search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர் மோதி விபத்து"

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபாமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 23). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் ஐயம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கட்டளை அருகே வரும்போது எதிரே வந்த டிராக்டர் இவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் ஜெகன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). இவர் லாரி டிரவைர்.

    இவர் சொந்த வேலை காரணமாக பைக்கில் கருகத்தாங்கல் கிராமத்திற்கு சென்றார்.

    வந்தவாசியிலிருந்து ஆரணி நோக்கி விறகு ஏற்றி ெகாண்டு டிரைவர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து சண்முகம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

    தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×