என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஏ.டி.எம் மையத்தில் இரவு நேர காவலாளி கிடையாது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் ஈரோடு-கரூர் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் இரவு நேர காவலாளி கிடையாது. இதைப்போல் அலாரமும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதி சேர்ந்த மக்கள் வழக்கம் போல் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள லாக்கரை உடைக்க முயன்ற போது முடியாததால் மர்ம நபர்கள் திரும்பி சென்று விட்டனர். இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் தப்பியது.

    ஏ.டி.எம். மையத்தில் இரவு நேர காவலாளி மற்றும் அலாரம் இல்லாததை நன்கு தெரிந்து கொண்ட நபர்கள் திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுங்கச்சாவடி அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு, சித்தோடு, கவுந்தப்படி, கோபிசெட்டி பாளையம் சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், சாம்ராஜ் நகர் வழியாக மைசூர் சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக மைசூருக்கு தினமும் கார், வேன், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு முதல் பண்ணாரி வரை கவுந்தப்பாடி வழியாக 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து கவுந்தபாடி அருகே உள்ள ஓடத்துறை அடுத்த பால பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என தகவல் பரவியது.

    இதையடுத்து பால பாளையம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியது.

    இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கவுந்தப்பாடி- கோபிசெட்டிபாளையம் ரோடு பாலப்பாளையம் பகுதியில் கவுந்தப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், 200 பெண்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கவுந்தப்பாடி, பாலப்பாளையம், சூரியம்பாளையம், கோவில்பாளையம், ஓடத்துறை, காளிசெட்டிபாளையம், பொம்மநாயக்கன் பாளையம், ஒத்தக் கதிரை மற்றும் சற்று வட்டார பகுதிகளில் 50 மேற்பட்டம் கிராமங்கள் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இந்த பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் கவுந்தப்பாடி பாலப்பாளையம் வழியாக இரு சக்கர வாகனங்கள், வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் கோபி, சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயவிளை பொருட்களை கொண்டு செல்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதியில் சர்க்கரை மார்க்கெட் அமைந்தள்ளது. இதே போல் 72 சர்க்கரை குடோன்கள் அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை கொண்டு வந்து வருகிறார்கள். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் கவுந்தப்பாடி பகுதியில் ஓழுங்கு முறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்துக்கு ஏராளமான விவசாயிகள் தேங்காய் உள்பட பல பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதே போல் வியாபாரிகள் பலர் வந்து தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

    இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தினமும் கார், வேன், சரக்கு வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதனால் இந்த ரோட்டில் எப்போது வாகன போக்கு வரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த வழியாக சென்று வர அடிக்கடி சுங்ககட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் விசாயவிளை பொருட்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.

    எனவே இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் விவசாயிகள் பலர் டிராக்டர்களுடன் வந்திருந்தனர். அந்த டிராக்டர்களை ரோட்டோரம் நிறுத்தி சுங்கச்சாவடி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
    • அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், கோபி உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழி யர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் என 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

    இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:-

    16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து வட்டாரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. 19-ம் தேதி மறியல் போராட்டம், 22-ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சிதுறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்தப்படும். ஊரக வளர்ச்சிதுறை போராட்டம் காரணமாக ஊராட்சி பகுதிகளில் குடிநீர், 100 நாள் திட்டப் பணிகள், அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவுதம் திடீரென நீரில் மூழ்கினார்.
    • நீண்ட போராட்டத்துக்கு பிறகு கவுதம் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாமரத்துபாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (25). கூலி தொழிலாளி.

    அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி ஏரியில் உறவினருடன் கவுதம் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கவுதம் திடீரென நீரில் மூழ்கினார்.

    அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து அம்மாபேட்டை போலீசருக்கும், அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய கவுதமை தேடினார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு கவுதம் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மஞ்சள் சந்தையில் குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 59 ஆக சரிந்தது.
    • விற்பனையான மூட்டைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது.

    ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த ஜூலை மாதம் முதல் மஞ்சள் விலை உயர தொடங்கியது. குவி ன்டால் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்த மஞ்சள் விலை ரூ.14 ஆயிரத்தை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மஞ்சள் விலை மேலும் அதிகரித்து ரூ.15,422-க்கு விற்பனை யானது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது. சமீப காலமாக மஞ்சள் விலை குறைந்து விலை சரிய தொடங்கியது.

    இந்நிலையில் நேற்றைய மஞ்சள் சந்தையில் குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 59 ஆக சரிந்தது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த நிலையில் விலை சரிவால் விற்பனைக்கான மஞ்சள் வரத்தும் வெகுவாக குறைந்தது. அதேபோல விற்பனையான மூட்டைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு நேற்று 168 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 41 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனையானது.

    விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,169 முதல் ரூ.12 ஆயிரத்து 289 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,829 முதல் ரூ. 11 ஆயிரத்து 789 வரையும் விற்பனையா னது.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 596 மூட்டை மஞ்சள் வரத்தான் நிலையில் 206 மூட்டை மஞ்சள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,919 முதல் ரூ.13 ஆயிரத்து 59-க்கு விற்பனையானது. கிழங்கு மஞ்சள் ரூ.7,419 முதல் ரூ.11 ஆயிரத்து 565 வரை விற்பனையானது.

    ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 190 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 128 மூட்டை விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,800 முதல் ரூ.11,464 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,255 முதல் ரூ.10 ஆயிரத்து 369 வரையும் விற்பனையானது.

    • தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.56 லட்சத்து 94 ஆயிரத்து 125-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 1,539 மூட்டைகள் கொண்ட 74 ஆயிரத்து 944 கிலோ எடை யுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.77.60 காசுகள், அதிகபட்சவிலையாக ரூ.81.83 காசுகள், சராசரி விலையாகரூ.79.80 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்த பட்சவிலையாக ரூ.57.79 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.09 காசுகள், சராசரி விலையாக ரூ.71 என மொத்தம் ரூ.56 லட்சத்து 94 ஆயிரத்து 125-க்கு விற்பனையானது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 75.83 அடியாக சரிந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 75.83 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்க ராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24. 86 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.30 கனஅடியும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.26 கன அடியாக உள்ளது.

    • அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.
    • ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்பவர் ராஜா என்கிற ரங்கசாமி (41). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரங்கசாமி வேலை முடித்து விட்டு சொந்த வேலை காரணமாக நம்பியூர் மேடை அருகே ரோட்டின் வலது பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி சம்பவ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.
    • திம்பம் மலைப்பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகன மட்டுமே அனுமதித்து வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மிகவும் ஆபத்தான மலைப்பகுதி ஆகும்.

    தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

    இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் திம்பம் மலைப்பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகன மட்டுமே அனுமதித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    திம்பம் மலைப்பகுதி 8-வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் தன்ராஜ் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

    வாகனம் கொண்டை ஊசி வளைவிலேயே கவிழ்ந்து விழுந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப்பகுதியில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    பிறகு பண்ணாரி சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் தக்காளி பாரத்தை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து கவிழ்ந்து கிடந்த வேனை ஜே.சி.பி. மூலம் அப்புறப் படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர்.

    இதனால் 6 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. சரக்கு வேனில் 4 டன் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நிலை தடு மாறி கவிழ்ந்தது தெரிய வந்தது. எனவே சிறிய ரக வாகனங்களுக்கும் பாரம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழங்குடியின மக்கள் கேழ்வரகு பயிரை அதிகமாக சாகுபடி செய்கின்றனர்.
    • கேழ்வரகு பயிரில் ஒரு ஏக்கருக்கு 900 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் ராகி, பீன்ஸ், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் 4 ஆயிரம் ஹெக்டேரில் கேழ்வரகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை க்கழகம் அத்தியந்தல் 1 என்ற புதிய ரக கேழ்வரகை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த புதிய ரக கேழ்வரகு பர்கூர் மலைப்பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் முதல் முறையாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உழவியல் விஞ்ஞானி சரவணகுமார் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது உணவுக்காக கேழ்வரகு பயிரை அதிகமாக சாகுபடி செய்கின்றனர்.

    ஏற்கனவே அவர்கள் பயிரிட்ட கேழ்வரகு பயிரில் ஒரு ஏக்கருக்கு 900 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது புதிதாக அறிமுகப் படு த்தப்பட்டுள்ள அத்தியந்தல் 1 என்ற ரகத்தில் ஏக்கருக்கு 1,500 கிலோ மகசூல் கிடைக்கு ம் என கண்டறியப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பர்கூர் அருகே கொங்காடை கிராமத்தில் 10 ஏக்கரில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. பலத்த காற்று வீசும் போது எளிதில் சாய்ந்து விடாது.

    நோய் எதிர்ப்பு திறன் மிக்கது. எனவே விவசாயி களும் ஆர்வமாக இந்த பயிரை சாகுபடி செய்து ள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த சாகுபடி தொழில்நுட்பம் குறித்து செய்திகள் முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.

    ஈரோடு:

    வேளாண்மையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது வேளாண்மை பல சவால்களை சந்தித்து வருகிறது.

    குறிப்பாக உழவர்களுக்கு தகுந்த நேரத்தில் பண்ணைக்கு வேண்டிய வேளாண் இடு பொருட்களை உழவர்க ளின் வீடுகளுக்கே விநியோகம் செய்வது மிக பெரிய சவாலாக உள்ளது. உழ வர்கள் சிலநேரம் தரமான இடுபொருட்களை பெற அதிக நேரம் மற்றும் செலவு செய்யவேண்டி உள்ளது.

    இதனை சரி செய்ய தமிழ்நாடு அரசின் ஒரு தொடர் முயற்சியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை க்கழகம் உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் இடுபொருட்கள் உழ வர்களின் வீடுகளுக்கே நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் வகையில் வேளாண்பல் கலைக்கழகம் TNAU AgriCart என்ற வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் உழவர்கள் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.வேளாண் பருவங்கள் தொடங்கும் முன் வேண்டிய பயிர் ரகங்களின் விதைகள் மற்றும் வேளாண்இடு பொருட்கள் குறிப்பாக உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், பயிர் பூஸ்டர்கள் போன்றவைகள்ஆன்லைன் மூலம் வாங்கி பருவத்தே பயிர் செய்து உழவர்கள் பயனடையலாம்.

    அமேசான் மற்றும் பிளி ப்கார்ட் ஆன்லைன் இணைய தளத்தில் பொது மக்கள் எவ்வாறு அனைத்து பொரு ட்களையும் ஆன்லைன் மூலம் வாங்கு கிறார்களோ அதேபோல் இந்த தளத்தில் உழவர்கள் ஆன்லைன் மூலம் இடுபொருட்கள் மற்றும் விதைகளை வாங்க முடியும்.

    வேளாண்மைப் பல்கலைக் கழகம் தற்பொழுது வேளா ண்மைத் துறையுடன் இணைந்து உழவர்களி டையே நல்ல தொடர்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் உழவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உடனடியாக வயலில் கடைபிடிக்க வழிவகை செய்து வேளாண் உற்பத்தி யை பெருக்கி உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.

    இந்த இணையதளத்தை அனைத்து உழவர்களும் பயன்படுத்தி தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தை மேலும் உயர்த்திட வேண்டும்

    இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எடுத்து கூறினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் நடந்தது.

    அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வரவேற்றார். அருணா கல்வி உடல் ஊனமுற்ற இளைஞர் வாழ்வு பற்றி சிறப்புரை ஆற்றினார், சிறப்பு பிரிவு முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர், குழந்தை களின் கல்வி ஒழுக்கம் எஸ்டி மக்களுக்கான வேலை வாய்ப்பு முன்னுரிமை, விவசாய தொழில், குழந்தை திருமணம் தடுத்தல் மேலும்பொதுமக்களும் போலீசும் நண்பர்களாக பழக வேண்டும்.

    போலீசை கண்டு தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை. மலைப் பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் இருப்பி ன் அதனை போலீசுக்கு தகவலை தெரிவிக்க வேண்டும்.

    போலீஸ் தங்களின் நண்பர்கள் என்று எண்ணி பழகி அவர்க ளிடத்தில் சுமுக உறவோடு இருந்து குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களிடத்தில் எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியில் மங்களம் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ராமசாமி, சேக் தாவூத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பர்கூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் நன்றியுரை கூறினார், 

    ×