என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் பருப்பு விற்பனை"

    • விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்,
    • ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்,

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று செவ்வாய்கிழமை 134விவசாயிகள் கலந்து கொண்டு 59 ஆயிரத்து 343கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 9வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.40க்கும், குறைந்தபட்சம் ரூ.59. 20க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.43லட்சத்து 55ஆயிரத்து 970க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 921-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 740 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சவிலையாக ரூ.76.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.5 காசுகள், சராசரி விலையாக ரூ.78.39 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.60 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.74.89 காசுகள், சராசரி விலையாக ரூ.73.9 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 921-க்கு விற்பனையானது.

    • தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.56 லட்சத்து 94 ஆயிரத்து 125-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 1,539 மூட்டைகள் கொண்ட 74 ஆயிரத்து 944 கிலோ எடை யுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.77.60 காசுகள், அதிகபட்சவிலையாக ரூ.81.83 காசுகள், சராசரி விலையாகரூ.79.80 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்த பட்சவிலையாக ரூ.57.79 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.09 காசுகள், சராசரி விலையாக ரூ.71 என மொத்தம் ரூ.56 லட்சத்து 94 ஆயிரத்து 125-க்கு விற்பனையானது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம்.
    • மொத்தம் ரூ.74 லட்சத்து 74 ஆயிரத்து 755-க்கு விற்பனையானது.

    கொடுமுடி:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 715 எண்ணிக்கையிலான ஆயிரத்து 807 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.18.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.29.9 காசுகள், சராசரி விலையாக ரூ.24.96 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.43 ஆயிரத்து 603-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 695 மூட்டைகள் கொண்ட 34 ஆயிரத்து 47 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில்முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.79.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.82.99 காசுகள், சராசரி விலையாக ரூ.82.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.64.35 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.81.79 காசுகள், சராசரி விலையாக ரூ.76.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரத்து 807-க்கு விற்பனையானது.

    இதேபோல எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் ஆயிரத்து 292 மூட்டைகள் கொண்ட 60 ஆயிரத்து 4 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.81.55 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.83.55 காசுகள், சராசரி விலையாக ரூ.83.15 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.91 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.89 காசுகள், சராசரி விலையாக ரூ.75.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.47 லட்சத்து 68 ஆயிரத்து 345-க்கு விற்பனையானது.

    கொடுமுடி மற்றும் எழுமாத்தூர் ஆகிய 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் மொத்தம் ரூ.74 லட்சத்து 74 ஆயிரத்து 755-க்கு தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனையானது.

    ×