என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் வெளிமாவட்டத்திற்கான பணியிடமாறுதல் கவுன்சிலிங் இன்று 2-வது நாளாக நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் வெளிமாவட்டத்திற்கான பணியிடமாறுதல் கவுன்சிலிங் இன்று 2-வது நாளாக நடந்தது.

    தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 2021-2022-ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
     
    இதில் அரசு, மாநகராட்சி, நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்க ளுக்கும் கலந்தாய்வு நடைபெற்ற உள்ளது. 

    ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் பணி மூப்பு அடிப்படையில் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் களுக் கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு  நேற்று நடந்தது. 

    ஈரோடு பவளத்தாம் பாளையத்தில் உள்ள ஏ.இ.டி.பள்ளியில் கலந்தாய்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 17 தலைமையா சிரியர்கள் கலந்தா ய்வில் பங்கேற்றனர். இதில் 12 பேர் பணியிட மாறுதல் பெற்றனர். 5 பேர் பங்கேற்க வரவில்லை.

    இதை தொடர்ந்து இன்று 2-வது நாளாக  ஈரோடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் களுக்கான வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வையி ட்டார். இந்த கலந்தாய்வு வரும் பிப்ரவரி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வாரச்சந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய் க்கிழமை மாலை வரை நடைபெறும்.
     
    இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    இங்கு சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஜவுளி சந்தை கூடியது. இரவு நேர ஊரடங்கு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதேபோல் உள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர்.

    இதனால் சில்லரை வியாபாரம் கடந்த வாரத்தை விட குறைவாகவே நடைபெற்றது. இன்று வெறும் 5 சதவீதம் மட்டுமே சில்லரை வியாபாரம் நடை பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இன்னும் சில நாட்களுக்கு இதே நிலைமைதான் தொடரும் என தெரிவித்தனர். பொதுவாக ஜவுளி சந்தை நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இரவு நேரங்களில்தான் பயணம் மேற்கொள்வார்கள். 

    ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வர முடியவில்லை. இதனால் கடந்த 3 வாரமாக ஜவுளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15--ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. 

    அதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ந் தேதி முடிவடைந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  அரசு உத்தரவின்படி மேலும் 10 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்டடது.

    இந்நிலையில் இன்று காலை  முதல் நிறுத்தம் கீழ்பவானி வாய்க்காலுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.81 அடியாகவும், நீர் இருப்பு 27.80 டி.எம்.சியாகவும் உள்ளது.

    அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1521 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு 800 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீர் என மொத்தம் 900 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மழைக்காலத்தின் போது கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல நாட்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பயிர் சாகுபடி பராமரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்போது தான் பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் வந்துள்ளன. 

    அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு  தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே கால்வாய் அடைப்பு ஏற்பட்ட போது தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்ட நாள்களைக் கணக்கிட்டு கூடுதலாக மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட்டு பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோட்டில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா  தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
     
    கொரோனாவை கட்டுப் படுத்தும் வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 

    ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வந்தனர். இதையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.500&க்கான ரசீது புத்தகம்  வராததால் போலீசார் அபராதம் விதிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ரூ.500&க்கான அபராத ரசீது புத்தகம் ஈரோடுக்கு வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் இந்த ரசீது புத்தகம் அனுப்பப்பட்டது. 

    இதையடுத்து இன்று முதல் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று முதல்  ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர் களுக்கு ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனர். 

    மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, பஸ் நிலையம் அருகே என மக்கள் கூடும் இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தனர். 

    இதேப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் போலீசார் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் ரூ.500 அபராதம் விதித்தனர்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானிசாகர் போன்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானிசாகர் போன்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசி வருகிறது. 

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனி காரணமாக கடும் குளிர் வாட்டி வருகிறது.வனப்பகுதிகளான தாளவாடி, ஆசனூர், தலமலை, தொட்டகாஜனூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனியால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. 

    மேலும் காலை வரை  இருட்டாக காணப்படுகிறது. மலைப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் காலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப் படியே சென்று வருகின்றனர்.

    மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அதிகாலையிலே எழுந்து வேலைக்கு செல்வார்கள். ஆனால் கடும் குளிர் காரணமாக  பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டி வருகிறார்கள். 

    ஒரு சிலர் ஸ்சுவட்டர் மற்றும் குல்லா அணிந்து கொண்டு வெளியில் செல்கின்றனர். மலைப்பகுதிகளில் மாலை நேரத்திலேயே குளிர் அடிக்க தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல செல்ல நள்ளிரவில் கடும் குளிர் காணப்படுகிறது.

    மேலும் அந்தியூர் அடுத்த பர்கூர் மற்றும்  சுற்று வட்டார மலைப்பகுதிகளில் பனி காரணமாக இரவு மற்றும் நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை  குளிர் வாட்டுகிறது. 

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வனப் பகுதிகளில் குளிர் காற்று வீசிகிறது.

    சத்தியமங்கலம், பண்ணாரி, கோபி, கவுந்தப்பாடி, சித்தோடு பவானி, அந்தியூர், பெருந்துறை, சென்னிமலை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடும் குளிர் நிலவிவருகிறது.
    கோபிசெட்டிபாளையம் அருகே துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தங்கமணி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (53). இவர்களுக்கு வெங்கடாசலம், ரகுநாதன் என்ற 2 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.

    வெங்கடாசலம் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகுநாதன், பழனயம்மாளின் வீட்டின் அருகிலேயே குடியிருந்து ஈரோட்டில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் பழனியம்மாள் 2 நாள்களுக்கு முன்பு கோவையில் உள்ள மகன் வெங்கடாசலம் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை பழனியம்மாளின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரகுநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். ரகுநாதன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டிற்குள் பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டின் அறையில் 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், விஜயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கவுந்தப்பாடி:

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது கவுந்தப்பாடி அடுத்த ஓடத்துறை சுடுகாட்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். 

    அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (30), ஸ்ரீரங்கன் (42), வடிவேலன் (31), வீரக்குமார் (31), மலேஸ்வரன் (22) என தெரியவந்தது. இவர்கள் ரூ.250 வைத்து சூதாடியதும் தெரிய வந்தது. 

    இதுகுறித்து கவந்தபடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் சிட்டு கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.  

    இதேபோல் போலீசார் அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கார்த்தி, அருண்குமார், முருகன் ஆகியோரை 3 பேரை கைது செய்து பணம் மட்டும் சிட்டு கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
    ஈரோட்டில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் 27 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் 27 சதவீதம் பேருக்கு  தொற்று உறுதி செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 31-ந் தேதி ஒரு நாள்  பாதிப்பானது 22 பேருக்கு இருந்து வந்த நிலையில், நேற்று நிலவரப்படி ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 1199 ஆக உயர்ந்துள்ளது.

    காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

    ஒரு சிலர் பரிசோதனைக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று வரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 6,848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 721 பேர் இறந்துள்ளனர். 

    இதனிடையே தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கையை மருத்துவத் துறை அதிகப்படுத்தி உள்ளது.

    கொரோனா அறிகுறி களுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் தொழிற்சாலைகள், பொது இடங்களில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்படுகின்றது. 

    தொடக்கத்தில் பரிசோதனை மாதிரிகள் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாதிரிகள் எடுக்கும் எண்ணிக் கையானது 2 மடங்காக அதிகரிக்கப்பட்டு ள்ளது. 

    நாளொன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோருக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதில் 27.8 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு வருகிறது. 

    இதனால் அனைத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், சளி என சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

    இன்னும் 2 வாரத்திற்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வலியுறுத் தியுள்ளனர்.
    பவானியில் இன்று காலை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி திருநீல கண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து முதாட்டி லட்சுமி தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பொன்னம்மாள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    -
    குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுவரன் முருகானந்தம், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிஷாந்த் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இன்று ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. 

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலைய இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. 

    இதேபோல் இன்று ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

    ஈரோட்டில் முழு ஊரடங்கை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த 5 கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் முழு ஊரடங்கை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த 5 கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கும் கடை பிடிக்கப்பட்டு வரு கிறது. இதே போல் நேற்று (ஞாயிற்க்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

    ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் 1,500-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

    இதைப்போல் 14 சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப் பட்டனர்.

    ஊரடங்கை மீறி சுற்று பவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார். 

    ஆனால் நேற்று ஊரடங்கை மீறி பலர் தேவையின்றி சுற்றித் திரிந்ததை காண முடிந்தது.  ஈரோடு மாநகர் போரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. 

    சிலர் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றி வந்தனர்.  இவ்வறாக நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கி மீறியதாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  

    மேலும் 20 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முழு ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். 
    ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

    தற்போது மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் தொற்று பரவலை கட்டுபடுத்த முடியவில்லை. 

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1220பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 154 கூடுதலாகும்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர் களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 554 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

    இதனால் இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை 721 ஆக  உள்ளது.

    தற்போது மாவட்டம் முழுவதும் 6,291 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்ப டுத்தும் வகையில் மாவட்ட நிர்வா கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

    ஈரோடு மாவட் டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளில் படுக் கைகள் தயார் நிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,574 ஆக்சிஜன் வசதி யுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. 

    இதில் நேற்று காலை வரை 114 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.  இதேபோல் ஆக்சிஜன் வசதி இல்லாத 849 படுக்கைகள் உள்ளன.  

    இதில் தற்போது வரை 135 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. ஐ.சி.யூ வார்டில் சிகிச்சை அளிப்பதற்காக 437 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.  இதில் 10 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 

    மாவட்டம் முழுவதும் 2601 படுக்கைகள் காலியாகவே உள்ளது.தற்போது பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள்  வீட்டு தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ×