என் மலர்tooltip icon

    ஈரோடு

    மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    மனைவி  பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனியை சேர்ந்தவர் மருதாசலம் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யா (41). இவர் சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
     
    மருதாச்சலத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சமாதானப்படுத்த வந்த சத்யாவின் தாயாரை மருதாசலம் செருப்பால் அடித்துள்ளார். 

    இதனால் கோபமடைந்த சத்யா கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மருதாச்சலம் மனைவியிடம் சமாதானம் பேசி குடும்ப நடத்த அழைத்துள்ளார். 

    ஆனால் சத்யா வர மறுத்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த மருதாசலம் நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். 

    அவரது உறவினர் வீட்டுக் கதவைத் தட்டியபோது பதில் ஏதும் வராததால் சந்தேகமடைந்து  ஜன்னலை எட்டி பார்த்துள்ளார். அப்போது மருதாச்சலம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மருதாச்சலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொரோனா பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    பவானி:

    கொரோனா பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு உள்பட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.    இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.   

    இதே போல் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வழிபாட்டு தலங்களில்  பக்தர் கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 23-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள  கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தன.

    இதே போல் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய 3 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அனுமதி அளிக்கப் பட்டது.

    இதையொட்டி கொரோனா தடுப்பு விதிமுறை களுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் வரும்  27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்கள் மட்டுமே பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட மற்றும் பரிகாரம், திதி கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

    மேலும் வரும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் மீண்டும் புனித நீராட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டள்ளது.

    இதனால் இன்று காலை முதல் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன் னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். 

    இதையொட்டி ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன்  முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர்.

    ஈரோட்டில் 3 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்களில் பொதுமக்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் 3 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்களில் பொதுமக்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களான   வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் கோவில்களில் சென்று வழிபட பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. 

    இந்த நாட்களில் வழக்கமாக கோவில்களில் நடைபெறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. 

    இருந்தாலும் பொதுமக்கள் கோவிலின் வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர். இந்நிலையில் மூன்று நாட்கள் தடைகளுக்குப் பிறகு இன்று வழக்கம்போல் கோவில்கள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டது. 

    இதையடுத்து இன்று காலை முதல் பொதுமக்கள் கோவில்களில் சென்று சாமிதரிசனம் செய்தனர். 

    ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

    இதேபோல் சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், கோபி பச்சைமலை பவளமலை கோவில், கொண்டத்து காளியம்மன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோட்டை பெருமாள், ஈஸ்வரன் கோவில்களில் இன்று காலை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    நேற்று முழு ஊரடங்குக்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து பஸ்களில் கூட்டம் அலைமோதியது. -
    ஈரோடு:

    நேற்று முழு ஊரடங்குக்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
    -
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அவை அமலில் இருந்து வருகிறது. 

    இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

    நேற்று முழு ஊரடங்கை யொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பொதுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் முழு ஊரடங்கையொட்டி முக்கியச்சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.  

    பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல் பொது போக்குவரத்து தொடங்கியது. 

    இன்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

    ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை விஷயமாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள்  பஸ் போக்குவரத்தை நம்பி உள்ளனர். 

    குறிப்பாக சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த தனியார் பஸ், அரசு பஸ்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இன்று இருந்தது.  கொரோனா காலகட்டம் என்பதால் பஸ்களில் பயணம் செய்ய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

    முக்கியமாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இன்று சில பயணிகள் முக கவசம் அணியாமல்  பஸ் ஏற வந்தனர். அவர்களை கண்டக்டர் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தினார். பெரும்பாலும் பயணிகள் முககவசம் அணிந்து இருந்தனர்.
    அந்தியூர் அருகே வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மீனவர் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (23)இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் குடும்பத்தோடு தற்சமயம் அரசு பள்ளி அருகில் குடியிருந்து வருகிறார். 

    இந்த நிலையில் இன்று காலை அவரது அம்மாவிடம் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு தனது சொந்த வீடான மீனவர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைமீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர் உயிரிழந்தாக டாக்டர் தெரிவித்தார். 

    இதுகுறித்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகின்றார். இறந்த பார்த்திபனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    மேலும் அவருக்கு உடல் நிலை சிறிது நாட்களாக சரி இல்லை என்று கூறப்ப டுகிறது.
    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு சூளை பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனங்கள் திருட்டுபோனது. அது சம்பந்தமாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வீரப்பன்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் சித்தோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார்(23) என்பது தெரியவந்தது. மேலும் சூளையில் மோட்டார் சைக்கிள் திருட்டு போன வழக்கில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவமும் விக்னேஷ்குமார் உருவமும் ஒத்துப்போனதை போலீசார் கண்டுபிடித்தனர். 

    அவரிடம் போலீசார் மேற்கண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் விக்னேஷ்குமார் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஷ்குமாரிடம்  இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதன் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஈரோட்டில் காரில் ஆடு திருடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் காரில் ஆடு திருடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம், வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 42).சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். 
     
    இந்நிலையில் அந்த ஆடுகள் வெள்ளக்கால்மேடு பகுதியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் கார் ஒன்று வந்து நின்றது. 

    காரிலிருந்து 2 வாலிபர்கள் இறங்கி திடீரென ஆட்டை திருடிக் கொண்டு காரில் சென்றனர். இதனை அந்த வழியாக வந்த கோவிந்தசாமி உறவினர் ஒருவர் பார்த்து அவருக்கு  தகவல் தெரிவித்தார்.

    பின்னர் கோவிந்தசாமி உறவினர்களுடன் ஆட்டை திருடிய நபர்களை தேடி சென்றார். அப்போது ஈரோடு ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடை அருகே ஆடை திருடி சென்றவர்கள் கார் நின்றது. 

    கோவிந்தசாமி மற்றும் உறவினர்கள் காரில் இருந்தவர்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர்கள் சூளை பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா, திண்டல் நகரை சேர்ந்த சதீஸ் என கூறினர். அப்போது திடீரென அவர்கள் இருவரும் ஆட்டையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டு  தப்பி ஓடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுத்தை நடமாடிய பாப்பாங்குளம் பகுதியையொட்டி எந்த வனப்பகுதியும் இல்லாத நிலையில் சிறுத்தை எப்படி இங்கு வந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ளது பாப்பாங்குளம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாறன் (62). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சோளம் பயிரிட்டு உள்ளார். இவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் வரதராஜ் (61).

    மாறன் இன்று காலை 7 மணியளவில் தனது தோட்டத்தில் சோள பயிர்களை அறுவடை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை திடீரென மாறன் மீது பாய்ந்தது.

    இதையடுத்து மாறனை கடுமையாக தாக்கியது. மாறனும் சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க கட்டிப்புரண்டு போராடினார். ஆனாலும் சிறுத்தை விடாமல் அவரை தாக்கியது. இதில் மாறனுக்கு நெஞ்சு, வாய் உள்பட உடல் முழுவதும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    அப்போது மாறன் வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தை சேர்ந்த விவசாயி வரதராஜ் ஓடி வந்தார். அப்போது மாறன் சிறுத்தையுடன் போராடி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து வரதராஜும் சிறுத்தையை விரட்ட முயன்றார். அப்போது அவரையும் சிறுத்தை தாக்கியது. இதில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறுத்தை ஒரே நேரத்தில் 2 பேரையும் தாக்கிக் கொண்டு இருந்தது.

    அவர்கள் சிறுத்தையுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வெங்கடாச்சலம் (48) என்ற விவசாயியையும் சிறுத்தை தாக்கியது. இதில் அவர் தப்பி ஓடி விட்டார். ஒரு கட்டத்தில் விவசாயிகள் மாறன், வரதராஜ் ஆகியோரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பியது.

    விவசாயிகளை சிறுத்தை தாக்கியது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் காயம் அடைந்தவர்களின் மேல் இருந்த சிறுத்தையின் கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை தாக்கியது உறுதியானது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். மேலும் சிறுத்தை அந்த பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தனியாக யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சிறுத்தையை பிடிக்க அந்த பகுதியில் கூண்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 2 விவசாயிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறுத்தை நடமாடிய பாப்பாங்குளம் பகுதியையொட்டி எந்த வனப்பகுதியும் இல்லாத நிலையில் சிறுத்தை எப்படி இங்கு வந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பாப்பாங்குளம் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து விவசாய தோட்டம் வழியாக வழிதவறி சிறுத்தை வந்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

    மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக இன்று காலை பாப்பாங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    எலத்தூரில் இருந்து அவினாசிக்கு மொபட்டில் வேலைக்கு சென்ற பெண் போலீஸ் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சித்ராதேவி (37). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக வேலைப்பார்த்து வருகிறார்.

    சித்ராதேவிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தினமும் எலத்தூரில் இருந்து அவினாசிக்கு மொபட்டில் வேலைக்கு சென்று வந்தார். இதே போல் நேற்று காலையும் சித்ராதேவி வழக்கம் போல் சீருடையில் வேலைக்கு புறப்பட்டார்.

    இவர் தனது மொபட்டில் எலத்தூர் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக திடீரென ஒரு தெருநாய் ரோட்டை கடந்தது.

    அப்போது சித்ராதேவி ஓட்டிவந்த மொபட் மீது நாய் திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார். இதில் சித்ரா தேவிக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மேலும் இடது கையில் சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சித்ராதேவியை மீட்டனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சித்ராதேவியை பரிசோதனை செய்த போது அவர் சுயநினைவை இழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த போது சித்ராதேவியின் பின்பக்க தலையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    ஈரோடு:

    ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    ஈரோடு, வீரப்பன் சத்திரம் சி.என்.சி. கல்லூரி அருகே வசிப்பவர் தமிழ் செல்வன் என்கிற தமிழ் (வயது 28). இவர் மீது பல்வேறு வழிப்பறி, செல்போன் திருட்டு, வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழ்செல்வன் மீது குண்டர்  தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு  பரிந்துரை செய்தார். 

    அதன்பேரில்  தமிழ்ச் செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதற்கான உத்தரவு நகலை போலீசார் கோவையில் உள்ள சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

    ஈரோட்டில் தடையை மீறி மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தடையை மீறி மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது. தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தி ருந்தனர்.

    இதையடுத்து நேற்று மாவட்டம் முழுவதும் போலீசாருடன் மதுவிலக்கு  பிரிவு போலீசார் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.பல்வேறு இடங்களில் சோத னையிலும் ஈடுபட்டனர்.

    பங்களாபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் சத்தி-அத்தாணி ரோடு, கொண்டியம் பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அந்த நபர் அதேப்பகுதியை சேர்ந்த பூவரசன் (23) என்பதும் அனுமதியின்றி மதுவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 35 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

    இதேபோல் பவானிசாகர், வெள்ளோடு, அரச்சலூர், திங்களூர், ஆப்பக்கூடல் போன்ற பகுதியில் அனுமதியின்றி மதுவை விற்பனைக்கு வைத்திருந்த மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேலும் 90 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் கருப்பசாமி தலைமையில் போலீசார் வாய்க்கால் மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தாங்கள் கொண்டு வந்த மது பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களிடம் இருந்து 72 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
    ஆசனூர் பகுதியில் கஞ்சாசெடியை பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது செய்யபட்டார்.
    தாளவாடி:

    ஆசனூர் பகுதியில் கஞ்சாசெடியை பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது செய்யபட்டார்.

    ஈரோடு மாவட்டம் கேர்மாளம் குருப் ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவர் தழுதி கேர்மாளம் என்ற பகுதியில் ஒரு விவசாயி கஞ்சா பயிரிட்டு வளர்த்து வருவதாக தாளவாடி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது கொண்டப்பா (40) என்ற விவசாயிக்கு சொந்தமான சோளக்காட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது சோள பயிருக்கு இடையே கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. கஞ்சா  செடிகள் 4 அடி வரை  வளர்ந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த 135 கஞ்சா  செடிகளையும்  போலீசார் அகற்றினர்.

    அந்த செடிகளில் இருந்து மொத்தம் 10அரை கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக  விவசாயி கொண்டப்பாவை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் யாரிடம் இருந்து கஞ்சா விதைகளை வாங்கினார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×