search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித நீராட"

    • கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
    • புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. சிறந்த பரிகார தலமாகவும் உள்ளது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குளித்து திதி, தர்ப்பணம் மற்றும் திருமண தோஷம் நீக்கும் பரிகாரங்கள் செய்து வருகிறார்கள்.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும். மேலும் ஆடி பிறப்பு மற்றும் ஆடி 18 நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அம்மாபேட்டை, பவானி, ஈரோடு மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் குளிக்கும் இடத்தில் உள்ள படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதனால் கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொடுமுடி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பக்தர்கள் குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ×