என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர்.
    • அரசு எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் காய்கறிகள், மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர்.

    தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உழவு கூலி, ஆட்கள் கூலி என அதிக அளவில் பணம் செலவு செய்துள்ள நிலையில் விைல கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இங்கு தக்காளி சாகுபடிக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படு கின்றன.

    மழை கைகொடுத்த நிலையில் தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து ள்ளன. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரு கின்றோம்.

    இதற்கு விலை கிடை க்குமா என தெரிய வில்லை. பெரும்பாலும் இடைத்தர கர்கள் குறைந்த விலையில் வாங்கி காய்கறிகளை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். எனவே அரசு எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    • சுற்றுலா தலமான கொடைக்கானலில் லாப ேநாகத்தை கருத்தில் கொண்டு பல்வேறு ரிசாட்டுகள், ஓட்டல்கள், தனியார் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
    • வெடி வைத்து பாறைகளை உடைத்ததால் கற்கள் சிதறி சாலையில் விழுந்தன. இதனால் வாகனங்களில் வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கா னலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா தலமான இங்கு லாப ேநாகத்தை கருத்தில் கொண்டு பல்வேறு ரிசாட்டுகள், ஓட்டல்கள், தனியார் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுதியின்றி கட்டப்பட்ட லாட்ஜ்களுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுபடி சீல் வைக்க ப்பட்டது. தற்போது மலை ப்பகுதியில் எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இங்கு குறிப்பிட்ட அளவு எந்திரங்கள் மட்டுமே அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் விதிகளை பின்பற்றாமல் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்ப டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரி அருகே வத்தலக்குண்டு பிரதான சாலை ஓரத்தில் தனியார் கட்டிடப்பணிகள் நடை பெற்று வருகின்றன. இங்கு நேற்று மதியம் வெடி வைத்து பாறைகளை உடைத்ததால் கற்கள் சிதறி சாலையில் விழுந்தன. இதனால் வாகனங்களில் வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பைக்குகளில் வந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததால் காயம் ஏற்பட்டது.

    இது குறித்து அங்கிருந்த வர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காத தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆர்.டி.ஓ. ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானலில் எந்திரபயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் போர்வெல், பாறை தகர்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் இங்கு பாது காப்பற்ற சூழல் ஏற்பட்டு ள்ளது. எனவே வனப்பகுதி மற்றும் மலையை பாதுகாக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இங்கு ஆய்வு செய்து அனுமதியின்றி செயல்படும் எந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் மலைகளை வெடி வைத்து தகர்ப்பதை உடனடி யாக நிறுத்த வேண்டும் என்றனர்.

    • ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து வளர்த்து வந்ததுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளையும் அடக்கி வந்துள்ளார்.
    • கொலை நடந்த இடத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி ஊராட்சி கொல்லப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இங்குள்ள பயன்பாடற்ற கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய தேடுதல் பணி நள்ளிரவு 1 மணி வரை நீடித்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தது.

    அழுகிய நிலையில் கிடந்த அந்த வாலிபரின் பனியனில் ராம் பாய்ஸ் கபடி குழு என எழுதப்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். உடலுடன் கல்லைக் கட்டி, கை, கால்களும் கட்டப்பட்டு இருந்ததால் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டது. உறுதியானது.

    போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் மணி (வயது 23) என தெரிய வந்தது.

    இவர் ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து வளர்த்து வந்ததுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளையும் அடக்கி வந்துள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கொலை நடந்த இடத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருடந்தோறும் தை மாதம் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாமி கும்பிட்டு நேர்ச்சை நிறைவேற்றுவது வழக்கம்.
    • பழங்குடியின மக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பீமனை சாமி தரிசனம் செய்து அசைவ விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு வனப்பகுதியின் நடுவே 6அடி பீமன் சிலை உள்ள கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலை இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் பேத்துப்பாறை பொதுமக்கள் பராமரித்து வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலில் வருடந்தோறும் தை மாதம் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாமி கும்பிட்டு நேர்ச்சை நிறைவேற்றுவது வழக்கம். அதன்படி பீமன் கோவிலில் திருவிழாதொடங்கியது. விவசாயம் செழிப்பதற்கும், இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் பழங்குடியின மற்றும் பேத்துப்பாறை கிராம மக்கள் பீமனுக்கு வழிபாடு நடத்தி ஆடு, கோழி, காய், கனிகள் காணிக்கையாக பீமனுக்கு படைக்கப்பட்டது.

    இதில் பழங்குடியின மக்களின் குரவி கூற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பழங்குடியினர் நெருப்பின் மீது நின்றும் வனப்பகுதியில் உள்ள சாட்டைகள் போன்ற தாவரத்தை கொண்டு கை, கால் மற்றும் உடம்பில் அடித்து பக்தர்களுக்கு குறி சொல்லி வருகின்றனர்.

    வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு கொடைக்கானல் சுற்றுவட்டார மலைக்கிராம பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பீமனை சாமி தரிசனம் செய்து அசைவ விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.

    மேலும் பீமன் சாமியை வழிபாடு செய்திட பேத்துப்பாறை கிராமத்தில் இருந்த சுமார் 4கிலோ மீட்டர் வனப்பகுதிக்குள் நடந்து சென்றும், ஆற்றை கடந்து சென்றிட அக்கறைக்கும், இக்கரைக்கும் கயிறை கட்டி சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர், இந்த விழாவில் பொதுமக்களுடன் பீமன் சாமி கலந்து கொள்வதாக இன்றளவிலும் நம்பப்படுகிறது. இந்த கோவிலானது 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • இருவரது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பலக்கனூத்தை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஸ்பாண்டி(23). இவரது வீட்டிற்கு அருகே திண்டிவனத்தை சேர்ந்த செல்வன் மகள் மாலினி(22) என்பவர் தனது பாட்டி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதுகுறித்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே அவர்கள் காதலை கண்டித்தனர். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கினர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    தாங்கள் சேர்ந்து வாழ்ந்தால் இருவீட்டாரும் பிரச்சினை செய்வார்கள் என பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டனர்.

    இதனைதொடர்ந்து காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

    • அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார்.
    • நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த சகாயராஜ் தனது மனைவி அனிதா(37) என்பவருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் கோவை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.

    அப்போது அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர். பஸ் ஏறியவுடன் நகையை பார்த்தபோது அது திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிதா ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின் பதிவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகையை திருடியது வத்தலக்குண்டு பண்ணப்பட்டியை சேர்ந்த சத்யா(44), மதுரையை சேர்ந்த முத்துமாரி(35), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணி(31) என தெரியவந்தது.

    இவர்கள் பஸ்நிலையம் மற்றும் கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
    • பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். காங்கேயம், தாராபுரம், மானூர் வழியாக வரும் அவர்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பழனி சண்முகநதி வந்தடைகின்றனர். அங்கு காலை மகாபூஜை நடத்திவிட்டு காவடிகளுடன் புறப்பட்டு பழனி முருகன் கோவில் வருகின்றனர். பழனிக்கு வரும் இவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.

    இந்நிலையில் பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 200 கிலோ தேன், 200 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    • போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொட்டிசெட்டிபட்டி கன்னிமார்நகரை சேர்ந்த பாண்டி மகன் சதீஸ்கண்ணன்(23). இவர் பள்ளபட்டியில் உள்ள சிப்காட்டில் வேலைபார்த்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி சென்றபோது அதேபகுதியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு மற்றும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி நிலத்தை அபகரிக்கும் தோணியில் பேசி வந்தனர்.

    மேலும் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் பாண்டி(50) அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டவாறே தான் கொண்டுவந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது.
    • ஆத்திரமடைந்த கும்பல் ஊழியர்களை சரமாரியாக தாக்கியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கொடைரோடு மாவுத்த ம்பட்டியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் கொரடை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வந்தார். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் பங்க் ஊழியர் எடிசனிடம் எனக்கு ஏன் சீக்கிரம் பெட்ரோல் போடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடு பட்டார்.

    பின்னர் சரமாரியாக எடிசனை தாக்கினார். இதை தடுக்க வந்த மற்றொரு ஊழியர் கிறிஸ்டோபரும் தாக்கப்பட்டார். அதிலும் ஆத்திரம் அடங்கhமல் தனது நண்பர்களான திலீப், சந்தோஷ் ஆகிேயாரை செல்போன் மூலம் அழைத்து எடிசன் மற்றும் கிறிஸ்டோபரை கும்பல் கடுமையாக தாக்கியது.

    இதில் காயமடைந்த அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் திலீப் மற்றும் சந்ேதாசை பிடித்து விசா ரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

    • நாட்டு கோழி 1 கிலோ ரூ.350 முதல், ரூ.400 வரையும், சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.
    • மேலும் அதிகாலையில் வரும் வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டு ச்சந்தை கூடி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை க்காக கொண்டு வருகின்றனர்.

    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்வதால் இப்பகுதி ஆடு மற்றும் கோழிகளுக்கு வரவேற்பு உள்ளது. தைப்பூசத்தை யொட்டி பழனி முருகன் கோவிலுக்கும், சமயபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை சென்றனர்.

    இதனால் அவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துள்ளனர். இதன் காரணமாக ஆடு மற்றும் கோழிகள் விற்பனை சரிந்துள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படும் அய்யலூர் சந்தை களை இழந்து காணப்படுகிறது.

    இருந்த போதும் நாட்டு கோழிகள் மற்றும் சேவல்கள் ஓரளவு விற்பனையானது. நாட்டு கோழி 1 கிலோ ரூ.350 முதல், ரூ.400 வரையும், சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    தற்போது குளிர் காலம் என்பதால் குளிரை அதிகம் தாங்கும் செம்மறி ஆட்டு க்குட்டிகள் விற்பனையும் கணிசமாக இருந்தது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.7500க்கு விற்பனை யானது. பல்வேறு பகுதிக ளில் இருந்து அய்யலூர் சந்தைக்கு வியாபாரிகள் வருகின்றனர்.

    தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின் போது கோடிக்கணக்கில் வர்த்தக மாகும். சாதாரண நாட்களில் ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வர்த்தம் நடைபெற்று வருகிறது. எனவே சந்தையை பேரூரா ட்சி ஏற்று நடத்தினால் வருவாய் அதிகரிக்கும்.

    மேலும் அதிகாலையில் வரும் வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்ற னர். சாலையிலும் அதிக அளவு கூட்டம் கூடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்ற னர். எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட் மற்றும் காமராஜர் மார்க்கெட்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருகிறது.
    • ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனையா வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைசுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    பின்னர் அவை வியாபாரிகளால் வாங்கப்பட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தக்காளிக்கு நிலையான விலை கிடைக்காமல் இருந்தது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அறுவடை செய்யாமலும், குப்பையில் கொட்டியும் வந்தனர்.

    தற்போது தக்காளிக்கு போதிய விலை கிடைத்து வருகிறது. குறிப்பாக வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை போதுமான அளவு கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட் மற்றும் காமராஜர் மார்க்கெட்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருகிறது.

    இவை மதுரை, சிவகாசி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் அனுப்பிைவக்கப்படுகிறது. ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம், திருமண விஷேசங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் தக்காளிக்கு நல்ல விலை கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    நத்தத்தை அடுத்த எஸ்.வளையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ந் தேதி) நடைபெறுகிறது.

    இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×