search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் கிணறு"

    • செல்வநாயகபுரத்தில் குடிநீர் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் சண்முகப்பிரியா ராஜேஸ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ஜானகி வரவேற்றார். கவுன்சிலர் முருகன் (அ.ம.மு.க.) செல்வநாயகபுரம் கிராமத்திற்கு குடிநீர் கிணறு அமைக்க நிதி வழங்கிய யூனியன் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். கலைசெல்வி ராஜசேகர் (வெங்கலக்குறிச்சி) வெண்ணீர்வாய்க்கால் பள்ளி சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும் விளங்குளத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.

    • நோய் தோற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளின் உபயோக த்திற்க்காக குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாய் கடை ஹாப்பிவேலி பகுதியில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோ ட்டார் மூலம் குடிநீரை அப்பகுதியில் உள்ள ஒரு தொட்டியில் சேகரித்து அங்கி ருந்து சேட்லைன் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளின் உபயோக த்திற்க்காக குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த குடிநீர் கிணற்றின் உள்ளேயும். வெளிப்பகுதிகளிலும் புதர் மண்டி காணப்படுகிறது. கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அந்த புதர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் புதர்களில் இருக்கும் இலைகள், குப்பைகள் கிணற்றினுள் உள்ள நீரில் விழுந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த நீரை பயன்படுத்தும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் ெதாற்று ஏற்படும் முன்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றினுள் இருக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிணற்றை பாதுகாப்பான முறையில் மூடி சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

     கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கீழ் குப்பம் பஸ் நிலையம் பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறு ஒன்று உள்ளது.இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கீழ்குப்பத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீருக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகிறது. இந்த கிணறு மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகிறது.

    இந்நிலையில் கிணற்றின் மேல் பகுதியில் பாதுகாப்பிற்காக இரும்பு வளையம் கொண்டு மூடப்பட்டு இருந்தது. இந்த இரும்பு வளையம் சில ஆண்டுகளாகவே சேதமடைந்து கிணற்றுக்கு அருகிலேயே சேதம் அடைந்து கிடைக்கின்றது. இதனால் குடிநீர் மாசு படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    கீழ் குப்பம் அருகில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் குரங்கு, மான், மயில் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீருக்காக இந்த உயிரினங்கள் அடிக்கடி வெளியே வருவது உண்டு. அப்படி வரும்பொழுது மூடப்படாமல் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்து இறப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதனால் குடிநீரில் மாசுபடுவதற்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளது.

    எனவே கிணற்றை பாதுகாப்பான முறையில் மூடி சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×