search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் 14 கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
    X

    வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் 14 கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்

    • வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறினர்
    • குடிநீர் விநியோகிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும்.

    இரணியல் :

    வில்லுக்குறி பேரூராட்சி சாதாரண கூட்டம் நேற்று மாலை நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கூட்டத்திற்கு வந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் இதுவரை வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறினர். மேலும் துணை தலைவர் ராமலிங்கம் தலைமையில் 14 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    துணை தலைவர் ராமலிங்கம் தலைமையில் கவுன்சிலர்கள் சரிதா, சுதா, தேவிகா, புஷ்பாகரன், எட்வர்ட் திலக், சுகிதா, அன்சிலாவிஜிலியஸ், ஜோஸ்பின்புனிதா, ரீனா, சுப்பிரமணியபிள்ளை, ஸ்டான்லி, கிரிஜாம்பிகா, வினோத் ஆகிய 14 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில், கலந்து கொண்டனர்.

    வில்லுக்குறி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். போதுமான குடிநீர் விநியோகிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும்.

    எல்லா வார்டுகளிலும் ஒதுக்கப்பட்ட வேலைகளை உடனே தொடங்க வேண்டும். குறைந்த பட்சம் வார்டுகளில் ரூ.10 லட்சம் நிதியிலாவது பணிகளை தொடங்க வேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேவையான தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

    இதற்கு முன்பு நடந்தது போன்று பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

    போராட்டம் குறித்த தகவல் பரவியதால் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். செயல் அலுவலர் மகேஷ்வரி, தலைவர் விஜயலட்சுமி, இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் பாலசுந்தரம் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனால் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதுகுறித்து துணை தலைவர் ராமலிங்கம் கூறுகையில், வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தால் 400-க்கும் மேற்பட்ட பிளான் அப்ரூவல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பிளான் அப்ரூவல்கள் முறையாக விசாரிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின்பு ஏதாவது ஒரு காரணத்தை கூறி நிராகரிக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் வீடு கட்ட முடியாத நிலையும், லோன் உள்ளிட்டவைகள் பெற முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. மேலும் குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இதுவரை சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்காத பல வார்டுகள் உள்ளன.

    எனவே வார்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் நிதியிலாவது சாலை பணிகளை உடனே தொடங்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    Next Story
    ×