என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.
    காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வைகா சித்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்போது நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதையடுத்து கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கருட வாகன சேவை கடந்த 15ந் தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை (வியாழக் கிழமை) நடைபெற உள்ளது. வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிகளில் பவனி வருகிறார்.

    காந்திசாலை, காமராஜர் சாலை மற்றும் நான்குராஜ வீதிகள் வழியாக தேர் செல்கிறது. அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பஜனைகோஷ்டியினர் தேரின் பின்புறம் பஜனை பாடல்களை பாடியடி செல்வார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேரோட்டத்தால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய காஞ்சீபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாம்...பல்வேறு தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்...
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், அனைவரும் டி.என்.ஸ்போர்ட்ஸ் ஆடுகளம் எனும் செயலியை கைப்பேசியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ஆடுகளம் செயலி (டி.என்.ஸ்போர்ட்ஸ்)விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாட்டுச் செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இந்த செயலியை பதிவேற்றம் செய்து பயன் அடையலாம்.

    இந்த செயலியில் தங்களது பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    விளையாட்டுத் துறை சார்ந்த அறிவிப்புகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான முன்பதிவு செய்யலாம்.

    விளையாட்டுத் துறையின் பயன்களை பெறுவதற்கு இச்செயலி மிகவும் இன்றியமையாததாகும்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், அனைவரும் டி.என்.ஸ்போர்ட்ஸ் ஆடுகளம் எனும் செயலியை கைப்பேசியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டி மற்றும் துணி கூடைக்குள் அரிய வகையான வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு குட்டி இருந்தது.

    இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, வீட்டில் வளர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை.

    வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    ஆனால் அந்த பயணியிடம் முறையான எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு குட்டியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்களும் வந்து விலங்குகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதேபோல் வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விலங்குகள் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க அவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்தால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விமானத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    இதையடுத்து போதிய பயணிகள் இல்லாததால், இன்று நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 4.15 மணிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 2.25 மணிக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து அதிகாலை 3.25 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானமும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘இலங்கைக்கு இரவு நேர விமானங்களில் செல்ல போதிய பயணிகள் இல்லாததால் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் நாளை வழக்கம் போல் இரவிலும் விமானங்கள் இயக்கப்படும்’ என்றனர்.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான கல்வி கடன், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 23 ந் தேதியும், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 ந் தேதியும், திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25 ந் தேதியும், குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26 ந் தேதியும், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27  ந் தேதியும் நடைபெறவுள்ளது.

    இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான கோ.க. மாதவன் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ. 53 லட்சத்திற்கான காசோலையை காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளரும் பணியாளர் அலுவலருமான தயாளன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மாதவனிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான முருகன், காஞ்சிபுரம் சரக துணை பதிவாளர் சுவாதி, பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளரும் முதல்வருமான உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அருண்குமார், காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் முரளி மற்றும் ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 22ந் தேதி வரை நடக்கிறது.
    காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. இந்த கோவிலில் கொரோனோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி மாத பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற வில்லை.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி உள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தனர்.

    பின்னர் தங்க சப்பரம் வாகனத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி கோவில் பிரகாரம், முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று தொடங்கும் பிரம்மோற்சவ விழா வருகிற 22ந் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவை யொட்டி காலை, மாலை என இருவேளைகளிலும் வரதராஜப்பெருமாள், தங்க சப்பரம்,சிம்மம், ஹம்சம்,சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை விழா வருகிற 15ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ர திருத்தேர் உற்சவம் 19ந் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.

    கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோவில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 14ந் தேதி காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் மேல் ஒட்டிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ஆதவபாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அவளூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சோகண்டி, குன்றத்தூர் வட்டத்தில் வடக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    மேற்படி, முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்திடவும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் காமராஜர் சாலை, காந்தி ரோடு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    வெங்கம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்பாக்கம்:

    கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்.கார் மெக்கானிக். இவரது மனைவி ஷோபனா(வயது25). இருவரும் காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நந்தகோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஷோபனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர் பகுதியில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.89ஆயிரத்து 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து ஆலந்தூர் மண்டல துப்புரவு அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 வாரத்தில் 888 கடைகளில் சோதனை நடத்தி சுமார் 196 கிலோ பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.89ஆயிரத்து 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    சென்னை மயிலாப்பூரில் இரட்டை கொலை வழக்கில் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).

    தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர்.

    இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் 3 மாதங்கள் அமெரிக்காவிேலயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில் வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்து உள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர். தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரி காட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர்.

    பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

    கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இருவரும் நேற்று மாலை 6.30 மணி அளவில்தான் பிடிபட்டனர். இதன் பின்னர் உடனடியாக உடல்களை தோண்டி எடுக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு போலீசார் கொலையாளிகளை அழைத்துச் சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டினர். இதைத் தொடர்ந்து போலீசார் வருவாய் துறையினர் முன்னிலையில் தொழில் அதிபர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மிகவும் வசதி படைத்தவர் ஆவார். ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் தங்களது மகள் சுனந்தாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் 3 மாதங்கள் அமெரிக்காவில் பொழுது போக்கி விட்டு இருவரும் சென்னை திரும்பி இருந்தனர்.

    இந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடங்கும் முன்னரே இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மகள் சுனந்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரும், ஸ்ரீகாந்த்-அனுராதாவின் உறவினர்களும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    ×