என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில்போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கதொழுவு ஊராட்சி க்கு உட்பட்ட ஒட்டன் கொட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள்.

    இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்ய ப்பட்டனர். மேலும் இவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.

    இதையொட்டி பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் சென்னிமலை அருகே அம்மன் கோவில் புதூரில் உள்ள வாகை த்தொழுவு அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமை தாங்கினார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சர வணன் முன்னிலை வகி த்தார்.

    இந்த கூட்டத்தில் தனியாக தோட்ட பகுதி களில் குடியிருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • ERD0411092023: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). டெய்லர். இவரது மனைவி பழனியம்மாள் (50). இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக சுந்தரராஜ்,
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). டெய்லர். இவரது மனைவி பழனியம்மாள் (50).

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக சுந்தரராஜ், மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து கிளம்பினார். சுந்தர்ராஜ் வண்டியை ஓட்ட பின்னால் பழனியம்மாள் அமர்ந்து வந்தார்.

    அப்போது திங்களூர் - பெருந்துறை ரோட்டில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே இடது ஓரமாக சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக சுந்தர்ராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுந்தரராஜ் மற்றும் பழனியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணவன்,மனைவி 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.

    இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது பர்கூர் மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் வனக்குட்டைகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தேங்கி இருப்பதால் தாகத்தை தீர்க்க அந்த தண்ணீரை பருகி செல்கின்றது.

    ஆனால் யானை மட்டும் அவ்வப்போது சாலைகளில் குறுக்கே சென்று இடம் பெயர்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை. வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதி தாமரைக்கரை சாலையில் ஒற்றை காட்டுயானை அங்கும், இங்குமாய் உலா வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் வனத்துறையினர் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது பார்த்து அமைதியாக ரசித்து செல்ல வேண்டுமே தவிர அதனை துன்புறுத்தும் வகையில் கூச்சலிடுவது, வாகனத்தை விட்டு கீழே இறங்கி சென்று படம் எடுப்பது கூடாது.

    இவை எல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்றும், மிகுந்த எச்சரிக்கையோடு வனப்பகுதியை கடக்க வேண்டும் என்று வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் தெற்கு பள்ளம் பகுதி சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (47). இவரது கணவர் லட்சுமி நாராயணன். சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது ஒரே மகன் ஹரிஷ். அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீவித்யா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவரும், மகனும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவித்யா தனது மகனுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்னை சென்று விட்டார். திருமணம் முடிந்து ஸ்ரீவித்யா தனது மகனுடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகை மற்றும் 8 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ வித்யாவின் வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியை வீட்டில் பணம்-நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மர்மநபர்கள் வயதான தம்பதி 2 பேரையும் கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர்.
    • கொலையாளிகளை பிடிக்கும் வகையில் டி.எஸ்.பி. ஜெயபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (80).

    இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என திருமணமான 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.

    முத்துசாமியும், சாமியாத்தாளும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு முத்துசாமியும், சாமியாத்தாளும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர்.

    இந்நிலையில் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி, கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டினர். சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் மர்மநபர்கள் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டினர்.

    இதில் முத்துசாமியும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்நிலையில் முத்துசாமியின் மகள் கலையரசியின் மகனான அஜித் (23), தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக நேற்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்திருந்ததால், வீட்டிற்குள் அஜித் சென்றார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், டி.எஸ்.பி ஜெயபாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசாமி, சாமியாத்தாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது அருகில் உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அருகே உள்ள சாலையில் சிறு தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள், அவர்கள் விட்டு சென்ற தடயங்களை கைப்பற்றினர். 16 பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நகை- பணத்திற்காக இந்த கொலை மற்றும் கொள்ளை நடந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கொலை மற்றும் கொள்ளை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மர்மநபர்கள் வயதான தம்பதி 2 பேரையும் கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர். எனவே இவர்கள் வட மாநில கும்பலை சேர்ந்தவர்களாக? இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்கும் வகையில் டி.எஸ்.பி. ஜெயபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை. வீடு தனியாக இருந்ததால் மர்மநபர்களுக்கு அது வசதியாக அமைந்து விட்டது. தனிப்படை போலீசார் அருகே எதுவும் கட்டிட வேலை நடைபெறுகிறதா? அதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்களா? என்று விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் சென்னிமலை பகுதியில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார்.
    • இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் தண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (50). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மரத்துக்காடு பகுதியில் புதிய கட்டிட பணிக்கு சென்றார். இரவு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஜன்னல் பகுதியில் படுத்திருந்தார்.

    அப்போது 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.43 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடி 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.43 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடி 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.
    • நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் எல்லப்பா ளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் மாரிசாமி (33). தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் சம்பவத் தன்று வெள்ளங்கோவில் காமராஜ் நகர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.

    மாரிசாமிக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த மாரிசாமியின் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாரிசாமியின் உடல் நல்லா ம்பட்டி மணக்காட்டுப்புதூர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் கரை ஒதுங்கியது.

    இது குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் மாரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர்-கம்பூர் சாலையில் உள்ள சோதனை சாவடியில் பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் மொபட்டை திருப்பி தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த நபர் பெருந்துறை சீனாபுரத்தை சேர்ந்த பழனிசாமி (40) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் பழனிசாமியை கைது செய்து, அவரிடம் இருந்த 7.90 கிலோ எடையுள்ள புகையிலை, குட்கா பொருட்களையும், மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    • கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை சின்னப்பை யன்புதூரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதியதாக தீர்த்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 சிலைகள் அமை ந்துள்ள கோவிலு க்கான கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத் துடன் தொடங்கியது.

    தொடந்து நேற்று 2 மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நிறைவுற்ற இன்று அதிகாலை 4 மணி க்கு 4-ம்கால யாக பூஜைகள் நடந்தன.

    பின்னனர் அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் 5.45 மணிக்கு மேல் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து தொட ர்ந்து தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வுகளும் அன்னதானமும் நடந்தன.

    இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
    • புதிய தார் சாலை அமைத்துள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் திருப்பூ ர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர்.இள ங்கோவன் பல்வேறு திட்ட பணிகளையும், திடக்க ழிவு மேலாண்மை பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

    திடக்கழிவு மேலாண்மை யில் நுண்உர கூட செயலா க்கம் மைய பணிகளையும், வளமீட்பு மைய பணிகளையும், உயிரி சுரங்க முறை மற்றும் உயிரி எரிவாயு கூட பணிகளை ஆய்வு செய்தார்.

    புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுமான பணிகளையும், மொடச்சூர் வார ச்சந்தை கடைகள் கட்டுமான பணிகளையும், அறிவு சார் மையம் கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

    புதிய தார் சாலை அமைத்துள்ள இடங்களான சாய் அபிராமி நகர், அழகு நகர், ராம் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.

    திடக்கழிவு மேலாண்மை பணி சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மையில் 100 சதவீ தம் அறிவியல் முறைப்படி செயலாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அதற்கு தேவையானவற்றிற்கு செயல்திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர் சிவக்குமார், துப்புரவு அலுவலர் சோழ ராஜ், துப்புரவு ஆய்வாள ர்கள் சவுந்தர ராஜன், நிருபன் சக்ரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×