என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
- தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது,
- முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது, இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதனை ஒட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பேருந்து நிலையம், காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், மேட்டு தெரு, காவலான் தெரு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை இப்போட்டி நடைபெற்றது.
ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சவீதா கல்லூரி மாணவர் கோகுல் சீனிவாசன் இரண்டாவது , மூன்றாவது இடத்தை அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த செல்வி காவியா, இரண்டாம் இடத்தை எஸ்.எஸ்.கே.வி பள்ளி மாணவி செல்வி அர்ச்சனா, மூன்றாம் இடத்தை ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.சரண்யா ஆகியோர் பிடித்தனர்.
இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் பள்ளி கல்லூரி விளையாட்டு துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






