search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனியாமூர் கலவரத்தில்  மேலும் ஒருவர் கைது
    X

    கனியாமூர் கலவரத்தில் மேலும் ஒருவர் கைது

    • கனியாமூர் கலவரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி அன்று பிளஸ் -2 மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். பிறகு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி அன்று இந்த அமைதியான போராட்டம் மிகப்பெரிய ஒரு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளியில் உள்ள பல்வேறு பொருட்கள் தீ வைத்து எரித்து நாசமாயின. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை பிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் 306 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்த பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் கைது எண்ணிக்கை 307 ஆக உயர்ந்தது. இந்த கைது நடவடிக்கை மேலும் தொடரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×