என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கனியாமூரில் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் வேளாண்துறையினர் இன்று ஆய்வு
- கனியாமூரில் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் வேளாண்துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.
- டி.ஜி.பி. சைேலந்திரபாபு அதிரடி நடவடிக்கையின் பேரில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சம்பவத்தையொட்டி கடந்த 17-ந் தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்கு உள்ள பொருட்களை சூறையாடி பஸ்களுக்கு தீ வைத்து எரித்தது. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைேலந்திரபாபு அதிரடி நடவடிக்கையின் பேரில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. என்றாலும் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கலவரம் தொடர்பாக புலனாய்வு குழு, தடவியல் குழுவினர் நேரடியாக பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர். இன்று காலை வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது கலவரத்தில் சேதம் அடைந்த மரம், செடி, அழகு சாதன புல்வெளி ஆகியவற்றை சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேளாண் துறை இணை இயக்குனர் வேல்விழி தலைமையில், உதவி இயக்குனர் சுந்தரம் முன்னிலையில், வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குனர், தோட்டக்கலை துறை முரளி, ஆகியோர் சேதங்களை குறித்து ஆய்வு நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்