என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இஷாந்த் என்ற மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    காஞ்சிபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் பிளஸ்-2 மாணவி மர்மமாக இறந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளி முன்பு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

    பள்ளி வாகனங்கள் முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்டது. பள்ளியும் சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். கலவரத்துக்கு காரணமானவர்களை மேலும் தேடி வருகிறார்கள்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காஞ்சீபுரம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இஷாந்த் என்ற மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அவர் சரியாக படிக்காததை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அங்குள்ள 2-வது மாடியில் இருந்து மாணவர் திடீரென கீழே குதித்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி தற்கொலையால் பள்ளி சூறையாடப்பட்டு பெரும் கலவரமாக மாறியது. அதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பள்ளி முன்பு இன்று காலை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மாணவன் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி இன்று வழக்கம்போல் செயல்பட்டது.

    • பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மோத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமாக இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை பள்ளி முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது.

    ஏராளமானோர் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் விடுமுறைவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இன்று காலை தனியார் பள்ளிக்ள செயல்படுமா? அல்லது மூடப்படுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.

    இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கியது. மாணவ-மாணவிகள் எப்போதும் போல் பள்ளிக்கு சென்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 354 மெட்ரிக் பள்ளிகளும், 140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது. இன்று அனைத்து மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மோத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசு உதவி பெரும் பள்ளிகள் 860, 842 தனியார் பள்ளிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டது.

    தனியார் பள்ளி இயங்கு வதை கண்காணித்து வருவதாக மாவட்ட முதலன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கியது.

    • மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.
    • இளம்பெண் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி லதா (26). நேற்று இரவு மது போதையில் வீடு திரும்பிய சரவணனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த லதா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி இருந்தனர். சுமார் ரூ.6 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.
    • போலீசார் ராணிப்பேட்டை தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கோனேரி குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோரிடம் ராணிப்பேட்டை, வன்னிவேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பணம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக தெரிகிறது.

    ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும், ஆறு மாதம் கழித்து அதே ஒரு லட்ச ரூபாய்க்கு 2 லட்சம் தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இதனை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி இருந்தனர். சுமார் ரூ.6 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர்களுக்கு கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் முறையான பதில் கூறவில்லை.

    இதனால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பணம் கட்டியவர்கள் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். போலீசார் ராணிப்பேட்டை தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, துவக்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

    படித்த வேலைவாய்ப்பற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இம்முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, துவக்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பிறகு அவர் பேசியதாவது:-

    இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்காண்டு 8 முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.

    மேலும், அரசு வேலை மட்டுமே நம்பி இருக்காமல் தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயத்தொழில் செய்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என அரசு பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    அதில் இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் அருணகிரி, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் கு.பிரகாஷ் வேலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காஞ்சிபுரம் சென்னை போரூர் அடுத்த பூதான்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்மையப்பன்.
    • லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் சென்னை போரூர் அடுத்த பூதான்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்மையப்பன் (வயது 42). இவரது மாமியார் பெத்தனாச்சி (57). இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் சென்றுவிட்டு வீடு திருப்பினர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அம்மையப்பன், பெத்தனாச்சி இருவரும் தூக்கி வீசபட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பருத்தி கொள்ளை அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் 50 வயதான ஆண் நபர் ஒருவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அந்த மொபட் எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் மீது மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    அவர் ஓட்டி வந்த மொபட்டில் பதிவு எண் இல்லை. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன பஸ் டிரைவர் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து எஸ்.சி., எஸ்டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. 8-வது தேர்ச்சி, 10-வது, 12-வது, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங், படித்த வேலை நாடுநர்கள் இந்த முகாமில் கலந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி. வேலைநாடுநர்களுக்கும் அனுமதி இலவசம். மேற்கண்ட கல்வி தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் தங்களுடைய அசல் கல்வி சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நமது முதல்- அமைச்சரின் உடல் நலன் குறித்து என்னிடம் கேட்டறிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
    • நீங்கள் அனைவரும் எனக்கு பெரியார், அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தான் பார்க்கிறேன்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'கலைஞரின் 99' என்ற தலைப்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பொற்கிழிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது முதல்- அமைச்சரின் உடல் நலன் குறித்து என்னிடம் கேட்டறிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தளபதியாருக்கு உங்கள் அன்பு உள்ளவரை எதுவும் ஆகாது. அவர் விரைவில் பூரண குணம் அடைந்து தமிழக மக்களுக்கு பணியாற்றுவார்.

    பல்வேறு இடங்களில் கழக ஆட்சியில் நல்லது நடக்கிறது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் என்னிடம் பல்வேறு மனுக்கள் அளித்துள்ளனர். மனுக்களை முதல்-அமைச்சரிடம் நான் கொண்டு சேர்த்து அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நமது கட்சியில் இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் என பல்வேறு அணிகள் தனித் தனியாக இயங்கினாலும் நாம் அனைவரும் ஒரே அணி. தந்தை பெரியார் அணி, பேரறிஞர் அண்ணா அணி, முத்தமிழறிஞர் கலைஞரின் அணி, நம்முடைய தலைவரின் அணி என அப்படித்தான் நமது பயணம் இருக்க வேண்டும்.

    ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நமது தலைவரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் நிதி உதவி கேட்டு பெற்று வருகிறோம். பெறப்படும் நிதிகள் அனைத்தும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    வரவு வைக்கப்பட்டுள்ள நிதிக்கு மாதம் வங்கி மூலம் வழங்கப்படும் வட்டியினை ஏழை மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவசரத் தேவைக்காக வழங்கப்பட உள்ளது.

    எனவே எந்த ஒரு உதவி தேவை என்றாலும் அதனை மனுவாக அளியுங்கள். அதனை பரிசீலனை செய்து அவர்களுக்கான உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான் கலந்து கொள்ளும் விழாவில் அனைவரும் என்னை சின்னவர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். தயவு செய்து என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்.

    ஏனென்றால் சின்னவர், என்று அழைப்பதால் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது. சின்னவன் என்று அழையுங்கள்' அது போதும்.

    நான் தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் நேரில் பார்த்ததில்லை, ஆனால் விழாவில் கலந்து கொண்ட மூத்த முன்னோடிகள் அனைவரும் பெரியார், அண்ணாவை பார்த்திருப்பீர்கள்.

    இதனால் நீங்கள் அனைவரும் எனக்கு பெரியார், அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தல் அதன்பின் சட்டமன்றத் தேர்தலில் அதன் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியினை தமிழக மக்கள் நமது தலைவருக்கு வழங்கியுள்ளனர்.

    இனி அ.தி.மு.க.வினரை நாம் திட்டப்போவதில்லை. ஏனென்றால் அக்கட்சிக்குள்ளேயே அடித்து கொள்கின்றனர். மேலும் அந்த இயக்கத்திற்கு வரலாறு ஏதும் கிடையாது. ஆனால் நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு. எனவே தமிழக மக்கள் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை".

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    முன்னதாக 2083 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும் 422 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் எந்திரம், 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 188 மாணவ-மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது
    • மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 188 நாடுகளில் இருந்து வீரர்கள் வருகிறார்கள்.

    இதையொட்டி மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    வெளிநாடு வீரர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளதால் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடலோர பகுதியை தூய்மையாக வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 35 கி.மீ., தூரத்தில் உள்ள பனையூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சின்னாடி, கோவளம், பட்டிபுலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடத்தை, முட்டுக்காடு, கானத்தூர், தேவநேரி, வெண்புருஷம் ஆகிய 13 மீனவ கிராமத்தில் உள்ளவர் களுக்கு கடற்கரையை சுத்தமாக வைப்பது எப்படி என்பது குறித்து மாமல்ல புரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    • இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
    • சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இதனால் பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கொழும்புவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை விமானங்கள் சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்கின்றன.

    சென்னையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்ப வரும் இலங்கை விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.

    கடந்த 15 நாட்களில் பாரத் பெட்ரோலியத்தில் மட்டும் சென்னை,கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இலங்கை விமானங்கள் எரிபொருள் நிரப்பி சென்றுள்ளன.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல் கின்றன. அதேபோல் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலும் எரிபொருள் நிரப்பி கொண்டு செல்கிறது.

    நம்மை பொறுத்தவரை சென்னை விமான நிலையத்திற்கு இது பொருளாதார லாபம்தான். ஏனென்றால் மற்ற நாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும்போது அதற்கான வாடகை தொகையை தர வேண்டும். அதுமட்டுமின்றி விமான எரிபொருள் நிரப்பி செல்வதும் வருமானம்தான் என்றார்.

    • தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது,
    • முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது, இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இதனை ஒட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இதில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பேருந்து நிலையம், காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், மேட்டு தெரு, காவலான் தெரு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை இப்போட்டி நடைபெற்றது.

    ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சவீதா கல்லூரி மாணவர் கோகுல் சீனிவாசன் இரண்டாவது , மூன்றாவது இடத்தை அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் பிரிவில் பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த செல்வி காவியா, இரண்டாம் இடத்தை எஸ்.எஸ்.கே.வி பள்ளி மாணவி செல்வி அர்ச்சனா, மூன்றாம் இடத்தை ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.சரண்யா ஆகியோர் பிடித்தனர்.

    இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் பள்ளி கல்லூரி விளையாட்டு துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சாலிகிராமம்,மஜித் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஏ.சி சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார்.

    போரூர்:

    சாலிகிராமம்,மஜித் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஏ.சி சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி ஷர்மிளா பானு(வயது38).

    இவர் கடந்த 8 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த ஷர்மிளா பானு, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×