search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு ஒன்றியத்தில் பதிவாளர் ஆய்வு
    X
    கூட்டுறவு ஒன்றியத்தில் பதிவாளர் ஆய்வு

    காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் பதிவாளர் ஆய்வு

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான கோ.க. மாதவன் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ. 53 லட்சத்திற்கான காசோலையை காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளரும் பணியாளர் அலுவலருமான தயாளன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மாதவனிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான முருகன், காஞ்சிபுரம் சரக துணை பதிவாளர் சுவாதி, பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளரும் முதல்வருமான உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அருண்குமார், காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் முரளி மற்றும் ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×