என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனால் காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனால் காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    முன்னதாக பொதுமக்கள் தங்களது வீடுகளில் தமிழ் புத்தாண்டையொட்டி   இன்று காலை எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற கனிகள், தங்க நகைகள், ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்து வந்து பூஜை அறை முன்பு வைத்து வழிபட்டனர்.

    அந்த தட்டில் கண்ணா டியை வைத்து கண்ணாடி மூலமாக கனிகள், பணத்தை பார்த்தனர். இதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். பின்னர் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். 

    கடந்த 2 வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபட்டனர். இந்த வருடம் பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால் இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று கோவில்களில் வழிபட்டனர்.

    ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோவில், ரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர், பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன், கொங்காலம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.  சென்னிமலை முருகன் கோவில், ஈரோடு அடுத்துள்ள திண்டல் முருகன் கோவிலில் அதிகாலையில் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதேபோல பவானி சங்கமேஸ்வரர், கோபி பச்சமலை முருகன், பண்ணாரியம்மன், கொடுமுடி நட்டாற்றீஸ்வரர், ஈரோடு பார்க் ஆஞ்சநேயர் கோவில், ரெயில்வே காலனி சாய்பாபா கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடை பெற்றது. இதனால் இன்று கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கோபியில் தமிழ் புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோபி வேலுமணி நகரிலுள்ள சக்தி விநாயகர் கோவிலில் அதிகாலை பால், தயிர், இளநீர்,பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து சுவாமி அனைத்துவித பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்-களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு தீபாரா-தனைகள் நடைபெற்றன. 

    மேலும் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில், பவள மலை, பச்சைமலை முருகன் கோவில்கள், கோபி சாரதா மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஐயப்பன் கோவில், வரதராஜபெருமாள் கோவில், கோபி ஈஸ்வரன் கோவில், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெருந்துறையில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. 

    பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சோளீஸ்வரர் கோவில், பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள செல்லா ண்டியம்மன் கோவில், அக்ரகாரம் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

    பொதுமக்கள் காலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபட்டு சென்றுள்ளனர். கோவில்களில் இன்று பிரசாதமாக கனிவகைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
    சத்தியமங்கலம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நெசவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்  நெசவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி ரஞ்சிதா. இருவரும் நெசவுத்தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் ரவிக்குமார் வேலை விஷயமாக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று ரவிக்குமார் தனது மகளை சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு எம்.ஜி.ஆர் . நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    இந்நிலையில் ரஞ்சிதாவின் தாய் மகளுக்கு போன் செய்து உனது கணவர் வீட்டின் உள்பக்கம் தாழிட்டு கதவை திறக்காமல் இருக்கிறார் என்றும், நீ உடனே கிளம்பி வா என்றும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து ரஞ்சிதா தனது தாய் வீட்டிற்கு வேகமாக வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ரவிக்குமார் வீட்டில் தூக்குபோட்டு  தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவிக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை அருகே பழுதடைந்த சாலையை பணியாளர்கள் மூலம் சரி செய்து கொண்டிருந்த பொதுப்பணி துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே பழுதடைந்த சாலையை பணியாளர்கள் மூலம் சரி செய்து கொண்டிருந்த பொதுப்பணி துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு சூரம்பட்டி வலசு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் நேரு. இவரது மனைவி மீனாட்சி (வயது 51). இவர் பொதுப்பணி துறையில் சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மீனாட்சி பெருந்துறை, வெள்ளோடு ரோட்டில் பெருந்துறை ஆர்.எஸ்.பாலம் அருகே சாலை பழுதடைந்து இருந்ததை பணியாளர்கள் மூலம் சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது பெருந்-துறை ஆர்.எஸ். கோரகாட்டுவலசு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (57) என்பவர் அந்த இடத்திற்கு வந்தார். 

    பின்னர் அங்கு பணி செய்த சாலை ஆய்வாளர் மீனாட்சி மற்றும் ஊழியர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி கல்லை எடுத்து மீனாட்சியின் மீது வீசியுள்ளார்.  பின்னர் அவரின் கையை பிடித்து இழுத்து இங்கிருந்து ஓடி விடு என மிரட்டியுள்ளார்.

    இது தொடர்பாக  மீனாட்சி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்த  ரவிச்சந்திரனை கைது செய்தனர். 

    பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் ரவிச்சந்திரன் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திரம் போல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. 100 டிகிரி  அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால்  மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். கடந்த 2 நாட்களாக காலை நேரம் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரம் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகின்றது.

    குறிப்பாக ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பவானி அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.

    பவானி அருகே உள்ள மையிலம்பாடி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.

    இதேப்போல் நம்பியூர் பகுதியில் நேற்று மதியம் 2.30 மணி  அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதேபோல் குருமந்தூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    புது சூரிபாளையம் அய்யன் கோவில் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வேப்பமரம் ஒன்று மெயின் ரோட்டில் சாய்ந்தது. உடனடியாக அந்த மரம் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. 

    இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பவானி, சத்தியமங்கலம், கொடிவேரி, தாளவாடி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: வரட்டுப்பள்ளம்-70, அம்மாபேட்டை-18.2, பவானி-16, சத்திய மங்கலம்-8, நம்பியூர்-8, கொடிவேரி-6, தாளவாடி-5, எலந்தகுட்டை-4.4.
    கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள், வாகனங்கள் தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கடந்த 4 நாட்களாக நடுக்காட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டு, காத்திருக்கின்றன.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தினமும் இதன் வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

    தினமும் மலைப்பாதையை கடக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போனதால் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் திம்பம் மலைப்பாதையில் 12 சக்கரங்கள் கொண்ட வாகனங்களுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் இந்த சாலையில் 16.2 டன் எடைக்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து சத்தியமங்கலம் மற்றும் தாளவாடியில் கடையடைப்பு போராட்டமும், பண்ணாரி சோதனைச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் காத்திருப்புப் போராட்டமும் நடைபெற்றது.

    இந்நிலையில் அதிக எடை ஏற்றி சென்ற பத்து சக்கர லாரிகளுக்கும் சோதனைச்சாவடியில், வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள், வாகனங்கள் தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கடந்த 4 நாட்களாக நடுக்காட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டு, காத்திருக்கின்றன.

    10 சக்கர வாகனங்களுக்கும் அனுமதி மறுப்பதால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    10 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இருக்கும் நிலையில், கூடுதல் எடை அளவு உள்ளதாக காரணம் கூறி, அந்த வாகனங்களுக்கும் அனுமதி மறுத்து காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நடுக்காட்டில் சாப்பிட வழியில்லாமல் கடந்த 4 நாட்களாக தவித்து வருவதாக லாரி டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகள் மூலம் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும். நடுக்காட்டில் வெட்டப்படும் கரும்புகளை எடை போட்டு ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆனால் வனத்துறையினர் அதிக எடை ஏற்றி வருவதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கரும்பு லாரிகளை அனுமதிக்க மறுத்து விட்டனர். கடந்த 4 நாட்களாக லாரியில் ஏற்றப்பட்ட கரும்புகள் வெயிலில் வாடி வருகிறது. இதன் காரணமாக எடை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கரும்பு லாரிகளை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் 1000 ஏக்கர் கரும்பு அறுவடை பாதிக்கப்படும். மேலும் வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுளளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மொடக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் சின்னியப்பன் (58). இவர் கடந்த சில வருடங்களாக மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காடு வலசு பகுதியை சேர்ந்த பூசப்பகவுண்டர் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி விஜய் (22) என்ற மகன் உள்ளார். இவர் முள்ளாம் பரப்பில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    தமிழ் வருட பிறப்பையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் சின்னியப்பன் மற்றும் அவரது மனைவி மற்றும் மருமகள், குழந்தைகள் அனைவரும் திருவண்ணாமலை அருகே உள்ள கலசபாக்கம் ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் விஜய்மட்டும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் விஜய் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்தில் உள்ள மோட்டார் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா தவிதமாக மின்சாரம் தாக்கி விஜய் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த விஜய்க்கு திருமணமாகி மனைவி, 6 மாத பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பண்ணாரி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து ஈரோட்டுக்கு குட்கா கடத்தி வரப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பண்ணாரி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தினர். வேனில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் கொள்ளேகாலில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்படுவது தெரிய வந்தது.

    இதையடுத்து குட்கா கடத்தி வந்த ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (32), நம்பியூரை சேர்ந்த சக்திவேல் (27), கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கோபால் (26), சங்கர் (24) ஆகிய 4 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் குட்கா, வேனையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சத்தியமங்கலத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுக்கு தயாரான வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சந்தனபாரதி (22). பட்டதாரி வாலிபரான இவர் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காந்தி நகர் பகுதியில் அறை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்களுடன் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    நேற்று இரவு 10.30 மணி அளவில் இவர் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அறையில் இருந்து வெளியே புறப்பட்டார். அவர் ரோட்டை கடந்த போது அந்த வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அத்தாணி நோக்கி ஒரு வேன் வந்தது.

    திடீரென அந்த வேன் சந்தனபாரதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் சந்தனபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து பலியான வாலிபரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் குளியல் அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் குளியல் அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த எடையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் என்கிற ராஜா (27).

    இவர் ஈரோடு மூலப் பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு பழமுதிர்ச் சோலையில் கடந்த 10 வருடமாக  வேலை பார்த்து வந்தார்.  ராஜா  அருகே ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாவின் பாட்டி இறந்து விட்டதால் அவர் கரூர் சென்றிருந்தார். 2 நாட்கள் ஈரோட்டில் தான் தங்கியிருந்த அறைக்கு வந்தார். அவரது அறையில் சக்திவேல், மூர்த்தி என 2 பேர் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில்2 பேரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் ராஜா மட்டும் அறையில் இருந்தார். பின்னர் சக்திவேல் ராஜாவிற்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தார்.

    அப்போது ராஜா அறையில் இல்லை. அவரை ஒவ்வொரு இடமாக தேடி பார்த்த போது வீட்டில் உள்ள குளியல் அறையில் ராஜா தூக்கு போட்டுக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து  தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜா எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் 32 தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியானதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 32 தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியானதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இதையடுத்து பீஸ்ட் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆடிப்பாடி மேளதாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் விஜய் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 37 தியேட்டர்கள் உள்ளன. மாநகர் பகுதியில் மட்டும் 11 தியேட்டர்கள் உள்ளன.

    இதில் மாநகர பகுதியில் 7 தியேட்டர்களிலும், கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் 25 தியேட்டர்கள் என மாவட்டம் முழுவதும் 32 தியேட்டர்களில் இன்று விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளி வெளியானது.

    ரசிகர்களுக்கு என்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி அதிகாலை பீஸ்ட் படம் வெளியான தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினர். சில ரசிகர்கள் விஜய் கட்டவு ட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

    இன்னும் சில ரசிகர்கள் மேளதாளம் முழங்க திரையரங்கத்திற்கு வந்து நடனம் ஆடி, பாட்டு பாடி மகிழ்ந்தனர். தியேட்டருக்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். சில ரசிகர்கள் விஜய், பீஸ்ட் பட கெட்டப்பில் வந்திருந்தனர். இதனால் இன்று தியேட் டர்களில் விழாக்கோலம் பூண்டது. 

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஸ்ட் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    ஈரோட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் பழங்கள் மும்முரமாக நடந்தது.
    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் பழங்கள் மும்முரமாக நடந்தது.

    தமிழ் புத்தாண்டான சித்திரை முதல்நாள் நாளை பிறக்கிறது.  இதையொட்டி இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா பழ மார்க்கெட்டில்  பழங்களை வாங்குவதற்காக மக்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.  

    பெண்கள் அதிக அளவில் வந்து இருந்து ஆப்பிள், ஆரஞ்சு,  மாம்பழம் மற்றும் கொய்யாப்பழங்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுவாக சித்திரை முதல் நாளில் பெண்கள் வீடுகளில் பூஜையில்  ஆப்பிள், மாம்பழம்,  திராட்சை, மாதுளை, கொய்யா  போன்ற பழங்களை வைத்து  பூக்களையும் வாங்கி  ஒரு தட்டில் வைத்து பூஜை பொருட்களுடன் தட்டில் ரூபாய் நோட்டுகள்,  தங்க நாணயங்கள், நகைகளையும் வைத்து அந்தத் தட்டில் கண்ணாடியை வைத்து அந்தக் கண்ணாடி வழியாக ரூபாய் நோட்டுகள் தங்க நாணயங்கள் தங்க நகைகளை பார்ப்பார்கள்.

    இவ்வாறு பார்த்தால் வீட்டில் செல்வம் பெருகும் என ஐதீகம். இதனால் இன்று ஈரோட்டில் உள்ள பழக்கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். பழங்கள் தேவை அதிகரித்துள்ளதால் சில வகை பழங்கள் விலை ரூ.10 முதல் 30 வரை உயர்ந்துள்ளது.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா பழ மார்க்கெட்டில் இன்று கிலோவுக்கு விற்கப்பட்ட பழங்கள் வருமாறு: ஆப்பிள்-ரூ.160 முதல் ரூ.180, மாம்பழம்-ரூ.120, அண்ணாச்சி பழம் ரூ.20 உயர்ந்து ரூ. 60-க்கு விற்பனையானது.

    இதேப்போல் திராட்சைப்பழம் ரூ.20 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனையானது. மாதுளை-ரூ.120 முதல் ரூ.200 விற்பனையானது. பன்னீர் திராட்சை - ரூ.100, சாத்துக்குடி-ரூ.70, ஆரஞ்சுபழம்-ரூ.100, சப்போட்டா-ரூ.30 முதல் ரூ.50, கிலோ ரூ.50-க்கு விற்பனையான கொய்யாக்காய் இன்று  30 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    இதேபோல் பெரியார் நகர், சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் சென்று பழங்களை வாங்கி சென்றனர். சித்திரை முதல் நாளான நாளை பொதுமக்கள் அந்த பகுதில் உள்ள கோவிலில் சென்று வழிபடுகின்றனர்.
    சித்தோட்டில் தூக்குபோட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    சித்தோட்டில் தூக்குபோட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). டையிங் மெஷின் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

    செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மாலதி கோபித்து கொண்டு தனது 2 மகள்களுடன் பருவாச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இதனால் மன வேதனையில் இருந்த செந்தில்குமார் குடிபோதையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    செந்தில்குமார் வீட்டிற்கு வந்த அவரது தம்பி ஜன்னல் வழியாக பார்க்கையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
    ×