search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே சாலை ஓர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி
    X

     சிறுநாகலூர் செல்லும் சாலையில்  முட்புதர்கள் மண்டி இருப்பதை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் அருகே சாலை ஓர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

    தியாகதுருகம் அருகே சாலை ஓர முட்புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமம் உள்ளது. தியாகதுருகத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் சிறுநாகலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் தார் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் முள்புதர்கள் மண்டியும், சாலையோரம் பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொறையூர், சிறுநாகலூர், கொட்டையூர், நின்னையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது ஒதுங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சாலையோர முட்புதர்களை உடனடியாக அகற்றவும், சாலையோர பள்ளங்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×