என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.20 ½ லட்சம் வசூல்
- பகவதி அம்மன் கோவிலில் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன
- 13 கிராம் 300 மில்லி தங்கமும் 81 கிராம் வெள்ளி
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத் தில் உள்ள திருக்கோவில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மா ணணவிகள், மேல்மரு வத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடைபெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் மூலம் ரூ.20 லட்சத்து 49 ஆயித்து 958 வசூலாகி உள்ளது. இதுதவிர 13 கிராம் 300 மில்லி தங்கமும் 81 கிராம் வெள்ளியும் மற்றும் அமெரிக்க டாலர், மலேசியா ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர், அரபு எமிரேட்ஸ் திர்காம்ஸ் போன்ற வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.
Next Story






