற்றோர் பலமுறை கேட்டுக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் அவர் குடிப்பழக்கத்தை கைவிட வில்லை. இதனால் விரக்திய டைந்த அவரது பெற்றோர், வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சென்று குடியேறினார்கள்.
இதனால் விஜீஷ் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். நேற்று ஓணம் என்பதால் அவர் அதிக அளவில் மது குடித்திருக்கிறார். பின்பு இரவில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு படுத்துக்கொண்டாக தெரிகிறது. இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் விஜீஷ் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.
அதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விஜீஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அரு மனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கூட்டம்
- கடல் நீர் மட்டத் தாழ்வு காரணமாக காலை ஒரு மணி நேரம் தாமதமாக போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியா குமரிக்கு தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறையை யொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியா குமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து சூரியன் உதயம் மற்றும் அஸ்த மனத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை படகில் சென்றும் பார்வையிட்டனர். 3 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். நேற்று முன் தினம் 7 ஆயிரத்து 40 பேரும், நேற்று 8 ஆயிரம் பேரும் இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டனர். இதற்கிடையில் கடல் நீர் மட்டத் தாழ்வு காரணமாக இன்று காலை ஒரு மணி நேரம் தாம தமாக காலை 9 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் பெற்றனர்.
- ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
- மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள்.
மார்த்தாண்டம் :
கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. பள்ளித்தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். இயக்குநர் இலக்கியா, முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முன்னிலை வகித்தனர், கவுரவ விருந்தினர்களாக வெள்ளறடை ஆர்.எம். தேவி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் மோகன், தென்காசி எஸ்.எம்,ஏ கல்விக்குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், கரிக்ககம் ஸ்ரீ குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் டைட்டன்ஸ், ஒலிம்பியன்ஸ், ஸ்பார்டன்ஸ் என மூன்று குழுக்களாகப் பிரிந்து அத்தப்பூ கோலமிட்டார்கள். மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
- பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
- நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு
நாகர்கோவில் :
ஒடிசா ரெயில் விபத்துக்கு பிறகு ரெயில்வே வாரியம், காரி டார் பிளாக் பணிக்கான கால அளவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு ரெயில்வே, பல்வேறு ரெயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்துள்ளது. அதன்படி நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கானஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் செய்யும் போது அதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்த புரம் - மங்களூர் (16347/16348) ரெயிலை நாகர்கோ வில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இவ்வாறு நீட்டிப்பு செய்தால் மட்டுமே, ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தம் செய்ய வேண்டும். இது குறித்து குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்.
இதே போல் குமரி மாவட்டத்திலிருந்து வருவாய் குறைவாக இயங்கும் ரெயில்களாக கன்னியா குமரி-திப்ருகார், நாகர்கோ வில்-ஷாலிமார், கன்னியாகுமரி-கத்ரா, திரு நெல்வேலி- பிலாஸ்பூர், கன்னியாகுமரி-புனே போன்ற ரெயில்கள் உள்ளன.
திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூருக்கு செல்லும் ரெயில் நடு இரவு நேரத்தில் மிகவும் வருவாய் குறைந்து நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இயங்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காரிடார் பிளாக் பணியும் பாதிப்படைகிறது. ஆனால் இந்த ரெயில் நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நாகர்கோ வில்-மங்களூர் ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தியது போல, திருநெல்வேலி-பிலாஸ்பூர் ரெயிலை கொச்சு வேலியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் 2 நாட்கள் காரிடார் பிளாக் பாதிப்படை யாது.
இந்த ரெயிலை கொச்சுவே லியுடன் நிறுத்தம் செய்வதற்கு பதிலாக கொச்சுவேலியில் இருந்து கொல்லம், எர்ணாகுளம், மங்களூர், கோவா, மும்பை வழியாக கொங்கன் பாதையில் செல்லும் கொச்சுவேலி – போர்பந்தர் அல்லது கொச்சுவேலி-இந்தூர் ஆகியரெயில்களில் ஏதேனும் ஒரு வாராந்திர ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இந்த ரெயில்கள் திருநெ ல்வேலி-–ஜாம்நகர் செல்லும் கால அட்டவணை யில் தான் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயக்கும் போது குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் மும்பை செல்ல கூடுதல் ரெயில் சேவை கிடைக்கும். ெரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
- பேராய செயலாளர் வக்கீல் தினேஷ் கலந்து கொண்டார்
- சுமார் 600-க்கும் மேல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நடத்தி பெரிய சாதனை
தக்கலை :
மார்த்தாண்டம் அருகே விரிகோடு சி.எஸ்.ஐ பேரா யத்தின் கீழ் செயல்படும் வேதமாணிக்கம் தெழில்நுட்ப கல்லூரியில் 2023-ம் ஆண்டு ஓணம் பண்டிகை கல்லூ ரியில் வைத்து நடந்தது.ஆசிரியர்களின் கூட்டு முயற்சியின் காரணமாக இக் கல்லூரியில் மினி மாரத்தான் சுமார் 600-க்கும் மேல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நடத்தி பெரிய சாதனை படைத்துள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக சி.எஸ்.ஐ பேராய செயலர் வக்கீல் தினேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும் கல்லூரி தாளாளர் சதீஷ் கல்லூரி முதல்வர் அனில் குமார் மற்றும் கல்லூரியில் பணி புரியும் ஆசிரி யர்கள் மாணவர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் வடம் இழுத்தல், உறியடி, திருவாதிரை, என அநேக நிகழ்வுகளுடன் மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
- இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
திருவட்டார் :
குலசேகரம் அருகே இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சில சம்பவங்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் குற்றச் செயல்கள் குறைந்தன.
இந்த நிலையில் தற்போது அதே பாணியில் மீண்டும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த காட்சியில் நள்ளிரவில் ஒரு காரில் 2 மர்ம நபர்கள் ஒரு வீட்டின் முன்பு வந்து இறங்குகின்றனர். அந்த பகுதியில் நோட்டம் போடும் அவர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள்.
திடீரென ஒரு வீட்டின் கேட்டை உடைக்கிறார்கள். பால் வாங்குவதற்காக கேட்டில் மாட்டப்பட்டிருந்த பால் வாங்கும் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காரில் தப்பி செல்கின்றனர்.
இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் கும்பல் குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது
- அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர்
திருவட்டார் :
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் கேரளா முறைப்படி ஓணவில் பெருமாளுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர். இதையடுத்து ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன் மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.
தொடர்ந்து ஓணவில்கள் கிருஷ்ணசாமி சன்னதியிலும், ஆதிகேசவப்பெருமாள் சன்னதியிலும் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.






