என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது .
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது . 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு  ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

    குறிப்பாக மாநகராட்சி பகுதியில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பில் 60 சதவீதம் மாநகராட்சி பகுதியில் பதிவாகி வந்தது.

    இதனால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

    இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

    மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 1,800 முதல் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

    இது போன்ற தடுப்பு நடவடிக்கையால் தற்போது மாநகர் பகுதியில் கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதற்கு மாறாக தற்போது கிராமப்புறங்களில்  கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக ஒரே நாளில் 1302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 73 கூடுதலாகும்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. 

    நேற்று ஒரே நாளில் 901 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 722 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 7, 734 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றைய தினசரி பாதிப்பில் மாநகர் பகுதியில் மட்டும் 356 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பாதிப்புகள் அனைத்தும் கிராமப்புறப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. 

    மாநகர் பகுதியில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கிராமப் புறங்களில் தற்போது பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

    இதற்கு முக்கிய காரணம் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காதது தான். 

    இப்பவும் கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. பெண்கள் தெருவில் உள்ள கடைக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்வதில்லை. 

    பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

    மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, இருமல், காய்ச்சல் , தலைவலி உடல் சோர்வு போன்ற பாதிப்புடன் மக்கள் அதிக அளவில் சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல், தலைவலி பரவி வருகிறது. 

    குழந்தைகள், முதியவர்கள் வீட்டில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடியும் என மொத்தம் 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பவானிசாகர் அணையின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையின் மூலம் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் விளங்கி வருகிறது. அங்கு மழைப்பொழிவு இருந்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும்.

    கடந்த ஆண்டில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் 2 முறை அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதிகபட்சமாக கடந்த நவம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கியது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது.

    இதற்கிடையே கடந்த 25-ந்தேதியுடன் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 331 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடியும் என மொத்தம் 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்
    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தபகுதியில் சட்டமேதை டாக்டர்.அம்பேத்கருக்கு முழு உருவ சிலை அமைக்கவேண்டும் என நீண்ட வருடமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதேபோல்  புரட்சியாளர் அம்பேத்கர் சிலை குழு ஏற்படுத்தப்பட்டு அதில் 32 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அம்பேத்கர் சிலை வைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி சிலை வைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

    இதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சிலை வைக்க நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக கடந்த 22-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வம் பார்க்கில் அம்பேத்கர் சிலை வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

    இதற்காக ஹைதராபாத்தில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டது. இதற்கான செலவையையும், சிலை வைப்பதற்கான செலவையையும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. ஏற்று கொண்டது.

    நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள வளாகத்தில் கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது. சிலை மஞ்சள் துணியால் மூடப்பட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து குடியரசு தினமான இன்று சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டது. இது அரசு, கட்சி சார்பற்ற நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக 32 அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள்  இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த பணியை அமைச்சர் முத்துசாமி இன்றுகாலை பார்வையிட்டார்.

    இதனையடுத்து இன்றுமதியம் 1.15 மணியளவில் சென்னையிலிருந்து கானொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிலை திறப்பு விழா எளிமையான முறையில் நடந்தது. விழாவை காணும் வகையில் 2 டிஜிட்டல் எல்.இ.டி.திரை அமைக்கப்பட்டிருந்தது. 
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது-.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது-.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1,229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 30 கூடுதலாகும்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 19ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 742பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 11 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால்  722 பேர்  இறந்துள்ளனர்.  தற்போது மாவட்டம் முழுவதும் 7, 332 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, இருமல், காய்ச்சல் , தலைவலி உடல் சோர்வு போன்ற பாதிப்புடன் மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல், தலைவலி பரவி வருகிறது. குழந்தைகள், முதியவர்கள் வீட்டில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச உலக அளவிலான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச உலக அளவிலான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருதான டிஎஸ்2 என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

    நீலகிரி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 1455 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம், 2013ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக் கப்பட்டது. அப்போது சுமார் 30 புலிகள் இருந்ததாக அப்போதையை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 
     
    அடர்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்பவெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம்  புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. அதே போல் இந்த புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூர், பிஆர்ஹில்ஸ், ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவு,மலை மதேஸ்வரர் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிற இடங்களுக்கு புலம் பெயர்ந்து இரை தேடியும்  புதிய எல்லையை பிரவேசிக்கவும் இயலுகிறது. இதனால் புலிகள் எண்ணிக்கை தற்போது இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. 

    2013ம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில்  தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷ்யா, சைனா, இந்தோனேஷியா, பங்களாதேஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சர்வேஷன் அண்டு டைகர் டைகர் ஸ்டேன்டேடு, வேல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள்  கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பு 2010 ம் ஆண்டு 10 ஆண்டுகளில்  புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. 

    2022ம் ஆண்டில் இரு மடங்காக உயரத்திய நாட்டிக்கு  டிஎஸ்2 எனும் சர்வதேச விருது வழங்க கூட்டமைப்பு அறிவித்தது.இதன்படி சர்வசேத அளவில்  10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியதற்காக  டிஎஸ்2  என்ற விருதை முதல் பரிசாக இந்தியாவில் தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கும், இரண்டாவது விருதாக  நேபாளம் பார்டியா தேசிய பூங்காவுக்கும் வழங்கியுள்ளது.
     
    தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி பழங்குடியின மக்களின் ஆதரவு போன்வற்றால் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தாண்டு கொரானா பிரச்சனை காரணமாக ஆன்லைன் கானொளி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் வழங்குகின்றன.
    ஈரோட்டில் ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இருப்பினும் பலர் முககவசம் அணியாமல் வந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.500-க்கான ரசீது புத்தகம் வராததால் போலீசார் அபராதம் விதிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ரூ.500-க்கான அபராத ரசீது புத்தகம் ஈரோடுக்கு வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் இந்த ரசீது புத்தகம் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் போலீசார் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

    மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, பஸ் நிலையம் அருகே என மக்கள் கூடும் இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தனர்.

    இதேப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்யமங்கலம், கொடுமுடி மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதன் மூலம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுபோல் முககவசம் அணியாமல் வந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.

    கோபி அருகே செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    கோபி அருகே செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணாநகர், வடக்கு வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செல்வி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களின் மகள் ஜெயக்கொடி(17). இவர் பங்களாப்புதூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில்  ஜெயக்கொடி நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

    இதை தாய் செல்வி கண்டித்ததால் மனமுடைந்த ஜெயக்கொடி நைலான் கயிற்றால் தூக்கிட்டுக் கொண்டார்.

    பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியோடு மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஈரோட்டில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இருப்பினும் பலர் முககவசம் அணியாமல் வந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.500-க்கான ரசீது புத்தகம் வராததால் போலீசார் அபராதம் விதிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில்  ரூ.500-க்கான அபராத ரசீது புத்தகம் ஈரோடுக்கு வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் இந்த ரசீது புத்தகம் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்றுமுதல் போலீசார் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.  

    மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, பஸ் நிலையம் அருகே என மக்கள் கூடும் இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தனர்.

    இதேப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. 
    இதன்மூலம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 

    இதுபோல் முககவசம் அணியாமல் வந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.
    சென்னிமலை முருகன் கோவிலில் தைமாதத்தையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தைமாதத்தையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழும் சென்னிமலை முருகன் கோவிலில் இந்தஆண்டு கொரோனா தாக்கம் மூன்றாவது அலை பரவலை தொடர்ந்து தேராட்டம் இல்லாமல், பக்தர்களுக்கு அனுமதியின்றி தைப்பூசவிழா நடந்தது. 

    அதைதொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற வியாழக்கிழமை மட்டும் அனுமதி இருந்தது. தொடர்ந்து மலை ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. 

    வழக்கமாகவே வாரம்தோறும் செவ்வாய்கிழமை சென்னிமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானை அதிக அளவில் தரிசனம் செய்ய பக்தர்கள் வருவது வாடிக்கை. 

    நேற்று தைப்பூசம் மற்றும் மகாதரிசன நாளுக்குப் பிறகு வந்த முதல் செவ்வாய்கிழமை என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்து சென்றனர். 

    முககவசம் அணிந்து வந்த பக்தர்களை மற்றும் கோவில் பணியாளர்கள் கோவிலுக்குள் அனுமதித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாரதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாரதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல்அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1700 வரை பதிவானது. முன் களப்பணியாளர்கள், குழந்தைகள், வாலிபர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.

    இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 

    இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது.

    2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

    இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். தற்போது மீண்டும் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

    ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  எனினும் மாவட்டத்தில் தற்போது வரை தினமும் 4ஆயிரம் முதல் 4,500 வரை மட்டுமே தினசரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 25லட்சத்து 58 ஆயிரத்து 409பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    கருங்கல்பாளையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு போன்றவை அதிகமாக ஏற்படுகிறது. முன்கள பணியாளர்களான போலீசையையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

    ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 2 இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

    இந்நிலையில் கருங்கல்பாளையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    தடுப்பு நடவடிக்கையாக கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே இருந்து வாங்கப்பட்டு வருகிறது.

    ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    ஈரோடு கருங்கல் பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான லோகநாதன் என்பவர் தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் என பல தரப்பில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறபடுகிறது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பு லோகநாதன் தனிநபர் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இது குறித்து வக்கீல் லோகநாதன் கூறும்போது:--

    பள்ளியின் நுழைவாயிலில் இருந்து போர்டிகோ வரைக்கும் சிமெண்ட் தளம் போட வேண்டும். பள்ளிக் கட்டிடங்கள், வெளிப்புறம் முகப்பு, சுற்றுசுவர் புனரமைப்பு செய்து வர்ணம் பூச வேண்டும், சுற்று சுவர் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஓவியங்கள் மூலம் பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    பள்ளியை சுற்றி காணப் படுகின்ற சுகாதாரமற்ற சுற்றுச்சூழலை உடனடியாக அகற்றி பாதுகாப்பான சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும். 

    பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்டு பள்ளி மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். 

    வக்கீல் உண்ணா விரதத்தையொட்டி  கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×