என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்றுவதற்காக கையை கொடுத்து மீட்க முயன்றார்.
    • தப்பி வந்த கல்லூரி மாணவி தனது காதலனை மீட்க கோரி சத்தம் போட்டார்.

    வால்பாறை:

    கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சாஹர் (வயது21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவருக்கும், இருகூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேற்று வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட்டில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அருகே அமர்ந்து அதன் அழகினை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஹர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்றுவதற்காக கையை கொடுத்து மீட்க முயன்றார். ஆனால் அவரும் நீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டார்.

    2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் கல்லூரி மாணவி அருகே இருந்த பாறையை பிடித்து உயிர்தப்பி கரையேறி வந்தார். ஆனால் சாஹர் நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    இதையடுத்து தப்பி வந்த கல்லூரி மாணவி தனது காதலனை மீட்க கோரி சத்தம் போட்டார். இதனை கேட்டு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கல்லூரி மாணவரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.

    தொடர்ந்து வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் இரவு வெகுநேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்று நீரில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணி நடந்தது.

    இதுவரை அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார்.
    • இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவரும் ரமணி படித்த கல்லூரியில் படித்தார். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் 2 பேருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ரமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சஞ்சயுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமணி, தனது காதலனான சஞ்சயுடன் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு சென்றதும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    மேலும் காதல் ஜோடியினரின் பெற்றோரும் வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வாலிபரின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை, வாலிபரின் பெற்றோருடன் அனுப்பினர்.

    கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமணியை அவரது தந்தை கருப்புசாமி போனில் தொடர்பு கொண்டு உனது துணிகளை வாங்கிக்கொண்டு செல் என கூறியுள்ளார். அதற்கு ரமணி, எனக்கு வேலை இருப்பதால் மற்றொரு நாள் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த கருப்புசாமி மகள் என்றும் பாராமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். கணவர் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் சரியாகவில்லை என தெரிகிறது.

    ரமணி தொலைதூர கல்வியில் பாதியில் விட்ட படிப்பை தொடர விரும்பினார். இதற்காக நேற்று கணவன், மனைவி 2 பேரும், தொண்டாமுத்தூர் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் மாலையில், வீட்டில் இருந்த ரமணி தனக்கு தலைவலிப்பதால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

    இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார். ஆனால் அவர் எழுந்து இருக்கவே இல்லை. மேலும் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியை தூக்கிக்கொண்டு பூலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சஞ்சய் கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இளம்பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது அடித்தனரா? அல்லது இளம்பெண் தந்தை திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

    இளம்பெண்ணின் மர்மச்சாவு குறித்து ஆலாந்துறை போலீசார் இளம்பெண்ணின் பெற்றோர், கணவர் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
    • திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவரும் ரமணி படித்த கல்லூரியில் படித்தார். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் 2 பேருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ரமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சஞ்சயுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமணி, தனது காதலனான சஞ்சயுடன் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு சென்றதும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    மேலும் காதல் ஜோடியினரின் பெற்றோரும் வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வாலிபரின் பெற்றோர் திருமணத்தை ஏற்று கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை, வாலிபரின் பெற்றோருடன் அனுப்பினர்.

    கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமணியை அவரது தந்தை கருப்புசாமி போனில் தொடர்பு கொண்டு உனது துணிகளை வாங்கி கொண்டு செல் என கூறியுள்ளார். அதற்கு ரமணி, எனக்கு வேலை இருப்பதால் மற்றொரு நாள் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த கருப்புசாமி மகள் என்றும் பாராமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். கணவர் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் சரியாகவில்லை என தெரிகிறது.

    ரமணி தொலைதூர கல்வியில் பாதியில் விட்ட படிப்பை தொடர விரும்பினார். இதற்காக நேற்று கணவன், மனைவி 2 பேரும், தொண்டாமுத்தூர் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் மாலையில், வீட்டில் இருந்த ரமணி தனக்கு தலைவலிப்பதால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

    இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார். ஆனால் அவர் எழுந்து இருக்கவே இல்லை. மேலும் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியை தூக்கி கொண்டு பூலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சஞ்சய் கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இளம்பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது அடித்தனரா? அல்லது இளம்பெண் தந்தை திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

    இளம்பெண்ணின் மர்மச்சாவு குறித்து ஆலாந்துறை போலீசார் இளம் பெண்ணின் பெற்றோர், கணவர் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.
    • ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதனால் வனத்தில் வசிக்கும் மான், காட்டு மாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன.அவ்வாறு வரும் வனவிலங்குகள், அங்குள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலங்களாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருகிறது.நேற்று இரவு பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.

    அந்த சாலையை கடந்த காட்டு யானைகள் சாலையின் மறுபுறம் உள்ள உணவகத்திற்குள் புகுந்தது. அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விடலாம் என நினைத்து காட்டு யானைகள், உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முயன்றன. ஆனால் அது முடியாமல் போகவே சிறிது நேரம் அங்கேயே சுற்றிதிரிந்தது. இதனால் ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    மேலும் வனத்துறையினருக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் காட்டு யானைகளை அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதன் காரணமாக ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாகவும், வாகன போக்குவரத்து அதிகமாகவும் காபணப்படும் ஊட்டி சாலையை கடந்த 2 காட்டு யானைகளை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

    இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சமீபகாலமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காட்டு யானைகளின் வலசைப்பாதைகளை மறித்தும், மறைத்தும் கட்டிடங்கள் தனியார் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது.

    இதன் காரணமாக யானைகள் வேறுவழியின்றி ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வனத்துறையினர் யானைகளின் வலசைப்பாதைகளை கண்டறிந்து அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினால், மட்டுமே காட்டு யானைகள் எளிதாக வனப்பகுதியின் ஒருபுறமிருந்து மற்றொரு புறம் கடந்து செல்ல இயலும்.

    இப்படிதான் நேற்று மாலை ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. வனத்துறையினரின் முயற்சிக்குப்பின் மற்றொரு பாதை வழியாக காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
    • மயிலின் கழுத்தில் காயம் இருப்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    கவுண்டம்பாளையம், 

    கோவை பகுதிகளில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மயில்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோவில் அடுத்துள்ள ராகவேந்திரா நகரில் இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பார்த்து, புகைப்படம் எடு த்து வனத்துறையினருக்கு தகவல் அளி த்தார்.

    தக வலின் பேரில் அங்கு சென்ற வனத் துறையி னர் இறந்த மயிலை கைப்பற்றி விசார ணை செய்து வருகி ன்றனர். மயில் மின்சாரம் தாக்கி உயிரிழ ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோண த்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலின் கழுத்தில் காயம் இருப்பதால் யாராவது கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    • தினமும் பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
    • ஒற்றை நோட்டை வைத்து கொண்டு மாற்ற முடியாமல் மக்கள் புலம்புகிறார்கள்.

    குனியமுத்தூர்

    கடந்த 19-ந் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அதனை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம் எனவும், அனைத்து வங்கிகளிலும் தினமும் பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது.

    செப்டம்பர் மாதம் இறுதிவரை அனைத்து வர்த்தக நிறுவனம் மற்றும் பெட்ரோல் பங்ங் என அனைத்து இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

    ஆனால் 2 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்படுவதாக அறிவித்ததில் இருந்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்களிடம் மூட்டை மூட்டையாக 2000 நோட்டுகள் கிடையாது. சேமித்து வைத்திருக்கும் 10 அல்லது 20 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தான் இருக்கும். ஆனால் அதனையும் கடைகளில் வாங்க மறுத்து வருகிறார்கள். எனவே செப்டம்பர் இறுதி வரை அனைத்து வர்த்தக மையங்களும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டாயமாக அறிவிக்க வேண்டும். மேலும் கட்டாயம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும் என்றனர்.

    நேற்று கூட கோவை சுந்தராபுரத்தை அடுத்த எல்ஐசி காலனியை சேர்ந்த சமூக ஆர்வலரான ராஜா அப்பாசாமி என்பவர் தனது மொபட்டில் வெளியில் சென்றார். போகும் வழியில் பெட்ரோல் தீர்ந்து விடவே அருகில் இருக்கும் பெட்ரோல் போட சென்றார். கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்துள்ளது.

    இதனை கொடுத்து பெட்ரோல் போட முயன்றபோது, 500-க்கு போட்டால் வாங்கி கொள்கிறோம். இல்லையென்றால் வாங்க மாட்டோம் என கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து நேற்று மளிகை கடை, டிபன் கடைக்கு சென்று மாற்ற முயன்றும் முடியாததால் சோர்வடைந்து சுந்தராபுரம் சிக்னலில் அமர்ந்தார். அவரை போலீஸ் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரிசர்வ் வங்கியின் அறிவி ப்பு வரவேற்க த்தக்கது. ஆனால், ஒரு திட்டம் அமுல்படுத்தும் போது, அதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் அமுல்படுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் இறுதி வரை இந்த நோட்டை யாரும் வாங்க மறுக்கக்கூடாது என்று ஒரு சட்டம் இயற்றினால், அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே இந்த அவல நிலையை மாற்ற வேண்டும். மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் இணைந்து இதற்கு உடனே ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கி கணக்கு சரியாக வைத்திருக்கும் ஒருவர், மற்றும் மாதாமாதம் சரியாக வரி செலுத்துபவர் இதனைப் பற்றி கவலை பட வேண்டாம். மூட்டை மூட்டையாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும். எந்த ஒரு சராசரி மனிதனிடம் 2000 நோட்டுகளை பார்க்க முடியாது. ஆகவே இதனைப் பற்றி யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.

    • தார்சன் தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
    • தார்சன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர்.

    கோவை,

    கோவை சின்னவே டம்பட்டி அருகே உடயாம்பா ளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (52). இவரது மகன் தார்சன் (வயது 31). இவர் எம்பிஏ முடித்து விட்டு ஆவாரம்பா ளையத்தி ல் உள்ள தனியார் நிறுவன த்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலை யில் வேலையை முடித்து விட்டு அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிப்பத ற்காக சென்றார்.அப்போது குளியல் அறையில் இருந்து திடீரென சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு குழந்தை வேல் குளியல் அறைக்கு சென்று பார்த்த போது, அவரது மகன் சுயநினை வின்றி கீழே விழுந்து மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு கொண்டு சென்ற னர். இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அங்கிருந்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவண ம்பட்டி போலீசா ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.
    • கிட்டாம்பா ளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 130 நபர்கள் பங்கேற்றனர்.

    நீலாம்பூர்,

    தமிழரின் பாரம்பரியக்க லைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.

    அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற க்கலைக்குழு சோமனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியு ள்ளது.

    இதை ஒட்டி 26-வது சங்கமம் நாட்டுப்புற க்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம் நேற்று சோமனூர் அடுத்த காடுவெட்டிபாளையம் விநாயகர்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    கிட்டாம்பா ளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 130 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் செந்தில்குமார் பேசியதாவது:-, கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள், வள்ளி கும்மியாட்டகலை, மற்றும் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகின்றது.

    நாட்டுபுறக்கலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெதெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து ஆறு மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருக்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 ஆயிரம் ரூபாய் வள்ளி கும்மி ஆட்ட கலைக்குழுவுக்கு பரிசு வழங்கினார். சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோமனூரை சேர்ந்த ஒயிலாட்ட ஆசிரியர் செந்தில்குமார் ஒயிலாட்ட கலையையும் வள்ளிகும்மியாட்ட கலையையும் மீட்டெக்கும் முயற்சியில் பல்வேறு கிராமங்களில் தனது குழுவை அமைத்து வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டக் கலையை அரங்கேற்றி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கலையை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கற்று கொடுத்து உள்ளார்.

    இவரது பயிற்சியில் தற்போது சோமனூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது.
    • வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    குனியமுத்தூர்,

    தமிழகத்தில் கடந்த சித்திரை மாத இறுதியில் இருந்து தற்போது வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமா கவே காணப்ப டுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே கிடையாது.

    அத்தியாவசிய தேவை யாக இருந்தாலும், வெயிலின் உஷ்ணம் குறைந்த பிறகே வெளியில் வருகின்றனர். அந்தளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் முடிந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

    வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    மேலும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், பதநீர், மோர், பழவகைகள் போன்ற குளிர்ச்சியான ஆகாரங்க ளை உணவாக எடுத்து கொண்டு வருகி ன்றனர்.

    இதுகுறித்து கோவையை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:-

    வருடா வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது வெயில் தாக்கம் அதிகமாகி வருவது இயற்கை. ஆனால் இந்த வருடம் மிகவும் அதிகமாக உள்ளது.

    வீட்டில் மின்விசிறி இல்லாமல் உட்கார முடியாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினால் கூட வெப்ப காற்று தான் வருகிறது.

    இதனை தவிர்த்து மொட்டை மாடியில் படுத்தால் கூட வெப்ப காற்று தான் வீசுகிறது. அவ்வப்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.

    ஆனாலும் அது ஒரு சில நாட்கள் தான். மீதி அனைத்து நாட்களிலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்ப ட்டு வருகிறோம்.

    கடும் வெயில் காரணமாக குழந்தைகளுக்கு வியர்வை வேர்த்து ஊற்றுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது. கடும் வெயில் காரணமாக தினமும் 2 நேரம் குளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் அதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற சூழ்நிலை உள்ளது. மிகவும் இக்க ட்டான சூழலில் உள்ளோம். ஆகவே விரைவில் இந்த வெயிலின் தாக்கம் குறைந்து வழக்க மான சூழ்நிலை ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லதாக சூழ்நிலை அமையும் என்று கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆரோக்கியமேரி பூச்செடிகளை நடவு செய்தார்.
    • வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கேட்டார்.

    கோவை,

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 58). இவர் அவரது வீட்டின் முன்பு பூச்செடிகளை நடவு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி விவரங்களைக் கேட்டார்.

    இதையடுத்து அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொ ண்டிருந்த அந்த வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்டார். உடனே ஆரோக்கியமேரியும் வீட்டுக்கு ள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார்.

    இதையடுத்து அந்த வாலிபர் தண்ணீரை வாங்கி குடித்தார். அதன்பின்னர், ஆரோக்கியமேரி வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொ டர்ந்து சென்ற வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பீளமேடு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகையை பறித்து சென்ற வாலிபர் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்று ள்ளனரா? என்றும் சோதனை செய்தனர். குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • 4 சக்கர வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
    • சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் அவிநாசி சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பீளமேடு, ஹோப் காலேஜ், சித்ரா, ஏர்போர்ட், கருமத்தம்பட்டி, அவிநாசி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் பஸ் செல்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வித மாக அவினாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை அவினாசி ரோடு மேம்பாலம் அருகே தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையில் ஹார்டுவேர்ஸ் மற்றும் லைட் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. அந்தக் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் கோவிலின் எதிரே 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் தண்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் சிக்னல் வரை வரிசையாக 4 சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் அணிவகுத்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் மற்றும் நஞ்சப்பா ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த இடத்தில் சங்கமிப்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அப்பகுதி அகலமான ரோடு ஆகும்.

    ஆயினும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. இந்த அவல நிலை மாற வேண்டுமெனில், போக்கு வரத்து போலீசார் அதனை கண்காணிக்க வேண்டும். சாலை ஓரத்தில் நிறுத்த ப்பட்டிருக்கும் வாகன ங்களை கண்டுபிடித்து அவர்க ளுக்கு அபராதம் விதிக்க வே ண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தண்டு மாரியம்மன் கோவில் எதிரே வரும்போது மிகுந்த நெரிசலை சந்திக்க வேண்டி உள்ளது. ஏனெனில் ஆங்காங்கே 4 சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இந்த அவல நிலை மாறினால் பயணம் மிகவும் ஏதுவாக இருக்கும் என்றனர்.

    • உள்ளூர் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநிலத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு.
    • பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர்

    கோவை,

    தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக கோவை உள்ளது. ஆனாலும் இங்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரை க்கொம்பாக இருக்கிறது. எனவே இங்கு உள்ள பல்வேறு தொழிற்சா லைகள், வடமாநில தொழி லாளிகளை வேலை க்கு அமர்த்தி உள்ளன.

    உள்ளூர் தொழிலா ளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநி லத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு. எனவே அவர்களுக்கு கோவை மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பொதுவாக பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர். ஆனால் சொந்த ஊருக்கு சென்றவர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்ப ட்டோர் வேலைக்கு திரும்ப வில்லை. இது கோவை மாவட்ட தொழி ற்சாலை நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்களை மீண்டும் கோவைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி தரப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான வேலைகள் அப்படியே நிற்கிறது.

    எனவே வடமாநில தொழிலாளிகள் கோவைக்கு உடனடியாக புறப்பட்டு வருவதற்கு ஏதுவாக, தொழிற்சாலைகள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக அவர்களை விமானத்தில் திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் பதிவு செ ய்யப்ப ட்டு வருகின்றன. வடமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளிகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வரவேண்டும் என்றால், ஒருவருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் செலவு பிடிக்கும். கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு, வெளிமாநில ஆர்டர்களை குறிப்பிட காலத்துக்குள் முடித்து தரவேண்டும் என்ற காலவரையறை நிர்ணயிக்க ப்பட்டு உள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் கூடுதல் செலவை கருத்தில் கொள்ளா மல் வடமாநில ங்களில் வசிக்கும் தொழி லாளர்களை விமானத்தில் மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுக ளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    ×