என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.
    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் உமாபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடிக்காத நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி 2022-2023-ம் ஆண்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சிக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.

    பயிற்சி கட்டணம் ரூ.15,050 ஆகும். விண்ணப்பத்தினை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நேரிடையாக ரூ.100 ரொக்கமாக மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்கள் 28.7.22 தேதி வரையில் (விடுமுறை நீங்கலாக) வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 1.8.22. இதர விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 044-27237699-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார்.
    • மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி நேற்று மாலை பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவர் இடுப்பு எலும்பு முறிந்தும், விலா எலும்பு மற்றும் கால் மூட்டு பகுதிகளில் எலும்பில் விரிசல் ஏற்பட்டு படுகாயத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார். அப்போது வலியால் துடித்த நிலையில், நான் வீட்டில் செல்லப்பிள்ளை. பள்ளி ஆசிரியை ஒருவர் என்னை திட்டியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் மனமுடைந்து 2-வது மாடியில் இருந்து குதித்தேன் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதே போல் கல்வி அதிகாரிகளும் விசாரித்தனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் மாணவி எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    போலீசார் விசாரணையில், மாணவி பயிற்சி தேர்வில் பிட் அடிக்க பேப்பர் வைத்திருந்ததாகவும், அதை உடன்படிக்கும் தோழிகள் ஆசிரியையிடம் கூறியதால் ஆசிரியை கண்டித்துள்ளார். நாளை பெற்றோரை அழைத்து வரவும் கூறியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சல் ஏற்பட்டு வாழ்வா? சாவா? என யோசித்து கொண்டே தோழி ஒருவரிடம் இரண்டு விரல்களை காட்டி தொடும்படி கூறியுள்ளார். விரலை தொட்டவுடன் சற்றும் யோசிக்காமல் மாடியில் இருந்து குதித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    மருத்துவமனையில் இருக்கும் பெற்றோரிடம் இன்று மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    • கோவிலில் காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக இரு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • உண்டியலில் தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக இரு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அவை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோவிலின் ஸ்ரீ காரியம் சுந்தரேசஐயர், கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு நவராத்திரி மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

    இதில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மொத்தம் ரூ. 74 லட்சத்து 40 ஆயிரத்து 102 உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்து இருந்தது. இதேபோல் உண்டியலில் தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • கீழம்பி பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்திய வேனை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகளில் 1.25 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த டிரைவர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • மாணவி பாக்கியலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 14). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை மாணவி பாக்கியலட்சுமி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் கழிவறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாக்கியலட்சுமியை மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

    வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் 28-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், குன்றத்தூர் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், உத்திரமேரூரில் முகாம் நடைபெறுகிறது.

    எனவே மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    சிறப்பு கடன் வழங்கும் மேளா மூலமாக 84 நபர்களுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுய உதவிக் குழுக்களுக்கு, சிறு வணிக கடன் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான கடன் உதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் கூடுதல் பதிவாளர் மு.முருகன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முதன்மை வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், பொது மேலாளர் விஜயகுமாரி, துணை பொது மேலாளர் நாராயணன், வங்கி மேலாளர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து வங்கியின் மேலாண்மை இயக்குனரும் கூடுதல் பதிவாளருமான முருகன் கூறியபோது, இவ்வங்கியின் சிறப்பு கடன் வழங்கும் மேளா மூலமாக 84 நபர்களுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    வேடபாளையம் கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேடபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்களை கையில் எடுத்து அவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். 

    • வளசரவாக்கம் சுப்பிர மணியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ்.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    போரூர்:

    வளசரவாக்கம் சுப்பிர மணியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி மாரியம் மாள். இவர்களது மகன் சரண் (35). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    சரண் மதுபோதைக்கு அடிமையாகி கடந்த 2 ஆண்டுகளாக போதை மறுவாழ்வு மையம் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வீட்டில் ரகளையில் ஈடுபட்டு வந்த சரண் நேற்று இரவு தாய், தந்தை மற்றும் சகோதரியை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    இதையடுத்து சரணின் தாய் முனியம்மாள் வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் முனுசாமி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த சரண் திடீரென சப் -இன்ஸ்பெக்டர் முனுசாமியை சரமாரியாக தாக்கி மாடி படிக்கட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டார் இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கு வந்த கூடுதல் போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரணை பிடித்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப் - இன்ஸ்பெக்டர் முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் சரண் மீது 5பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பக்ரூதின் அலி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.
    • பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்ரூதின் அலி. இவர் மீது அவரது மனைவி வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார்.

    ஆனால் பக்ரூதின் அலி போலீசில் சிக்காமல் வெளிநாடு சென்று விட்டார். இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கத்தாா் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் வந்த பக்ரூதின் அலியின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும்போது அவர் வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.

    இதை அடுத்து பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பக்ரூதின் அலியை கைது செய்து அழைத்து செல்வதற்காக சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    • விருகம்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்.
    • வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    விருகம்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(35). ஆட்டோ டிரைவர். வட பழனி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டான்டில் ஆட்டோவை நிறுத்தி ஓட்டிவந்தார். இவருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பரணி நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் சேகரை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆலந்தூர் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் சூப்பர் வைசராக சங்கரலிங்கம் வேலை செய்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரலிங்கத்தின் செல்போனை பறித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தென்காசி மாவட்டம் புதூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். (வயது24). இவர் சென்னை அடுத்த ஆலந்தூர் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை செய்து வருகிறார். அவர் பணி சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் அருகே சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரலிங்கத்தின் செல்போனை பறித்தனர். அவர்களில் ஒருவனை அக்கம்பக்கத்தினர் உதவியோடு சங்கரலிங்கம் மடக்கி பிடித்து சுங்குவார் சத்திரம் போலீசில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவன் திருவெற்றியூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த பிரதீப் (26) என்பது தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×