என் மலர்
ஈரோடு
- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.
- அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சாவகாட்டுபாளையம் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நம்பியூர் பகுதியைச் சேர்ந்த பரமேஷ் மகன் ஆனந்தன் (வயது 38), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சரவண சுந்தரம் (46), ராமகிருஷ்ணன் மகன் கனகராஜ் (45), திருமூர்த்தி மகன் பிரசாந்த் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.1650-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூனாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- முதலுதவி சிகிச்சை பெற்ற மாணவிகள் 5 பேர் இரவு குணமடைந்து வீடு திரும்பினர்.
அம்மாப்பேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நத்தமேடு, பழனி வேல்புரம், ராமச்சந்திரபுரம், மணக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட பெற்றோர் விசாரிக்கையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் காட்டுக்கொட்டை காயை (விஷக்கொட்டை) சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை சிகிச்சைக்காக பூனாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு சிகிச்சை சேர்த்தனர். இத்தகவல் நத்தமேடு சுற்று வட்டாரத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 20 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என மொத்தம் 21 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு மாணவ, மாணவிகள் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் பூனாச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பூனச்சியில் முதலுதவி சிகிச்சை பெற்ற மாணவிகள் 5 பேர் இரவு குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரும் நலமுடன் உள்ளதாகவும், அனைவரும் இன்று வீடு திரும்பி விடுவார்கள் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
- பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு காந்திஜி சாலை, ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (41). ஆடிட்டர். இவர் அதே தரைத்தளத்தில் அலுவலகம் வைத்து ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார்.
இந்த பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து உடன்படிக்கும் மாணவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவர் இது பற்றி பயிற்சியாளர் சத்திய மூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி அந்த மாணவரிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்தியமூர்த்தி, மாணவிக்கு நியாயம் கேட்டு வந்த மாணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரிடம் சத்திய மூர்த்தியின் பாலியல் சில்மிஷம் குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் நேற்று மாலை சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு சத்தியமூர்த்தியை அவர்கள் அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார்.
இந்நிலையில் சத்தியமூர்த்தியின் அலுவலகம் முன்பு திரண்ட மாணவ-மாணவிகள், உறவினர்கள் சத்தியமூர்த்தியை கைது செய்ய கோரி வலியுறுத்தி கோஷமிட்டனர். கைது செய்யவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்று அவர்கள் கலந்து சென்றனர்.
இந்நிலையில் சூரம்பட்டி போலீசார் ஆடிட்டர் சத்தியமூர்த்தி மீது 506 (2) மிரட்டல் விடுப்பது, 294 (பி) கெட்ட வார்த்தைகள் பேசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமை செய்வது உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஆடிட்டர் சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் இன்று மாலை அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.
- வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாலபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது.
அப்பகுதியில் மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்து சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தெங்குமரஹடா கிராமத்தினரை இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை தற்காலிகமாக வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்ட எல்லையில் தெங்குமரஹடா கிராமம் உள்ளது. மாயாற்றின் கரையில் அடர்ந்த தீவாக அமைந்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை கடந்து இக்கிராமம் செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் வந்து அங்கிருந்து 25 கி.மீ. அடர்வனத்தில் சென்று தெங்குமரஹடா அடைய வேண்டும். கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசு பஸ்கள் இக்கிராமத்துக்கு இயக்கப்படுகிறது. மாயாற்றின் கரையில் பஸ் நிறுத்தப்பட்டு பரிசிலில் ஆற்றை கடந்து இக்கிராமம் செல்ல வேண்டும்.
தெங்குமரஹடா கூட்டுறவு சங்கத்துக்கு 1948-ம் ஆண்டு 100 ஏக்கர் நிலம் வழங்கி அங்குள்ளவர்கள் விவசாயம் செய்தனர். பின் வனத்துறை நிலம் 500 ஏக்கர் குத்தகைக்கு வழங்கியது. இப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான் உட்பட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் இங்கு 33 புலிகள் இருப்பதாக அறிவித்தனர்.
மனித, விலங்குகள் மோதல் கருதி, இம்மக்களை வனத்தில் இருந்து வெளியேற்றி வேறு பகுதியில் குடியேற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக நீதிமன்ற உத்தரவை, வனத்துறை பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு கோவை மண்டல வனப்பாதுகாவலர் இம்மக்களுக்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறுவதாக பரிந்துரைத்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் ஆய்வுப்படி 497 குடும்பத்தினர் அங்குள்ளதாகவும் அவர்களை வெளியேற்ற கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டமும் நடத்தியது. இதில் ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய கள இயக்குனர்கள் பங்கேற்றனர்.
போதிய இழப்பீடு வழங்கினால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக குறிப்பிட்ட மக்கள் தெரிவித்தனர். இதன்படி இக்கிராமத்தில் வசிக்கும் 497 குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் என ரூ.74.55 கோடி ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்தது. சில மாதங்களாக இப்பிரச்சனை கிடப்பில் போனது.
இந்நிலையில் தெங்குமரஹடா கிராமத்தினரை இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிதியை கிராம மக்களுக்கு 2 மாதங்களில் வழங்கி அடுத்த ஒரு மாதத்துக்குள் அவர்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து அக்டோபர் 10-ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டாக தீவிரம் காட்டிய பிரச்சனையில் காலக்கெடு நிர்ணயித்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அக்கிராம கமிட்டியினர் கூறியதாவது:-
எங்கள் மூதாதையர் காலம் முதல் இங்கு வசித்து விவசாயம் செய்கிறோம். 3, 4-வது தலைமுறையாக உள்ளோம். இங்கு எங்களுக்கு பட்டா உட்பட எந்த வசதியும் இல்லை. இருந்தும் போதிய இழப்பீடு வழங்கி ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணை பகுதியில் ஒரு குடும்பத்துக்கு குறைந்த பட்சம் 5 சென்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். அப்பகுதியை தனி பஞ்சாயத்தாக அறிவித்து விவசாயம் செய்ய வாய்ப்பு தர வேண்டும்.
அதேநேரம் தெங்கு மரஹடா கிராமம் உள்ள பகுதியில் கல்லாம் பாளையம், கல்லாம் பாளையம் கீழூர், அல்லிமாயார், புதுக்காடு என 4 கிராமங்களும், அங்கு பல 100 பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களது நிலை என்ன என்பதை அரசும், வனத்துறையும் தெளிவுபடுத்த வேண்டும்.
இங்கு வசிப்போரில் பலருக்கு இக்கிராமத்தில் இருந்து வெளியேற விருப்பமும் இல்லை. அவர்களது கருத்தையும் அரசு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கூறும்போது,
இப்பகுதியில் வனவளத்தை அதிகரிக்க இக்கிராமத்தை அப்புறப்படுத்த வேண்டி உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு இழப்பீடும், மாற்று இடமும் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்தை அகற்றி ஈரோடு மாவட்டத்தில் மறுகுடியமர்வு செய்வதில் நிர்வாக ரீதியாக பிரச்சனை உள்ளது.
இருப்பினும் பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை தற்காலிகமாக இவர்களுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விடத்தை ஒதுக்குவது பற்றி மாவட்ட நிர்வாகமும், அரசும் விரைவில் அறிவிக்கும் என்றனர்.
- குடியிருப்புகளில் வீடுகளில் 2 சாரைப்பாம்புகளை பிடித்தார்.
- பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக பாம்புகள் படையெடுப்பது தொடர் கதையாகி வருகிறது.
இன்று காலை ஈரோடு ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பழைய பொருட்கள் வைக்க ப்பட்டிருந்த பகுதியில் சுமார் 8 அடி நீளம் உள்ள சார பாம்பு இருந்ததை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார்.
இதேபோல் ஈரோடு ெரயில்வே காலனி பகுதி யில் உள்ள குடியிருப்புகளில் 2 வீடுகளில் 8 முதல் 10 அடி உயரம் உள்ள 2 சாரைப்பாம்புகளை அவர் பிடித்தார்.
ஈரோடு இந்தியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் யுவராஜ் சென்று பாம்பை தேடி தேடினார்.
அப்போது அங்கு டி.வி.யில் சாரை ப்பாம்பு ஒளிந்து கொண்டிருப்பதை கண்டு பிடித்தார். இவ்வாறாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2 நாட்களில் 10-க்கும் மே ற்பட்ட பாம்புகளை அவர் பிடித்துள்ளார்.
பின்னர் அனைத்து பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.
தற்போது வெ யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான இடங்களை நோக்கி பாம்புகள் வருவதால் வீடுகளை நோக்கி வருகிறது என்றும், பொதுமக்கள் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், காலனி வைக்கும் இடம், பழைய பொருட்கள் வைக்கும் இடத்தை கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- கோவிலுக்குள் இருந்த 2 உண்டியல்கள் மாயமாகி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடை ந்தார்.
- சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோலகாளி பாளையம், இந்திரா நகரில் அண்ணமார் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூஜையை முடித்துக் கொ ண்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை யொ ட்டி காலையில் பூசாரி கோ விலை திறக்க வந்து ள்ளார். அப்போது கோவி லின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போ து கோவிலுக்குள் இருந்த 2 உண்டியல்கள் மாயமாகி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடை ந்தார்.
இது குறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ ண்டனர். பின்னர் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு கோவிலின் 2 உண்டியல்கள் இருப்பதை கண்டனர். உண்டியலில் இருந்த ரூ.3 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.
நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை பெ யர்த்து எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கே போட்டுவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்த கோவில் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேசிய குட ற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
- அல்பெண்டாசோல் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு பயனடையு மாறு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலி ன்படி நாளை (வியாழக்கிழ மை) தேசிய குடற்புழு நீக்க தின முகாம் நடைபெற உள்ளது.
உலக மக்கள் தொகையில் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று 24 சதவீதமும் அதில் 25 சதவீதம் இந்தியா வில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நா ட்டில் குடற்புழு தொற்று பரவல் 25 சதவீதமாகவும் உள்ளது. குடற் புழு வகைக ளாக உருண்டைப்புழு, கொக்கி ப்புழு, சாட்டைப்புழு போன்றவை அறியப்படுகிறது.
குடற்புழு தொற்றால் பொதுவாக அறிகுறிகள் இருக்காது. ஆனால் கடுமை யாக தொற்று ஏற்பட்டு இருப்பின் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, பசியி ன்மை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த குடற்புழுக்கள் குடலில் இருந்து கொண்டு சாப்பிடு கின்ற உணவில் உள்ள இரும்புசத்து, ஊட்டச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்களை எடுத்து கொண்டு வளர்கிறது.
இதனால் பாதிக்க ப்பட்டவர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு, ரத்த சோகை நோய், ஊட்டச்சத்து, விட்டமின் ஏ சத்து மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடு கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கமாக தேசிய குடற் புழு நீக்க தினம் வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது.
இதனையொட்டி நடை பெறுகின்ற குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு, அல்பெண்டா சோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு 400 மில்லி கிராம் அளவில் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை 2080 அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 375 துணை சுகாதார நிலையங்களிலும், அனை த்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி நிறுவன ங்களிலும் பயிலும் மாணவ ர்களுக்கும் அல்பெண்டா சோல் மாத்திரைகள் மொ த்தமாக 7,25,893 பயனாளி களுக்கு 2,112 பணியாளர்க ளை கொண்டு தேசிய குட ற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
குடற்புழு தொற்றை தடுத்திட திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, கழிவறையை பயன்படுத்து வது, வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்வது, சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்து க் கொள்வது, காய்கறி பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொ ள்வது, சுகாதா ரமான குடிநீர், உணவை உட்கொள்வது, உணவுக்கு முன், கழிவறைக்கு சென்று விட்டு வந்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற முறைகளை மேற்கொள்வது நல்லது.
மேலும் நாளை நடைபெற உள்ள குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் தங்கள் பகுதிக்கு அருகில் நடைபெறும் இடங்களில் தங்கள் குழந்தைகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களும் அல்பெ ண்டாசோல் மாத்திரை களை வாங்கி உட்கொண்டு பயனடையு மாறு கலெக்டர் ராஜ கோ பால் சுன்கரா கேட்டுக்கொ ண்டுள்ளார்.
- பள்ளி குழந்தைகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.
- 12 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் கரூர் சாலை, சோலார் பகுதி, நாடார் மேடு பகுதிகளில் ஆட்டோ உள்ளிட்ட பள்ளி குழந்தைகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றி சென்றது, தகுதி சான்று காப்பு சான்று ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 12 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்படுகிறது.
- புறவழி சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருச்செங்கோடு, சங்ககிரி, குமாரபாளையம், கோபி உள்ளிட்ட பகுதிகளில் இரு ந்து நாள்தோறும் கல்லூரி வாகனம், பள்ளி வாகனங்க ள், காலை நேரத்தில் ஏராளமாக பஸ் நிலையம் பகுதி வழியாக செல்கின்றது.
மேலும் அந்தியூர் வழியாக பர்கூர், கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.
இதனால் கனரக வாகனங்க ளும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களிலும் அதிக அளவில் செல்வதால் பஸ் நிலையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆங்கங்கே நின்று செல்லும் நிலை ஏற்படுகிறது.
இந்த நெரிசலை தவிர்க்க பவானி சாலையில் உள்ள சந்தியபாளையம் பிரிவு (மங்களம்பள்ளி அருகில்) பகுதியில் இருந்து தவிட்டுப்பாளையம்-பிரம்மதேசம் இணைக்கும் சாலை வழியா க புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசலும் குறையும், வாகனங்கள் செல்வதற்கு குறைந்த தூரமே வரும் என்பதால் இந்த புறவழி சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வல ர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றார்கள்.
- போலீசார் சட்ட விரோதமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாநிலம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி மதுபா னங்கள் ஏதேனும் விற்கப்ப டுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு தடையை மீறி சட்டவி ரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த ஆண்டிபாளையம் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 58), பவானி பூலப்பா ளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அஜய் (19) ஆகியோரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைப்போல் கவுந்த ப்பாடி, அங்கம்பாளையம் பகுதியில் தடையை மீறி மது விற்று கொண்டிருந்த கவுந்தப்பாடி பூபதி (53), அங்கம்பாளையம் ராசு மகன் விக்னேஷ் (28) ஆகி யோரை கவுந்தபாடி, சிறுவ லூர் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள் மற்றும் ரூ.680-ஐ போலீசார் பறிமு தல் செய்தனர். பின்னர் போலீசார் சட்ட விரோ தமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் பூங்கா அருகே காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் வர முயன்றது.
- வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை கூட்டங்களின் நடமாடத்தை கண்காணித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா பகுதி அருகே வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பவானிசாகர் அணை நீர் தேக்க மேல் பகுதியிலும், பூங்காவுக்குள் வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பூங்காவுக்குள் நுழைந்தது. பின்னர் வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த யானையை வன ப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில் நேற்று காலை பவானிசாகர் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 9 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் வர முயன்றது.
இது குறித்து பவானிசாகர் மற்றும் விளா முண்டி வனத்துறையி னருக்கு பொதுமக்கள் தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை கூட்டங்களின் நடமாடத்தை கண்காணித்தனர்.
பின்னர் அந்த யானை கூட்டம் ஊருக்குள் வராத வாறு பட்டாசை வெடித்தும், அதிக ஒலி எழுப்பும் சைரனை ஒழிக்க விட்டும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் அணை மேல் பகுதி சாலையை கடந்து மறு கரைக்கு ஓடிய யானைகள் மேட்டுப்பாளையம் சாலை வனப்பகுதிக்குள் சென்றனர். வனப்பகுதிக்கு ள் சென்ற யானை கூட்டம் மீண்டும் ஊருக்குள் திரும்ப வாய்ப்புள்ளதால் வனத்து றையினர் தீவிர கண்காணி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறும்போது, பகல் வேளையிலேயே யானைகள் கூட்டம் பவானிசாகர் அணைப்பகுதியில் நடமாடு வதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மட்டுமன்றி இந்த பகுதியை சேர்ந்த கா ல்நடை மேய்க்க செல்பவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.






