என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    69-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை: 22 முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது
    X

    69-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை: 22 முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது

    • சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார்.
    • 68 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளிக்கிறது.

    தென்னிந்தியாவின் 2-வது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்றுள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அணையின் கரையின் நீளம் 8.78 கிலோமீட்டர். கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டர்.பிரதான கால்வாயில் இருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால்கள், 1,900 கிலோமீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டு ள்ளன.

    பவானி ஆறு மாயாறு சேரும் இடத்தில் ரூ.10.50 கோடி மதிப்பில், பவானிசாகர் அணை கட்டும் பணி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொழில் நுட்ப எந்திரங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்க ப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய முதல்- அமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார். 68 ஆண்டுகளை கடந்தும் உறுதி தன்மையுடன் காட்சியளிக்கிறது.

    வரலாற்றுப் பெருமை வாய்ந்த பவானிசாகர் அணை இன்றுடன் 68 ஆண்டுகளை நிறைவு செய்து 69 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

    அணையில் ஆற்று மதகுகள் 9, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3, உபரி நீர் ஸ்பில் - வே மதகுகள் 9 என 21 மதகுகள் உள்ளன. இதில் பவானி ஆற்று மதகுகளில் வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் மின்சாரம், கீழ்பவானி வாய்க்காலில் 8 மெகாவாட் மின்சாரம் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பவானிசாகர் அணை 1955 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் 1957ஆம் ஆண்டு முதல் முறையாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து பல்வேறு வருடங்களில் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு வரை மொத்தம் 22 முறை பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 68 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளிக்கிறது.

    Next Story
    ×