என் மலர்tooltip icon

    ஈரோடு

    நகர்புற உள்ளாட்சித்தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
     ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சித்தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த, 28-ந் தேதி தொடங்கியது. இதற்காக மாநகராட்சி பகுதியில் 6 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    முதல் நாளில் மனுத்தாக்கல் ஏதும் இல்லை. 29-ந் தேதி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 பேர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் என, 3 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தனர்.

    நேற்று மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 3 பேர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 25 பேர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 33 பேர் என ஒரே நாளில்  61 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 3 நாட்களில் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் ஈரோடு நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதேப்போல் பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

    இன்றுக்குள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று முதல் நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனிவரும் 3 நாட்கள் வேட்புமனு அலுவலகங்களில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பங்களாபுதூர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    டி.என்.பாளையம்:

    பங்களாபுதூர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவர் தனியார் கல்லூரியில் விரிவுரை யாளராகப் பணியாற்றி வருகிறார். 

    நடராஜிக்கும் அதே பகுதியை சேர்ந்த துணை தாசில்தாராக இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட குமரேசன் என்பவருக்கும் இடையே வண்டிபாதை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடராஜ் அமைத்து இருந்த வேலி கற்களையும், கண்காணிப்பு கேமிராக்களையும் 10-க்கும் மேற்பட்ட கும்பல் உடைத்து எரிந்தனர். 

    இதுதொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் குமரேசன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நடராஜ் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு மதியம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி சண்முகம் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னி லையில் நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து புகார்தாரர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் பங்காளாபுதூர் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.
    கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றனர்.
    கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.  மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றனர்.

    தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தமிழக அரசு இதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. 

    அதன்படி கடந்த மாதம் 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படு த்தப்பட்டது.

    மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக முதலில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதேபோல் கல்லூரி களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினமும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.

    இதனையடுத்து மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் இன்று முதல் நடைபெறும் என அரசு அறிவித்து இருந்தது. 

    இதையடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. 

    ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை பொறுத்த வரை 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை  3 லட்சத்து 26 ஆயிரத்து 562 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

    இதுவரை சுழற்சி முறையில் நடந்து வந்த வகுப்புகள் இனி 100 சதவீதம் முழுமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று மாணவ- மாணவிகள் காலை முதலே பெற்றோர்களுடன் பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்தனர். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு தனது நண்பர்களை சந்தித்ததால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

    கொரோனா காலகட்டம் என்பதால் அரசு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

    மாணவ, மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். முக கவசம் அணியாமல் ஒரு சில மாணவர்களுக்கு பள்ளி சார்பில் முக கவசங்கள் வழங்கப்பட்டன. 

    பள்ளி நுழைவாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப் பட்டது. இதில் சாதாரண வெப்ப நிலையை தாண்டி கூடுதலாக காண்பிக்கப்பட்ட சில மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் உடல்நிலையை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளித்தனர்.

    மேலும் ஒரு சில பள்ளி களில் இன்று பள்ளிக்கு  வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மாணவர்கள் உணவருந்தும் போது ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

    வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி சோப்பு, சனிடைசர் மூலம் சுத்தப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டு இருந்தது. 

    அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. வீட்டு தனிமையில் இருப்ப வர்களும் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. 

    இதேபோல் கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.
    அந்தியூர் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ராஜேந் திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது. இதன் காரணமாக தனது மனைவியுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். 

    அப்போது ராஜேந்திரன் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் கணவன்& மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் சோனியா தனது மகன், மகளுடன் கடைக்கு வெளியே சென்றுவிட்டார். 

    பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் ராஜேந்திரன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 1,042 பேர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 1,042 பேர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தால் கொரோனா தாக்கம் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பயனாக கடந்த 5 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. 

    இதேபோல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை யும் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 1,070 பேருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 028 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 1042 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 540 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

    இதுவரை 725 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 8,763 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    டி.என்.பாளையம் அருகே மர்ம விலங்கு நடமாட்டத்தை கேமிராஅமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே மர்ம விலங்கு நடமாட்டத்தை கேமிராஅமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் மர்ம விலங்கு கடித்து சரவணன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள், ஒரு சேவல் உயிரிழந்தது. 

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர், தெரு நாய்கள் கடித்ததாலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஏற்கனவே ஆடுகளை கடித்து கொன்ற பகுதியில் மீண்டும் மர்ம விலங்கு நடமாட்டத்தை பார்த்ததாக அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடமான நஞ்சை புளியம்பட்டி சென்று மர்ம விலங்கு தென்பட்டதாக சொல்லும் இடங்களில் கால் தடங்களை பதிவு செய்தும், 2 இடங்களில் கேமிராக்களை பொருத்தியும் உள்ளனர்.

    மர்ம விலங்கு தென்பட்ட பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்.பாளையம் வன எல்லையில் அருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். மேலும் பவானி ஆற்றின் கரையோரமாக கிராமம் அமைந்துள்ளது. 

    இதனால் புலிகள் காப்பக பகுதியில் இருந்து சிறுத்தை வந்து இருக்கலாம்? என கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
    நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோட்டில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம், சில்லரை வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோட்டில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம், சில்லரை வியாபாரம்  அடியோடு பாதிக்கப்பட்டது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வார சந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய் க்கிழமை மாலை வரை நடைபெரும்.

    இந்த வார சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். சந்தை நாட்களில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.

    இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடந்த 3 வாரம் ஜவுளி சந்தை விற்பனை கடுமையாக பாதிக்கப் பட்டது.  தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

    இதனையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று நடந்த ஜவுளி சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து ஒரு வியாபாரிகளும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. 

    இதேப்போல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு வியாபாரிகளும் வரவில்லை. இதனால் சில்லரை வியாபாரமும் அடியோடு பாதிக்கப்பட்டது. பொதுவாக ஜவுளி சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள்  ரூ.10 லட்சம் முதல் குறைந்தது ரூ.1 லட்சம் வரை கொண்டு வருவார்கள். 

    தற்போது தேர்தல் நடத்தை காரணமாக வியாபாரிகள் பணம் கொண்டுவர தயங்கி இன்று நடந்த சந்தைக்கு வரவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு இதே நிலைமை தான் நீடிக்கும் என ஜவுளி வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட சகதியில் இறங்கி சென்று குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பலர் புனித நீராட முடியாமல் சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. இந்த பகுதியில் அமாவாசை மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி செல்வார்கள்.

    மேலும் அந்த பகுதியில் மயானம் உள்ளதால் இறந்தவர்களை அடைக்கம் செய்து விட்டு வருபவர்கள் ஆற்றில் குளித்து விட்டு செல்வது வழக்கம். அதே பகுதியில் ஈம காரியங்களும் செய்யப்படுகிறது.

    மேலும் காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பலர் ஆற்றில் குளித்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து திதி மற்றும் தர்ப் பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. இதனால் இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட சகதியில் இறங்கி சென்று குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பலர் புனித நீராட முடியாமல் சென்றனர்.

    தண்ணீர் சேறும் சகதியுமாக இருந்ததால் முதியவர்கள் சிலர் சேற்றில் கால் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இன்னும் சிலர் சிரமப்பட்டு உள்ளே இறங்கி புனித நீராடினர். இதே நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    எனவே கருங்கல்பாளையம் காவிரி கரையோர பொதுமக்கள் இறங்கி புனித நீராட அந்த பகுதியில் படித்துறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புஞ்சைபுளியம்பட்டியில் தங்கநகை என்று நினைத்த பறக்கும் படையினர் அந்த நகையை நகை மதிப்பீட்டாளர் மூலம் சோதனையிட்டனர். சோதனை செய்ததில் அது கவரிங் நகை என தெரியவந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 5 நபர்கள் இருந்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை அச்சன் புதூர் பகுதியை சேர்ந்த சமீர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சர்புதீன், முகமது இஸ்மாயில், ஷாஜஹான் மற்றும் சபேர் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் கணக்கில் வராத ரூ.51 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் சில நகைகள் இருந்தன. அதனை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். முதலில் பறிமுதல் செய்யப்பட்டது தங்கநகை என்று நினைத்த பறக்கும் படையினர் அந்த நகையை நகை மதிப்பீட்டாளர் மூலம் சோதனையிட்டனர். சோதனை செய்ததில் அது கவரிங் நகை என தெரியவந்தது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கவரிங் நகைகள் வாங்கி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கவரிங் நகையை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த ரூ.51 ஆயிரம் சத்தியமங்கலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் சாயநீர் கலப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் சாயநீர் கலப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ளது நல்லூர் ஊராட்சி. இங்கு 75 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது குறைந்த அளவிலே தண்ணீர் உள்ளது.

    புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான சாயபட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடை வழியாக நல்லூர் குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், எனவே குளத்தில் சாயநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும் நல்லூர் பொதுமக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நல்லூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் இன்ஸ் பெக்டர் நெப்போலியன், புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, வருவாய் ஆய்வாளர் யோகநரசிம்மன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    ஆனாலும் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    கொரேனா தொற்று குறைய தொடங்கியதால் நாளை பள்ளிகள் திறக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    கொரேனா தொற்று குறைய தொடங்கியதால் நாளை பள்ளிகள் திறக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. 

    தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. 

    தமிழக அரசு இதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

    இதுபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக முதலில் ஒன்றாம் வகுப்பு முதல்  12 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். 

    ஈரோடு மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினமும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 

    இதனையடுத்து மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நாளை  முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. 

    இதையடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிவளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

    ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 1-ம் வகுப்பில் 24,572 மாணவர்கள், 2---ம் வகுப்பில் 25,629, 3-ம் வகுப்பில் 26,052, 4-ம் வகுப்பு 27, 618, ஐந்தாம் வகுப்பு 29, 362, ஆறாம் வகுப்பு 27,432, ஏழாம் வகுப்பு 27, 887, எட்டாம் வகுப்பு 28,968, ஒன்பதாம் வகுப்பு 29,038, பத்தாம் வகுப்பு 28,438, பிளஸ்- 1 26,496, பிளஸ்- 2 25,070 என 3 லட்சத்து 26 ஆயிரத்து 562 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

    நாளை முதல் 100 சதவீதம் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் நாளை பள்ளிக்கு வர தயாராகி வருகின்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் அரசு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்புகளுக்கு வரும் மாணவ,-மாணவிகள் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
    மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத மாணவர்களுக்கு பள்ளி சார்பில் முக கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    பள்ளி வகுப்பறை நுழைவாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

    இதில் சாதாரண வெப்ப நிலையை தாண்டி கூடுதலாக காண்பிக்கப்பட்டால் அந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ குழுவினர் உடல்நிலையை பரிசோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளிப்பார்கள். 

    மேலும் அந்தந்த பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
    ஆப்பக்கூடல் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி பலியானார்.
    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி பலியானார்.

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி கிராமம் பொதியா மூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன். 

    இவரது மகன் சந்திரமோகன் (23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக ரெட்டிபாளையம் அந்தியூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றார் .

    அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சந்திரமோகன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசார் விபத்தில் பலியான சந்திரமோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் டிராக்டர் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×