search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager dies after"

    • கவுதம் திடீரென நீரில் மூழ்கினார்.
    • நீண்ட போராட்டத்துக்கு பிறகு கவுதம் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாமரத்துபாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (25). கூலி தொழிலாளி.

    அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி ஏரியில் உறவினருடன் கவுதம் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கவுதம் திடீரென நீரில் மூழ்கினார்.

    அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து அம்மாபேட்டை போலீசருக்கும், அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய கவுதமை தேடினார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு கவுதம் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பார்த்திபன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.
    • தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் கெட்டி சமுத்திரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்-ருக்குமணி தம்பதியினர். இவர்களது மகன் பார்த்திபன் (18). கட்டிட தொழிலாளி.

    இந்நிலையில் பார்த்தி பன் தனது நண்பர்களான லட்சுமணன், மணிகண்டன் 2 பேருடன் சேர்ந்து கொண்டு ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி காவிரி ஆற்று பாலம் அருகே குளிக்க சென்று உள்ளனர்.

    அப்போது பார்த்திபன் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். உடன் சென்ற நண்பர்கள் காப்பாற்ற முடியாததால் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்து அந்தியூர் தீயணைப்புத் துறை மற்றும் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.பார்த்திபனை ஆற்றில் தேடிய தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் கழித்து இரவு பிணமாக மீட்டனர்.

    பிணமாக மீட்ட பார்த்தி பன் உடலை அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனு ப்பி வைத்த போலீசார் வழ க்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர். இன்று பார்த்திபன் உடல் அந்தியூர் அரசு மரு த்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்க இருக்கி றது. இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    • நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.
    • வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூர், ஓழகடம், கோமியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (35).சம்பவத்தன்று செந்தில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    வெள்ளோடு-பெருந்துறை சென்னிமலை ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.

    இதில் நெஞ்சி பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்து கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால் முகேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஒலகடம் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (32). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யத்தில் உள்ள ஒரு கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இவர் வேலை முடிந்து இரவு குமாரபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கி ளில் ஒலகடம் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அவர் மயிலம்பாடியில் இருந்து ஒலகடம் செல்லும் ரோடு சடையக் கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து நிலை தடுமாறினார்.

    இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சரவணக்குமார் நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனி வாசன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 27).

    இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். சரவணக்குமார் சத்தியமங்கலம் ஈரோடு ரோடு நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×