என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
3 நாட்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்
- ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கூட்டம்
- கடல் நீர் மட்டத் தாழ்வு காரணமாக காலை ஒரு மணி நேரம் தாமதமாக போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியா குமரிக்கு தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறையை யொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியா குமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து சூரியன் உதயம் மற்றும் அஸ்த மனத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை படகில் சென்றும் பார்வையிட்டனர். 3 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். நேற்று முன் தினம் 7 ஆயிரத்து 40 பேரும், நேற்று 8 ஆயிரம் பேரும் இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டனர். இதற்கிடையில் கடல் நீர் மட்டத் தாழ்வு காரணமாக இன்று காலை ஒரு மணி நேரம் தாம தமாக காலை 9 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் பெற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்