என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல்
    X

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல்

    • கோவிலில் காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக இரு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • உண்டியலில் தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக இரு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அவை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோவிலின் ஸ்ரீ காரியம் சுந்தரேசஐயர், கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு நவராத்திரி மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

    இதில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மொத்தம் ரூ. 74 லட்சத்து 40 ஆயிரத்து 102 உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்து இருந்தது. இதேபோல் உண்டியலில் தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    Next Story
    ×