என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு கடன் மேளா
சிறப்பு கடன் வழங்கும் மேளா மூலமாக 84 நபர்களுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுய உதவிக் குழுக்களுக்கு, சிறு வணிக கடன் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான கடன் உதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் கூடுதல் பதிவாளர் மு.முருகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதன்மை வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், பொது மேலாளர் விஜயகுமாரி, துணை பொது மேலாளர் நாராயணன், வங்கி மேலாளர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து வங்கியின் மேலாண்மை இயக்குனரும் கூடுதல் பதிவாளருமான முருகன் கூறியபோது, இவ்வங்கியின் சிறப்பு கடன் வழங்கும் மேளா மூலமாக 84 நபர்களுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Next Story






