என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்டி ங்லூதர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தம்பாளையம் பகுதியில் சேவல் சூதாட்டம்

     நடைபெறுவதாக் போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்த போது பணம் கட்டி சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    போலீசார் அவர்களை சுற்று வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காசிபாளையம் பகுதியை சேர்ந்த ரகு என்கிற ரகுவரன் (25), சித்தோடு பகுதியை சேர்ந்த கதிர்வேல் (56), வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (26), கருங்கல்பாளையத்தை சேர்ந்த குணசீலன் (24), சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சென்னிமலையை சேர்ந்த பிரசாந் (23), காசிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா என்கிற காளிதாஸ் (32), சூரம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (27) ஆகிய 8 பேரும் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் ரூ.12,300 மற்றும் 3 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோட்டில் இன்று முழுஊரடங்யையொட்டில் தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முழுஊரடங்யையொட்டில் தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இன்று முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

    மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  

    இந்நிலையில் முழு ஊரடங்கை யொட்டி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

    கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, பவானி லட்சுமிநகர் சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி என 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  

    தேவையின்றி வெளிய சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களை பறிமுதல் செய்தனர்.  

    பன்னீர் செல்வம் பார்க், ஜி.எச். ரவுண்டானா, காளைமாடு சிலை, ஸ்வஸ்திக் கார்னர் போன்ற முக்கியமான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலங்களை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். முக்கியமான கடைவீதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    முக்கியமான சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், சித்தோடு, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இன்று முழு ஊரடங்கு என்றாலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்திருந்தனர். 

    இன்னும் சிலர் நேற்று இரவே ரெயில் நிலையத்திற்கு வந்து விடிய விடிய  காத்திருந்தனர். போக்குவரத்து எதுவும் இல்லாததால் நீண்ட தொலைவில் இருந்து நடந்தே வந்திருந்தனர்.  

    இந்நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கேன் மூலம்  டீ வியாபாரத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் அப்புறப்ப டுத்தினர். 

    தெருக்களில் மக்கள், இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே கூடி பேசிக் கொண்டிருப்பதை காண முடிந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் தெறித்து ஓடினர்.

    மேலும் தேவையில்லாமல் தடையைமீறி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    ஈரோட்டில் இன்று 3-வது வாரமாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சாலைகள் வெறிச்சோடியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 3-வது வாரமாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சாலைகள் வெறிச்சோடியது.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    கடந்த 2 வார முழு ஊரடங்கின் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற ப்பட்டதோ அதுவே இந்த வாரமும் தொடரும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இன்று 3-வது வாரமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில்  இன்று அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர் செல்வம் பார்க் பகுதி, காளைமாடு சிலை, மணிக்கூண்டு, ஆர்.கே. வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், ஜி.எச்.ரவுண்டானா, ரெயில்நிலையம், பெருந்துறைரோடு, மேட்டூர் ரோடு, நசியனூர்ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சம்பத்நகர், பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெருந்துறை, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையும் அடைக்கப்பட்டிருந்தன.

    அதே நேரம் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது.மாநகர் பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டன.  

    இதேபோல் ஓட்டலிலும் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் சேவை வழங்கப்பட்டன.

    இதேப் போல் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ஆய்வுக் கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கின.

    இன்றுமுழு ஊரடங்கை யொட்டி பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

    அதேநேரம் முன் களப்பணியாளர்கள் வழக்கம் போல் இன்று பணிக்கு சென்றனர். பஸ் நிலையங்களில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.

    முழுஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர்
    ஈரோட்டுக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டுக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு வழியாக தினமும் 100&க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.   ரெயில்நிலையத்தில் ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புபடை போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஈரோடு ரெயில்நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும் சென்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில் தன்பாத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வழக்கம்போல்  வந்தது.
     
    அப்போது ஈரோடு ரெயில்வே போலீசார்  ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்  பெட்டியில் சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது டி2 பெட்டியில் சோதனை நடத்திய போது அங்கு கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. 

    அந்த பையை திறந்து பார்த்தபோது அதனுள் 2 கிலோ கஞ்சா  இருந்ததை கண்டு  போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கஞ்சா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  

    ஆனால் தங்களுக்கு இது குறித்து தெரியாது என பயணிகள் தெரிவித்துவிட்டனர்.  

    பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் கோவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்ட மர்மநபர் கஞ்சாவை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

    எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட் டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி அருகே லாரியின் பின் பக்க டயர் வெடித்ததால் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மினி லாரி ரோட்டில் கவிழ்ந்தது.
    டி.என்.பாளையம்:

    கோபி அருகே லாரியின் பின் பக்க டயர் வெடித்ததால் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மினி லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

    பவானி அருகே உள்ள பெரியபுலியூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40) டிரைவர். இவர்  குமாரபாளையத்தில் இருந்து மினிலாரியில்  நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு  டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூர் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.  

    அப்போது கள்ளிப்பட்டி அருகே உள்ள அடசப்பாளை யம்பிரிவு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மினி லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது. 

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நெல்மூட்டைகளுடன் ரோட்டில் சாய்ந்து கவிழ்ந்தது.  

    இதில் லாரியின் முன் பகுதி சேதமானது. இதில் டிரைவர் மாரிமுத்து காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

    தகவலறிந்து பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மற்றொரு  லாரியில் சாலையில் கொட்டி கிடந்த நெல் மூட்டைகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
     
    இதனால் சத்தியமங் கலம்-  பவானி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன.  

    இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதையடுத்து மற்ற  வாகனங்கள் சென்றன.
    ஈரோட்டில் ஒரே நாளில் 1,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொதுமக்கள் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஒரே நாளில் 1,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொதுமக்கள் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

     ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. 

    இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக 7&ந் தேதி தினசரி பாதிப்பு 100&ஐ கடந்தது.

    அதிலிருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் தொற்று பரவலை கட்டுபடுத்த முடியவில்லை.

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1066 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இது நேற்று முன்தின த்தைவிட 90 கூடுதலாகும். இது கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவாக புதிய உச்சமாகபதிவாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 82 ஆக உயர்ந்துள்ளது. 

    நேற்று ஒரே நாளில் 491 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

    இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்து உள்ளது. 

    தற்போது மாவட்டம் முழுவதும் 5,509 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போது பாதிப்பு ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 

    இன்னமும் மக்கள் பொறுப்பில்லாமல் வெளியே வரும்போது முககவசம் அணியாமல் வருவதை காணமுடிகிறது. இதுபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியும் கேள்வி குறியாகவே உள்ளது.

    ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     
    இந்நிலையில் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் விசைத்தறி உரிமையா ளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  விசைத்தறி சங்க செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:&

    கூடுதல் வேலையாக  எடுத்து செய்யும் வேலை களுக்கு தரத்தை பொருத்து கடந்த 7 ஆண்டுகளாக துணிகளுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூலி கொடுத்து வந்தனர். 

    கடந்த 7 ஆண்டுகளில் கூலியை உயர்த்தி கொடுக்காததால் பெட்ரோல், டீசல், மூலப் பொருட்கள், மின்கட்டணம், உள்ளிட்டவைகளின் விலை உயர்வாலும் மற்றும் பல்வேறு காரணங்களால் எங்களால் தொடர்ந்து விசைத்தறி இயக்க முடியவில்லை.

     ஆகவே தற்போது  20 சதவீதம் கூலி உயர்வு கோரி கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  

    தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கிணற்று நீரை சோதித்து அதில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கிணற்று நீரை முழுமையாக சுத்தம் செய்தனர். அப்போது கிணற்றுக்குள் யாரோ மர்ம நபர்கள் செப்டிக் டேங்க் கழிவு நீரை கொண்டுவந்து கொட்டியது தெரியவந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக புதுப்பாளையம் ரோட்டில் பொது கிணறு உள்ளது.

    இந்த கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டியில் தண்ணீரை நிரப்பி அங்கிருந்து குழாய் மூலம் அப்பகுதி மக்களுக்கு வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று ஊராட்சி நிர்வாகம் சார்பாக மேல்நிலைகுடிநீர் தொட்டியை சுத்தம் செய்து. தண்ணீர் நிரப்பி மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இருந்தும் துர்நாற்றம் போகவில்லை.

    அதை தொடர்ந்து கிணற்று நீரை சோதித்து அதில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கிணற்று நீரை முழுமையாக சுத்தம் செய்தனர். அப்போது கிணற்றுக்குள் யாரோ மர்ம நபர்கள் செப்டிக் டேங்க் கழிவு நீரை கொண்டுவந்து கொட்டியது தெரியவந்தது.

    இந்த பொது கிணறு உள்ள பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கழிவு நீர் கொண்டு வந்த ஒரு வேனை பொதுமக்கள் பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த வேனில் இருந்து தான் பொது கிணற்றில் கழிவு கொட்டப்பட்டதா? அல்லது அருகில் கொட்டியதில் நிலத்தடி நீரில் கலந்து கிணற்றுக்கு வந்ததா? என தெரியாத நிலையில் கிணற்று நீர் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

    இந்நிலையில் அந்த கிணற்று நீரை பயன்படுத்திய பொதுமக்களுக்கு சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஏற்பாட்டில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கழிவு நீரை கொண்டு வந்து கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிணற்றின் மேல் பகுதியில் தகர செட் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் குடிநீர் கிணற்றில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முருங்கதொழுவு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சென்னிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்
    ஈரோடு:

    ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

    ஈரோடு திண்டல் அடுத்த வீரப்பம்பாளையம், செங்காடு செல்வம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது52). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் திண்டலில் நின்று கொண்டிருந்தார். 

    அப்போது வாலிபர் ஒருவர் ரெயில்வேயில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில்குமார் ஆட்டோவில் அந்த வாலிபரை ஏற்றுக்கொண்டு ரெயில்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

    அப்போது வீரப்பம்பாளையம்பிரிவு டாஸ்மாக்கடை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது அந்த வாலிபர் திடீரென ஆட்டோவை நிறுத்த சொன்னார். செந்தில் குமாரும் ஆட்டோவை நிறுத்தினார்.

    அப்போது அந்த வாலிபர் எனக்கு கொஞ்சம் மது வாங்கி தாருங்கள் என்று கூறி ரூ.150-ஐ செந்தில் குமாரிடம் கொடுத்தார்.  

    ரெயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதால் நான் டாஸ்மாக் கடைக்கு செல்வது  சரியாக  இருக்காது. எனவே நீங்கள் சென்று மது வாங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில்குமார் மது வாங்க அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் மதுவை வாங்கி கொண்டு திரும்பி வந்தபோது ஆட்டோ மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    செந்தில்குமார் மது வாங்க சென்ற சமயத்தில் அந்த வாலிபர் ஆட்டோவைத் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து செந்தில் குமார் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு திண்டல் அடுத்த வீரப்பம்பாளையம், செங்காடு செல்வம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் திண்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் ரெயில்வேயில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில் குமார் ஆட்டோவில் அந்த வாலிபரை ஏற்றுக்கொண்டு ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

    அப்போது வீரப்பம் பாளையம் பிரிவு டாஸ்மாக் கடை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது அந்த வாலிபர் திடீரென ஆட்டோவை நிறுத்த சொன்னார். செந்தில் குமாரும் ஆட்டோவை நிறுத்தினார்.

    அப்போது அந்த வாலிபர் எனக்கு கொஞ்சம் மது வாங்கி தாருங்கள் என்று கூறி ரூ.150-ஐ செந்தில் குமாரிடம் கொடுத்தார்.  ரெயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதால் நான் டாஸ்மாக் கடைக்கு செல்வது  சரியாக  இருக்காது. எனவே நீங்கள் சென்று மது வாங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார்.

    இதை யடுத்து செந்தில்குமார் மது வாங்க அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் மதுவை வாங்கி கொண்டு திரும்பி வந்தபோது ஆட்டோ மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். செந்தில்குமார் மது வாங்க சென்ற சமயத்தில் அந்த வாலிபர் ஆட்டோவைத் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து செந்தில் குமார் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு சூளை பகுதியில் டாஸ்மாக் கடைக்கு தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூளை பகுதியில் பாருடன் கூடிய ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் பூட்டி சென்றனர்.

    இன்று காலை கடையை ஊழியர்கள் திறந்தனர். அப்போது கடையில் அட்டைப் பெட்டியில் இருந்த 350-க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மர்ம நபர்கள் 2 பேர் வருவதும், பின்னர் அவர்கள் பெட்ரோல் ஊற்றி மதுக்கடையில் தீ வைத்ததும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து மதுக்கடையை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார் கள். மேலும் இந்த தீ விபத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் எரிந்து சேதமானது.

    அந்தியூர் பகுதியில் பாம்பு மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்ட போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்தானது.
    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் பாம்பு மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்ட போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்தானது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் வழியாக சேலம் மாவட்டம் கொளத்தூருக்கு, வாழைக்காய் லோடு ஏற்றி வருவதற்காக  லாரி ஒன்று சென்றது.

    சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

    அந்தியூர் பெரிய ஏரி அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்பு பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்ட டிரைவர் வரதராஜன் பாம்பு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக்கை போட்டார்.

    இதில் நிலை தடுமாறிய லாரி நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. உடனே டிரைவர் வரதராஜன் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர். 

    இந்த விபத்தில் வரதராஜன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×