என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூலி உயர்வு கேட்டு 10 நாட்களாக வேலை நிறுத்தம்: விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்
Byமாலை மலர்23 Jan 2022 6:43 AM GMT (Updated: 23 Jan 2022 6:43 AM GMT)
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நம்பியூர்:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் விசைத்தறி உரிமையா ளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைத்தறி சங்க செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசிய தாவது:&
கூடுதல் வேலையாக எடுத்து செய்யும் வேலை களுக்கு தரத்தை பொருத்து கடந்த 7 ஆண்டுகளாக துணிகளுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூலி கொடுத்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளில் கூலியை உயர்த்தி கொடுக்காததால் பெட்ரோல், டீசல், மூலப் பொருட்கள், மின்கட்டணம், உள்ளிட்டவைகளின் விலை உயர்வாலும் மற்றும் பல்வேறு காரணங்களால் எங்களால் தொடர்ந்து விசைத்தறி இயக்க முடியவில்லை.
ஆகவே தற்போது 20 சதவீதம் கூலி உயர்வு கோரி கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X