என் மலர்
ஈரோடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளால் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வினியோகப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 66 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி அருகே சேனாதிபதிபாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.4.47 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வெள்ளோடு அடுத்த டி.மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னியாகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 34) என தெரியவந்தது. இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபிசெட்டிபாளையம:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு அயலூர் என்ற பகுதியில் நூல் மில் உள்ளது. இந்த மில்லில் 3 ஷிப்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.
வழக்கம்போல் நேற்று இரவும் ஊழியர்கள் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது புளோ ரூம் என்ற பகுதியில் மின்கசிவு காரணமாக பஞ்ச பேல்களில் தீப்பொறி பட்டு தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த அறைக்கும் சென்றது.
அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
தொடர்ந்து ஊழியர்கள் மில்லில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் பஞ்சுக்குள் இருந்து புகை வந்து கொண்டே இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் பஞ்சு மீது தொடர்ந்து தண்ணீரை ஊற்றினர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனவே 3 நதிகள் சங்க மிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசிர்வாதங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கூடுதுறையில் புனித நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் வழி காட்டு வழிமுறைகளை கடை பிடித்து வழிபாட்டு தலங்கள் திறக்கவும், நீர் நிலைகளில் புனித நீராடவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் பவானி கூடுதுறையில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து கூடுதுறையில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத் தனர்.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். காலை நேரத்தில் குறைந்த அளவே பக்தர்கள் வந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல பவானி கூடுதுறையில் கூட்டம் அலை மோதியது.
இதையொட்டி நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கைகளில் சானிடைவர் மூலம் கைகள் கழுவிய பிறகே அனு மதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர்.
மேலும் புனித நீராடிய பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி மற்றும் சித்தோடு போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே இருந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இதேபோல் கொடு முடிக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். மேலும் பலர் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அடிக்கடி சாலையை கடக்கின்றன. இந்நிலையில் நேற்று ஆசனூர் அருகே குட்டியுடன் யானைகள் சாலையை மெதுவாக கடந்து சென்றன. அப்போது அவ்வழியாக வந்த வாகனங்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டது.
யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் சென்றன. இதையடுத்து வனத்துறையினர் வனவிலங்குகள் உணவு தேடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. எனவே வாகன ஓட்டிகள் வேகமாக இயக்காமல் மெதுவாக செல்ல வேண்டும். தற்போது வெயில் காலம் தொடங்க இருப்பதால் யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும்படி வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். அவர் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். தினமும் அதிகாரிகளை சந்தித்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் நிலவரம், ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கை வசதி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து வந்தார். மேலும் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு திட்ட விழாக்களிலும் அவர் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்தல், கூட்டணி கட்சிகளிடையே வார்டுகளை பிரித்து வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் போன்ற கட்சி பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமிக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் டாக்டரிடம் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவு நேற்று காலை வந்தது. அதில் அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து டாக்டரின் ஆலோசனையின் பேரில் அவர் ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் முத்துசாமி கேட்டுக்கொண்டார். அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.






