என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி (வயது 17) என்ற மாணவி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 17-ந்தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர். இந்நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படிசேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ் தலைமையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் நியமிக்கப்பட்டனர்.

    இவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் தனியார் பள்ளி முன்பும், கனியாமூர் 4 முனை சந்திப்பு, சின்னசேலம் சாலை பங்காரம் சாலை கச்சிராயபாளையம் சாலை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 306 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வன்முறையின் போது போலீசார் பஸ்சை எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் போலீசார் பஸ்சை எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட பசுங்காயம் பகுதியைச் சேர்ந்த வசந்தன் (வயது 19), கலவரத்தின் போது பள்ளி கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியதாக கடலூர் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனிஷ் (26) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்

    அதன்படி இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கைதான 5 பேர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுக்க முடிவு செய்தனர்.

    அதன்படி 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு விசாரணையின்போது, எத்தனை நாள் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் என தெரியவரும்.

    • கனியாமூரில் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் வேளாண்துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.
    • டி.ஜி.பி. சைேலந்திரபாபு அதிரடி நடவடிக்கையின் பேரில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சம்பவத்தையொட்டி கடந்த 17-ந் தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்கு உள்ள பொருட்களை சூறையாடி பஸ்களுக்கு தீ வைத்து எரித்தது. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைேலந்திரபாபு அதிரடி நடவடிக்கையின் பேரில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. என்றாலும் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கலவரம் தொடர்பாக புலனாய்வு குழு, தடவியல் குழுவினர் நேரடியாக பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர். இன்று காலை வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது கலவரத்தில் சேதம் அடைந்த மரம், செடி, அழகு சாதன புல்வெளி ஆகியவற்றை சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேளாண் துறை இணை இயக்குனர் வேல்விழி தலைமையில், உதவி இயக்குனர் சுந்தரம் முன்னிலையில், வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குனர், தோட்டக்கலை துறை முரளி, ஆகியோர் சேதங்களை குறித்து ஆய்வு நடத்தினர். 

    தியாகதுருகம் அருகே சாலை ஓர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமம் உள்ளது. தியாகதுருகத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் சிறுநாகலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் தார் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி உள்ளது.  இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் முள்புதர்கள் மண்டியும், சாலையோரம் பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொறையூர், சிறுநாகலூர், கொட்டையூர், நின்னையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது ஒதுங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சாலையோர முட்புதர்களை உடனடியாக அகற்றவும், சாலையோர பள்ளங்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கனியாமூர் கலவரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி அன்று பிளஸ் -2 மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். பிறகு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி அன்று இந்த அமைதியான போராட்டம் மிகப்பெரிய ஒரு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளியில் உள்ள பல்வேறு பொருட்கள் தீ வைத்து எரித்து நாசமாயின. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை பிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் 306 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்த பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் கைது எண்ணிக்கை 307 ஆக உயர்ந்தது. இந்த கைது நடவடிக்கை மேலும் தொடரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும்.
    • ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடி பாடம் நடத்த ஏற்பாடு.

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக நாளை( புதன்கிழமை) முதல் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்கின்ற முடிவை எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் 9, 10, 11, 12 வகுப்புகள் மிக மிக முக்கியமான வகுப்புகள்.

    உடனடியாக Board Exam-க்கு அவர்கள் தயார் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடியாக பாடம் நடத்துவதற்கு தேவைப்படுகின்ற வகுப்பறைகளை தயார் செய்திட முடிவெடுத்திருக்கின்றோம்.

    கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடைய சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டது. மெட்ரிக் பொறுத்தவரை, எல்லா சான்றிதழ்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.

    இருந்தாலும், அந்தந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் தனியாக ஒரு Special DEO போட்டிருக்கிறோம். இவர்களெல்லாம் அமர்ந்து, யார், யாருக்கெல்லாம் duplicate copy இல்லையோ, அவர்களையெல்லாம் வரவழைத்து, யார், யாருக்கெல்லாம் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றதோ, அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
    • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32-வது சுற்று கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 2,448 மையங்களில் நடைபெற்றது.

    இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தி யவர்கள் மூன்றாவதாக முன்னெ ச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டு பய ன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு குழுவினர் மூலம் மாவட்ட முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,870 பேருக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 25 ஆயிரத்து 95 பேருக்கும், ஆக மொத்தம் 31, 235 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் தங்களுடைய செல்போனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் எவ்வாறு எஸ்.எம்.எஸ்.வந்தது. சுகாதாரத்துறை பணி யாளர்கள் அலட்சி யமாக செயல்படுகிறார்களா? அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்துவ தற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் சுகாதாரப் பணியாளர்கள் முறை கேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    சங்கராபுரத்தில் பேரூராட்சி மன்றம் சார்பில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி மாணவர்கள் பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தை கண்டறிந்தார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி மன்றம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலமாக இயற்கை உரம் தயாரிக்கும் இடத்தினை சங்கராபுரம் வள்ளலார் பள்ளி மாணவர்கள் நேரில் களஆய்வு மேற்கொண்டு அதன் முக்கியத்துவத்தை கண்டறிந்தார்கள். பள்ளித் தாளாளர் இராம.முத்துகருப்பன் தலைமையில் வள்ளலார் பள்ளி மாணவர்கள் நேரில் சென்று சங்கரா புரம் நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு பிளாஸ்டிக் தனியாக்கப்படுகிறது.

    காய்கறிக் கழிவுகள், புஷ்பங்கள், முட்டைஓடுகள், டீத்தூள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு சம அளவில் அவைகள் கலக்கப்பட்டு சாணம், தண்ணீர் ஆகியவை சேர்க்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும் விபரத்தினை பார்த்தார்கள். இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் துரைதாகப்பிள்ளை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • குருப் 4 தேர்விற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,026 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தா ல்நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றாக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-4 தேர்வு 93 தேர்வு மையங்களில் 143 தேர்வு அறைகளில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 42,600 நபர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 36,574 ேபர் மட்டும் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 6,026 பேர் தேர்விற்கு வரவில்லை.

    மேலும் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு மற்றும் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகளுடன் தேர்வு நடைப்பெற்றது.

    தேர்வுக்கு 7 பறக்கும்படை, 5 நபர்கள் கொண்ட 32 சுற்று குழுக்கள் கண்காணிப்பு பணிகளிலும், 180 காவலர்கள் பாதுகாப்பு பணிகளிலும்வி ண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து முன்னேற்பாடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஐயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சங்கராபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவளூர் கூட்டுரோட்டை சேர்ந்தவர் ஜானிபாஷா (வயது 54). இவர் வேலுாரில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 10 சவரன் நகை, ரூ.20,000 ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த ஜானிபாஷா கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கடந்த ஒரு வாரமாக நடந்த தடயவியல் குழுவினரின் ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.
    • இவர்கள் சேகரித்த தடயங்களின் கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கும், சி.பி.சி.ஐ.டி.,க்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தது குறித்து கடந்த 17-ந்தேதி கலவரம் வெடித்தது.

    கலவரம் தொடர்பான குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உதவிடும் வகையில், விழுப்புரம் மண்டல தடயவியல்துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கலவரத்தில் போராட்ட குழுவினர் எந்த வகையான ஆயுதங்களை பயன்படுத்தினர்.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை ஏதேனும் பயன்படுத்தியுள்ளனரா? வெளிநபர்கள் வந்து செல்வதற்கான தடயங்களை விட்டுள்ளனரா? சி.சி.டி.வி., வீடியோ ஆதாரங்கள், கடிதங்கள் உள்ளதா? என தடயங்களை தடயவியல் குழுவினர் சேகரித்தனர்.

    கடந்த ஒரு வாரமாக நடந்த தடயவியல் குழுவினரின் ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இவர்கள் சேகரித்த தடயங்களின் கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கும், சி.பி.சி.ஐ.டி.,க்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.

    அதேபோல், கைரேகை பிரிவு அலுவலர்களின் ஆய்வு பணிகளும் நிறைவடைந்தது. ஆனால் தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு அலுவலர்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

    இதையடுத்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. அதன்பின்னர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்குவிசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழுவினரும், சி.பி.சி.ஐ.டி.,போலீசாரும் பள்ளியில் தினமும் ஆய்வு மற்றும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள பள்ளி நிர்வாகத்தினரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    ×