என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோட்டில் 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. 

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 1,314 ஆக பதிவாகியிருந்தது. ஈரோடு மாநகராட்சி, கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் வேகமாக  பரவியது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் இணைந்து  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

    தற்போது மாவட்டத்தில் தினமும் 5 ஆயிரம்  வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

    நேற்று முன்தினம்  1261 ஆக இருந்த தினசரி பாதிப்பு நேற்று மேலும் குறைந்து 1198 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 855 ஆக பதிவாகியுள்ளது. 

    இதேபோல் ஒரே நாளில் 986 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந் துள்ளனர். 

    இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
     
    இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 725 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 8,659 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×